அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் தவறில்லை !

0
அங்கன்வாடி குழந்தை களுக்கு கழிவறையில் உணவு சமைப்பதில் தவறில்லை என அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் தவறில்லை



மத்தியப் பிரதேச மாநிலம் கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளு க்கு கழிவறையில் உணவு சமைப்பதா கவும், பாத்திரங்கள் வைக்கப் பட்டிருப்பதா கவும் புகார்கள் எழுந்தன. 

இது தொடர்பாக செய்தி தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர் இமார்த்தி தேவி கழிவறையில் சமைப்பது தவறில்லை என தெரிவித்தி ருக்கிறார்
நமது வீட்டில் குளியலறை யுடன் கழிவறை இருப்பதால் வீட்டிற்கு வரும் உறவினர்கள் வீட்டில் சாப்பிட மறுப்பார்களா என கேள்வி எழுப்பிய அவர், குளியலறை யில் பாத்திரங்கள் வைக்கலாம் என்றும், நாம் நமது வீடுகளில் பயன் படுத்தப்படாத பாத்திரங் களை அடுக்கி வைத்திருக் கிறோமே என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அங்கன் வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)