சிறுநீரகங்கள் பாதிப்படைவதை தடுக்கும் வழிமுறைகள் !





சிறுநீரகங்கள் பாதிப்படைவதை தடுக்கும் வழிமுறைகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சிறு நீரகங்கள் என்பது முதுகெலும்பு பகுதியில் உடலின் வலப்பக்கத் திலும், இடப்பக்கத்திலும் அவரை விதை வடிவில் அமைந்த உறுப்புகளாகும். 
சிறுநீரகத்தின் செயல்பாடுகள்
நெடுநாட்பட்ட சிறுநீரகக் கோளாறு என்பது சிறு நீரகத்தின் முக்கியமான தொழிலான நீரில் கரையக்கூடிய கழிவுப் பொருள்களை குருதியிலிருந்து வடித்தெடுத்து வெளியேற்றும்.

இந்த செயல்பாடு சிறிது சிறிதாக குறைந்து நெடு நாட்களுக்குப் பின் சிறு நீரகத்தின் முழுமையான செயல்திறனும் குறைவதாகும்.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்

குருதியில் அமில-கார நிலையை சமபடுத்துகிறது. குருதி அழுத்தத்தை கட்டுப் படுத்துகின்றது.

குருதியில் உள்ள யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவு கின்றது. எரித்ரோ போய்டின், ரெனின், கால் சிடிரால் என்னும் ஹார்மோனை உற்பத்திச் செய்கிறது. 
அதாவது தினமும் உடலில் உண்டாகும் நச்சுப் பொருட்களை வடி கட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்புகிறது. தேவைக்கு அதிகமான உப்புகளையும், தாது களையும் பிரிக்கிறது.

இந்தியாவில் ஏறக்குறைய 30 சதவீதம் பேர் சிறுநீர் நோயால் பாதிக்கப் படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்வது அவசியம். 
நம் உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1.5 மி.லி முதல் 2.5 மி.லி வரை சிறுநீர் பிரிகிறது.

சிறு நீரகத்தின் தொழில்கள் பாதிப்பு ஏற்படும் போது சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கி விடும் போது முற்றிலும் சிறுநீரகத்தின் செயல் பாதிப் படைகின்றது.

காரணங்கள்

தேவையான அளவு நீர் அருந்தாமை. உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்ளுதல். அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் அதிக நாட்களாக தொடர்ந்து உட் கொள்வதாலும்,

மருத்துவரின் ஆலோசனையின்றி தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதாலும், ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவு உட்கொண்டவர் களுக்கும் ஆல்கஹால் மற்றும் புகைப் பிடித்தல் பழக்கம் உடையவர் களுக்கும், 
சிறுநீரகத்தின் வடிகட்டுதல் செயல்திறன்
நாட் பட்ட சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து அதற்கான மருந்துகளை அதிக நாட்கள் தொடர்ந்து உட்கொண்டவர் களுக்கும், அடிக்கடி சிறு நீர்பாதையில் தொற்றுகள்,

சிறு நீரகக்கற்கள் உடையவர் களுக்கும், சிறு நீரக கட்டிகள் உடையவர் களுக்கும், சிறு நீரகத்தின் வடிகட்டுதல் செயல்திறன் குறைந்தவர் களுக்கும், சிறுநீரக காசநோய் உடையவர்க்கும் இதய கோளாறு உள்ளவர் களுக்கும், 

அதிகரித்த உடல்எடை உள்ளவர் களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர் களுக்கும்,

கார்டிசோல், ரெனின் மற்றும் ஆல்டோஸ்டீரான் ஹார்மோன் குறைபாடு உள்ளவர் களுக்கும், தன்னெதிர் தாக்குதல் நோய் உள்ளவர் களுக்கு அதாவது சிஸ்டமிக் லூபஸ் எரித்ரோமேட்டஸ், 
ருமாடிக் ஆர்த்ரைடிஸ் உள்ளவர் களுக்கும். கர்ப்பிணிகள் தேவையற்ற மருந்துகளை உட்கொள்வதால் அதனை தொடர்ந்து கன்ஜெனிடல் சிறுநீரகங்கள் குறைபாடு உள்ள குழந்தை களுக்கும்,

நெப்ரோடிக் சின்ட்ரோம் நோயினை தொடர்ந்தும் நாட் பட்ட சிறுநீரகங்களின் கோளாறுகள் உண்டாகின்றது.

இந்த காரணங்களை சரிசெய்வதின் மூலம் நெடு நாட்பட்ட சிறு நீரகங்களின் கோளாறுகளை தவிர்க்க முடியும்.

