ஹெர்னியா பாதிப்பினைத் தவிர்க்க !

ஒரு உறுப்போ அல்லது கொழுப்பு திசுவோ சுற்றியுள்ள பலவீனப்பட்ட சதையின் மூலம் வெளியேறி வருவது ஹெர்னியா எனப்படும். இம்மாதிரி ஏற்படும் ஹெர்னியா பல பிரிவுபடும். 
ஹெர்னியா பாதிப்பு

ஹெர்னியா என்பதனை குடலிறக்கம் என்றே குறிப்பிடுகின்றனர். காரணம் மிகவும் பொதுவான குடலிறக்கம் அடிவயிற்றில் தான் ஏற்படுகின்றது. அடி வயிற்று சுவரில் ஏற்படும் பலவீனத்தால் கொழுப்பு திசு அல்லது அடி வயிற்று உறுப்புகள் வெளிவருகின்றன.
பாதிப்பினைத் தவிர்க்க

* முறையான உடற்பயிற்சி மிக அவசியம். ஆனால் அதிக பயில்வான் பயிற்சிகள், முரட்டுத்தனமான பயிற்சிகள் தேவையற்றது.

* எடையினை சரியான அளவில் வைத்திருங்கள்.

* முறையான அளவான உணவு நன்மை பயக்கும்.

* புகை பிடிப்பதனை விட்டு விடுங்கள்.

* நன்கு நீர் குடியுங்கள்.

மனிதன் என்றாலே நல்ல உணவு மற்றும் தேவையானவை களை உடலுக்குக் கொடுத்து ஆரோக்கியத்தினை பராமரிப்பது என்பது தான். 

பிறந்த குழந்தை, சிறு குழந்தைகள், வளரும் பருவம், வாலிபம், முதுமை இதற்கேற்ப உணவும், வாழ்க்கை முறையும் மாறுபடும்.

* 3 நேர உணவு முக்கியம் தான். காலை, பகல், இரவு என மூன்று வேளை உணவு அவசியம் தான். ஆனால் இரவு உணவு பெரிதாக இருக்கக் கூடாது. 

மேலும் 3 வேளை உணவினை 6 வேளையாக சிறிது, சிறிதாக பிரித்தும் உண்பது நல்லது.

* எப்பொழுதுமே முழு தானியம், பழம், காய்கறி, கொழுப்பு சத்து இல்லாத பால் இவை இருக்க வேண்டும்.

* கொழுப்பில்லாத அசைவம், முட்டை, சீன்ஸ், கொட்டைகள் அவசியம்.
* அதிக உப்பு, சர்க்கரை சேர்த்த உணவுகளை கண்டிப்பாய் ஒதுக்க வேண்டும்.

* அளவு என்பது மிக அவசியம். அள்ளி அள்ளி போட்டு நீங்களும் சாப்பிடாதீர்கள். பிறரையும் உபசரிப்பு என்ற பெயரில் கெடுக்காதீர்கள்.

* கோபமும், மனசோர்வும் மனம் போன படி சாப்பிடுவதாலும், மது குடிப்பதாலும் போகவே போகாது.

* குழந்தைகளை பாராட்டுகிறேன் என்ற பெயரில் சர்க்கரை மிகுந்த உணவுகளைக் கொடுக்காதீர்கள்.

* அதிக வெய்யிலில் விருந்து போன்ற உணவுகள் வேண்டாம்.

* சைவ உணவு உங்கள் உடல் நலனுக்காகவே அறிவுறுத்தப் படுகின்றது.
* பழங்களையும், காய்கறிகளையும் நன்கு கழுவாமல் உண்பது நோயை கை நீட்டி வரவேற்பதாகும்.

* சமைக்காத அசைவ உணவு மிக ஆபத்தானது.

* உங்கள் உடல் பருமன் உங்களுக்கு எமனாகி விடக்கூடாது.

* உழைப்பில்லாத உடம்பு இருதய நோயினையும் சில வகை புற்று நோய்களையும் கொண்டு வந்து விடும்.

உங்களுக்கு
பாதிப்பினைத் தவிர்க்க

* ஜுரம்

* ரத்த கசிவு

* சிறுநீர் செல்வதில் கடினம்

* அதிக வியர்வை

* அதிக வலி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுங்கள். உடனடி அறுவை சிகிச்சை அவசியம்.
* இக்காலத்தில் இருமல், தும்மல் இல்லாது இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

* அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் வரை கைய ருகில் ஒரு தலையணை வைத் துக்கொள்ளுங்கள்.

* இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் தலையணை வைத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் லேசாய் அழுத்திக் கொள்வது இதமாய் இருக்கும்.

* மெல்லிய பருத்தி ஆடை களை அணியுங்கள்

* மலச்சிக்கல் இல்லாதிருக்க தேவைப்படின் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
* நிமிர்ந்து நடங்கள். கூன் போடாதீர்கள்.

* கனமான பொருட்களை தூக்காதீர்கள்.
Tags: