மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட காரணம் !

மனிதனின் உடல் இயக்க த்தையும் மன இயக்க த்தையும் கட்டுப் படுத்தும் உறுப்பு மூளை. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறுப்பு பாதிக்கப்படும் போது உடல் இயக்கத்தி லும், பேசும் தன்மையிலும், சிந்தனை யாற்றல் செயலிழப்பு அல்லது செயல்படும் தன்மையில் மாறுபாடு ஏற்படுகிறது.
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட காரணம்



விபத்து, காயம், மூளை, ரத்தக்குழாயில் ஏற்படும் தாக்கம் காரணமாக மூளை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது, மூளை ரத்தக்குழாய் தெறித்து ஏற்படும் ரத்தக் கசிவே ‘ஸ்டிரோக்’ என்கிற பக்கவாதம்.
உலகில் ஒவ்வொரு 6 விநாடிக்கு ஒருவர் பக்க வாதத்தால் பாதிக்கப் படுகிறார். உலகெங்கும் ஓராண்டில் 1.5 கோடி பேர் பக்க வாதத்தால் பாதிக்கப் படுகிறார்கள். இவர்களில் 60 லட்சம் பேர் இறந்து விடுகிறார்கள்.

50 லட்சம் பேர் உடலுறுப்பு செயலிழப் புடன் வாழ்கிறார்கள். இந்தியாவில் லட்சம் பேரில் 200 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

நம் நாட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக் கப்படும் உள்நோயாளி களில் 2 சதவீதம் பேர் பக்கவாத நோயாளிகளே.

மூளை நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப் படுவர்களில் 20 சதவீதம் பேர் பக்கவாத நோய் காரணமாகச் சேர்க்கப் படுகிறார்கள். பக்கவாதம் பொதுவாக முதியவர் களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

பெருகிவரும் வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக, இளைஞர் களும் தற்போது பாதிக்கப் படுகிறார்கள். 

ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள், புகைப் பழக்கம், புகையிலை பயன் படுத்துபவர்கள், அதிகக் கொழுப்புச் சத்து உள்ளவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதவர் களுக்குப் பக்கவாதம் ஏற்படலாம்.
கை, கால், முகம் செயலிழந்து போவது



உடலில், ஒரு பகுதி திடீரென்று செயலிழப்பது கை, கால், முகம் செயலிழந்து போவது, பேச முடியாமல் போவது, திடீர் குழப்பநிலை ஏற்படுவது போன்றவை பக்க வாதத்தின் அறிகுறிகள்.
ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுகிறது என்றால், மூன்று மணியில் இருந்து 4½ மணி நேரத்தில் பாதிக்கப் பட்டவரை மருத்துவ மனையில் சேர்த்துச் சிகிச்சையை ஆரம்பித்து விட வேண்டும். 

அப்படிச் செய்தால் பக்க வாதத்தால் ஏற்படும் உயிரிழப்பு, உடல் இயக்கப் பாதிப்பைத் தடுக்கலாம். அரசு மருத்துவ மனைகளில் பக்க வாதத்தைக் கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் சிறப்பான வசதிகள் உள்ளன.

அதிக ரத்த அழுத்தமே மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவுக்குக் காரணம். எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

புகை, புகையிலை பழக்கம் உள்ளவர்கள், அந்தப் பழக்கங் களைக் கைவிட வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். தொடர்ந்து உடற் பயிற்சி செய்துவர வேண்டும். 
அதிகக் கொழுப்புச் சத்துள்ள உணவு, உப்பைக் குறைக்க வேண்டும். கோபம், மனஅழுத்தம் கூடாது. பல்லில் கறை, ஈறுகளில் சீழ்பிடிப்பது, வாய் துர்நாற்றம் உள்ளவர் களுக்கும் பக்கவாதம் வரலாம். எனவே, பல் சுத்தமும் மிக முக்கியம்.
Tags: