வேலூர் கோட்டையில் வைத்து பெண்ணை நாசம் செய்த கும்பல் !

0
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. 
வேலூர் கோட்டையில் வைத்து பெண்ணை நாசம் செய்த கும்பல்


உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!

வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை..

வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. 

உள்ளூர் மக்களும் பொழுது போக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம்.

இதை தவிர, காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்து மீறல்களும் இங்கு நடப்பது தொடர்கதை யாகி விட்டது.
இந்நிலையில், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடை யில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 24.. 

தன்னுடைய காதலனுடன் இந்த கோட்டை பகுதியில் உட்கார்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காதலர்களை சூழ்ந்து கொண்டது.. 


பிறகு அந்த பெண்ணை தூக்கி சென்று கத்திமுனையில் மாறி மாறி சீரழித்தது. இறுதியில் கழுத்தில் போட்டிருந்த நகைகளையும் பறித்து கொண்டு 3 பேரும் தப்பி விட்டனர்.

வேலூர் கோட்டை பகுதியில் வைத்தே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டுள்ளார்.

இப்போது, ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பெண்ணை சீரழித்து தப்பியோடிய 3 பேரில் ஒருவரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.. மற்ற 2 பேரையும் தேடி வருகிறார்கள். 
வேலூரின் மையப் பகுதியில், வரலாற்று புகழ் வாய்ந்த கோட்டை பகுதியிலேயே உள்ளூர் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சி கலந்த வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings