மோடிக்கு எதிராகப் பேசினால் எரிக்கப்படுவீர்கள் - அமைச்சர் கொலை மிரட்டல் !

மோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப் படுவீர்கள்’- சர்ச்சையைக் கிளப்பும் உ.பி அமைச்சர்!
மோடிக்கு எதிராகப் பேசினால் எரிக்கப்படுவீர்கள்


மாணவர்களுக்கு கொலை மிரட்டல்

‘வரி செலுத்துவோரின் பணத்தில் படித்து விட்டு இன்று முதல்வர் யோகிக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகப் பேசி வருகிறார்கள்..!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரு க்கு எதிராகப் பேசுபவர்களை உயிரோடு எரிக்க வேண்டும்” என 

உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் கொலை மிரட்டல் விடுத்து சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.!
உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் ரகுராஜ் சிங் மற்றும் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ஆகியோர் கலந்து கொண்டனர்..!

அப்போது அமைச்சர் ரகுராஜ், “பொடா சட்டத்தின் கீழ் நீங்கள் எல்லோரும் சிறைக்குச் செல்லப் போகிறீர்கள். உங்கள் எதிர் காலத்துடன் விளையாடா தீர்கள்.

வரி செலுத்துவோரின் பணத்தில் படித்து விட்டு இன்று முதல்வர் யோகிக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகப் பேசி வருகிறார்கள்.

நீங்கள் எல்லோரும் உயிருடன் எரிக்கப் படுவீர்கள். இன்று மாதிரியே என்றும் மோடியும் யோகியும் ஆட்சி செலுத்துவார்கள்” எனக் குறிப்பிட்டார்..!


தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாணவர்க ளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பேசியதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
கூடுதலாக அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புப் படையினரிடம் அதிகப் படியான உரிமைகள் வழங்கப் பட்டுள்ளதாக வும் அமைச்சர் குறிப்பிட்டார்..!

மாணவர் களுக்கு கொலை மிரட்டல் விடுத்த உ.பி பாஜக அமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா..? பொருத்திருந்து பார்ப்போம்
Tags: