செய்வினை தகடு இருப்பதாக வீட்டிற்குள் கிணறு தோண்டிய தம்பதி !

0
சென்னை டி.பி.சத்திரம் கே.வி.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மைதிலி. கடந்த சில நாட்களுக்கு முன் ராஜாவுக்கு திடீரென கை, கால்கள் செயலிழந்தது. 
வீட்டிற்குள் கிணறு தோண்டிய தம்பதி


இதனால் அதிர்ச்சி யடைந்த மைதிலி தனது கணவரை மருத்துவ மனையில் அனுமதித்தார். அப்போது சிலர், இது மருந்து மாத்திரையால் குணமாகாது. உங்கள் வீட்டில் யாரோ செய்வினை செய்து விட்டனர். 

அதை எடுத்தால் தான் சரியாகும் என்று மைதிலியிடம் தெரிவித் துள்ளனர். அதை கேட்டு அதிர்ச்சி யடைந்த மைதிலி, தங்கசாலை பகுதியில் உள்ள மந்திரவாதி ஒருவரிடம் சென்று சம்பவங்களை கூறினார். 

அப்போது மந்திரவாதி சுரேஷ், 'உங்களுக்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்து மந்திர தகட்டை உங்கள் வீட்டின் மையப் பகுதியில் புதைத்துள்ளனர். 

அதை வீட்டில் இருந்து வெளியே எடுத்தால் மட்டுமே உன் கணவர் பழைய நிலைக்கு திரும்புவார்,' என்று தெரிவித்துள்ளார். 

இதை நம்பிய மைதிலி, மந்திரவாதி சுரேஷ் மற்றும் நெருங்கிய உறவினர்கள் 2 பேர் துணையுடன் கடந்த ஒரு மாதமாக நள்ளிரவில் தனது வீட்டிற்குள் பள்ளம் தோண்டி உள்ளார். 

அந்த மண்ணை சிறு சிறு மூட்டைகளில் கட்டி வீட்டு முன்பாக அடுக்கி வைத்துள்ளார். ஆனால், 25 அடி ஆழத்துக்கு கிணறு அளவுக்கு பள்ளம் தோண்டி யும் மந்திரவாதி கூறிய மந்திர தகடு கிடைக்க வில்லை. 


இதற்கிடையே மைதிலி வீட்டின் முன்பு திடீரென மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது பற்றி அவரிடம் கேட்டுள்ளனர்.

ஆனால், அவர் சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். ஆனால் இரவு நேரங்களில் பூஜைகள் நடந்து வந்துள்ளது. இதனால், சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி டி.பி.சந்திரம் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். 
அதன்பேரில், போலீசார் மைதிலியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் 25 அடி ஆழத்திற்கு கிணறு போன்று பள்ளம் தோண்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். 

மைதிலியை பிடித்து விசாரித்த போது, விவரம் வெளியே தெரிந்தது. இதை யடுத்து போலீசார் வீட்டிற்குள் பூஜை நடத்தி 25 அடி ஆழ கிணறு போன்ற பள்ளம் தோண்டிய மைதிலி மற்றும் 


அவரது கணவர் ராஜா அதற்கு உதவிய உறவினர்கள் 2 பேர் மற்றும் முக்கிய குற்றவாளி யான மந்திரவாதி சுரேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், இதுதொடர்பாக அமைந்தகரை தாசில்தார் வித்யா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வை யிட்டு சம்பந்தப்பட்ட மைதிலி உட்பட மந்திரவாதி சுரேசிடம் விசாரணை நடத்தி வருகிறார். 

நவீன காலத்தில் கணவரின் கை மற்றும் கால்கள் செயலிழந் ததற்கு, செய்வினையே காரணம் என்ற மந்திரவாதி யின் பேச்சை கேட்டு வீட்டிற்குள் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)