அறிகுறி - குணங்கள்

சிறுநீரக நோயின் முதல் அறிகுறி சிறுநீர் வெளியேறும் அளவிலும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்ற விதத்திலும் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். 
சிறுநீரக நோயின் முதல் அறிகுறி
சிறுநீர் கழிக்கும் அளவு கூடுதலாகவோ (அ) குறைவாகவோ இருக்கலாம். சிறுநீரில் புரதம் அல்லது ரத்தம் காணல். ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவுகுறைதல்.

உடலில் வீக்கம் காணல்: -

கைகள், கால்கள், முகம் இவ்விடங்களில் வீக்கம் உண்டாகும். சிறு நீரகத்தின் செயல்திறன் குறைவதால் நீர்த்தன்மை அதிகரித்து உடலில் வீக்கம் உண்டாகிறது.

ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு குறைவதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து மயக்க உணர்வு ஏற்படும்.
ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் குவிந்து கொண்டே செல்வதால் குமட்டலும் வாந்தியும் ஏற்படும். ரத்த அழுத்தம் அதி கரித்துக்காணும். தூக்க மின்மை உண்டாகும்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிதல் ஏற்படும். நுரையீரலில் நீர்மம் சேர்ந்து விடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். 

ரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்து விடுவதால் வெளிவிடும் மூச்சுக் காற்றில் கெட்ட வாடை வீசும்.

ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியாடினைன் என்னும் கழிவுகள் குவிவதால் சருமத்தில் தீவிரமான சொறிகளும், அரிப்புகளும் ஏற்படும்.

சிறு நீரகமானது எரித்ரொ பொய்டின் என்னும் ஹார்மோனை சுரப்பிக்கச் செய்கிறது. இது ரத்தச் சிவப்பணுக் களை ஆக்சிஜன் கொண்டு செல்ல உதவும். 
உடலில் வீக்கம் காணல்
எரித்ரொ பொய்டின் ஹார்மோன் அளவு குறைவதால் ரத்த சிவப்பணுக் களும் குறைந்து ரத்த சோகை ஏற்படும்.

சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப் பிடிப்பது அவசியம். இல்லை யெனில் நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டபின் அதனை குணப் படுத்துவது கடினம்.

நெடுநாட்பட்ட சிறுநீரக நோய் நிலை

நிலை-1:-சிறுநீரக பாதிப்புடன் கூடிய இயல் பான சிறுநீரக செயல்பாடு.

நிலை-2:- சிறிதளவு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு

நிலை-3:- சிறிதளவு கொஞ்சம் தீவிரமான சிறுநீரகச் செயல்பாடு

நிலை-4:- மிகத்தீவிரமான சிறுநீரக பாதிப்பு

நிலை-5:-மிகமிகத் தீவிரமான சிறுநீரக பாதிப்பு சிறுநீரகங்கள் கோளாறு அடைந்த நிலை.

சிறுநீரகங்கள் டயாலிசிஸ் (அ) டிரான்ஸ் பிளான்டேஷன் செய்யக்கூடிய நிலை.
நோய்கணிப்பு:

ரத்தப் பரிசோதனை: 

யூரியா மற்றும் கிரியாடினைன் அளவு அதிகரித்தல். ஹீமோ குளோபின் அளவு குறைதல். சிறுநீரில் புரதம் (அ) ரத்தம் கலந்து காணல். சிறு நீரகங்கள் வடிவம், சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலை.
டயாலிசிஸ்
டயாலிசிஸ்
சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிறு நீரகத்தின் பயன்பாட்டை இழந்த நோயாளி களுக்கு செயற்கை முறையில் டயாலிசிஸ் செய்யப் படுகிறது.

அதாவது நெடுநாட்பட்ட சிறுநீரக கோளாறுகளில் நிலை 4, நிலை 5, முறைகளில் உள்ளவர் களுக்கு டயாலிசிஸ் செய்யப் படுகின்றது. சிறு நீரகங்கள் உடல் நலனைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 
ஆரோக்கியமாக இருக்கும் போது சிறு நீரகங்கள் உடலின் நீர் மற்றும் கனிமங்களின் (சோடியம், பொட்டாசியம், குளோரைடு, கால்சியம், பாஸ் பரஸ், மக்னீசியம்) போன்ற வற்றை சமநிலைப் படுத்துகின்றது.

மேலும் சிறுநீரகமானது எரித்ரொ பொயட்டின் மற்றும் 1,25- டை ஹைட்ராக்சிகோல் கால்சிபெரால் ஆகியவற்றை உருவாக்கு கின்றது. எரித்ரொபொயட்டின் ரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது. 

கால்சிட்ரோல் - எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. டயாலிசிஸ் 2 வகைப்படும் அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ்.
Tags: