கௌசல்யா மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள் !

0
சாதி ஒழிப்புப் போராளி யாக வலம் வந்து கொண்டிரு க்கும் உடுமலை கெளசல்யா, இன்று மறுமணம் செய்து கொண்டார்.


உடுமலைப் பேட்டை சங்கர் கெளசல்யாவை அத்தனை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. 

தன் காதல் கணவரைப் பறிகொடுத்து சாதி ஆணவ கொலைக்கு நேரடி சாட்சியாக கெளசல்யா வாழ்ந்து வருகிறார். 

சங்கரின் கொலை க்குப் பின்னர் சாதி ஒழிப்புப் போராளி யாக தமிழகம் முழுவதும் 

சுற்றுப் பயணம் மேற்கொண்டு, சாதிக்கு எதிராக அழுத்த மாகக் குரல் கொடுத்து வருகிறார். 

ஆணவக் கொலைக்கு எதிராகத் தனது உறவினர் களுக்கே தண்டனை பெற்றுக் கொடுத்தவர் கெளசல்யா. 

சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்ட ளையை நிறுவி, அதனைக் கவனித்து வருகிறார்.

இந்நிலை யில், இன்று கோவை பெரியார் படிப்பகத்தில் அவருக்கு இரண்டாவது திருமணம், நெருங்கிய நண்பர்கள் மத்தியில் நடை பெற்றது. 


கெளசல்யா `நிமிர்வு கலையகத்தின் ஒருங்கி ணைப்பாளர் சக்தியை திருமணம் செய்து கொண்டார். 

இவரிடம் தான் கெளசல்யா பறை இசைக் கலையை கற்றார். 

இந்த திருமண த்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிறுவனர் கொளத்தூர் மணி, 

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராம கிருட்டினன்,  

வன்னி அரசு மற்றும் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில் தம்பதிகள் இருவரும் உறுதி மொழி ஏற்று தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings