மந்திரவாதியுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி !

0
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து (51). இவரது மனைவி பூமதி (46). வெளிநாட்டில் வெல்டராக வேலை பார்த்த மணிமுத்து, 15 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். 
கணவனை கொன்ற மனைவி


செப். 28ம் தேதி இரவு மொட்டை மாடிக்கு தூங்க சென்றவர், மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். 

மணி முத்துவின் மனைவி பூமதியின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் மந்திரவாதி யுடன் சேர்ந்து கணவனை கொன்றது அம்பலமானது.
போலீசார் கூறுகையில், ''ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் மந்திரவாதி வேல் முருகன் (60). இவர், 15 ஆண்டு களுக்கு முன் மணி முத்துவிற்கு அறிமுகமானார். 

புதையல் எடுத்து தருவதாக கூறி அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து போனார். அப்போது வேல் முருகனுக்கும், பூமதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனிடையே மணிமுத்து வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார்.


இதனால், வேல் முருகனுக்கும் பூமதிக்கும் நெருக்கம் அதிகமானது. சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மணி முத்துவிற்கு, இந்த விஷயம் தெரிய வந்தது. 

இதனால் மனைவியை கண்டித்தார். ஆத்திர மடைந்த பூமதி, மந்திரவாதி யுடன் சேர்ந்து கணவனை கொன்றுள்ளார்'' என்றனர். 

இதை யடுத்து பூமதி, மந்திரவாதி வேல்முருகன், கொலைக்கு உடந்தை யாக இருந்த கூட்டாளிக ளான ராமநாதபுரம் கேகே நகர் பிரகாஷ், குமார் ஆகியோரை நேற்று காரைக்குடி போலீசார் கைது செய்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings