ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பு !





ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' அட்டை திட்டத்தை செயல் படுத்துவதற் கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. 
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்
மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன. மீதமுள்ள மாநிலங் களையும் இந்த திட்டத்தில் இணைப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல் படுத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். 

இந்த திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தி ருந்தனர். இந்த நிலையில், இந்த திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. 
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக அஸ்ஸாம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய 

மாநிலங்களி லிருந்து வேலை வாய்ப்பு மற்றும் இதர காரணங் களுக்காக 10 லட்சத்து க்கும் அதிகமான மக்கள் குடிபெயர்ந்து தமிழக நகரங்களில் வசிக்கின்றனர். 

தமிழகத்தின் மக்கள் தொகையில் 4 கோடி மக்கள் நகரங்களில் தான் வசிக்கி றார்கள். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நகரவாசி களுக்கு 50% உச்சவரம்பு என்கிற ஆபத்து இருப்பதால், தமிழகத்துக்கு குடிபெயர்ந் தவர்கள் மற்றும் 

அவர்கள் குடும்பத்தாரின் விவரங்கள் போன்றவை சரியாக இணைக்கப் படாமல், இந்த திட்டம் கவனக் குறைவாக அமல் படுத்தப்பட்டால் அது தமிழகத்தில் தற்போது இருக்கும் பொது விநியோக முறையை கடுமையாகப் பாதிக்கும்.

ஏற்கெனவே 2017-ல் அரசு வகுத்த விதிகளின்படி,

1) மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை, மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்,
2) பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங் களைப் பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
3) அனைத்து ஆதாரங்களி லிருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக உள்ள குடும்பங்கள்

குடும்ப அட்டை பெறுவதில் நீக்கம் செய்வது போன்ற பொது விநியோக முறையில் மக்களுக்கு இருக்கின்றன. 
தற்போதைய பிரச்னை களை தீர்த்து, தமிழக குடும்ப அட்டைதாரர் களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக் கொள்கிறது.

பிற மாநிலங்க ளிலிருந்து குடிபெயர்ந்த ஏழை குடும்ங்களுக்கு அளிப்பதற் கான தானியங்கள், மற்றும் அதனைச் சேமித்து வைத்து விநியோகிப்ப தற்கும் 

இத்திட்டத்தி னால் ஏற்படும் கூடுதல் செலவினை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறதா என்று தெளிவான கொள்கை முடிவுகள் இன்னும் எடுக்கப்பட வில்லை.

இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து இருக்க வேண்டிய தமிழக முதலமைச்சரும் உணவுத் துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதை யும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.
பல்வேறு உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்கிற திட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாச்சி அமைப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு திட்டம். 

இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப் படுத்துவதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)