நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் 1-ம் தேதி தூக்கு - நாளை ஒத்திகை !

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1 ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் 1-ம் தேதி தூக்கு


அவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், ஜனாதிபதி க்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப் பட்டன.

இதற்கிடையே, நிர்பயா குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் பிப்ரவரி 1-ம் தேதி நிறை வேற்றப்பட உள்ள

தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

குற்றவாளிகள் கருணை மனு அளித்துள்ள தாலும், மனுக்கள் நிலுவையில் உள்ளதாலும் பிப்.,1 ம் தேதி அறிவித்தபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், திட்ட மிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப் படுவார்கள் என திகார் சிறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, திகார் அதிகார் ஒருவர் கூறுகையில், 2012-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 


உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஊழியரான பவன் ஜலாத் தண்டனையை நிறைவேற்ற உள்ளார். 
இதற்கான ஒத்திகை நாளை (ஜனவரி 31) திகார் சிறை வளாகத்தில் நடக்க உள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடப் படுவார்கள் என தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings