தூக்கத்தில் எழுந்தால் நினைவுத்திறன் பாதிப்பு ஏற்படும் !

0
தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிக்கும் என ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
தூக்கத்தில் எழுந்தால் நினைவுத்திறன் பாதிப்பு ஏற்படும் !
பகலில் நடந்த நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய இரவு நேர தூக்கத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது என பிரிட்டன் தூக்க மருத்துவ நிபுணர் நீல் ஸ்டான்லி கூறினார்.

தூக்கத்தில் அடிக்கடி எழுவதால் நினைவு பாதிப்பும் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார். பாலூட்டி வகையை சேர்ந்த எலி ஆராய்ச்சி மூலம் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து மருத்துவர் நீல் ஸ்டான்லி மேலும் கூறுகை யில், அல்சீமர் எனப்படும் நினைவு தடுமாற்ற நோய் உள்ளவர்கள் தூக்கப் பிரச்சனை க்கு ஆளாகி றார்கள். 
சரியாக தூக்கம் இல்லாத நிலையில் நினைவுத் திறன் பாதிக்கப் படுகிறதா அல்லது மூளை திறன் குறை பாட்டால் தூக்கம் குறைகிறதா என்பது தெரிய வில்லை என்றார்.

தூக்க குறை பாட்டால் நினைவு திறன் குறைவது குறித்து மருத்துவர் லூயிஸ் டே லெசா தலைமையில் ஆய்வு நடந்தது.
லூயிஸ் இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: 

தூக்கம் தொடர்ந்து சீராக இல்லாத பட்சத்தில் மறதி உள்பட நோய்கள் ஏற்படுகின்றன. தூக்க பாதிப்பு உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத் திற்கும் ஆளாகிறார்கள்.

நினைவுத் திறன் சீராக குறைந்த பட்ச சீரான தூக்கம் தேவை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)