அசாமில் நேற்றிரவு 7 கோவில்களில் கொள்ளை !

0
அசாமில் கம்ரூப் (நகரம்) மாவட்டத்தில் சுவால்கச்சி நகரில் 100 ஆண்டுகள் பழமையான சித்தேஸ்வர் தேவாலயா என்ற கோவில் உள்ளது. 


நேற்றிரவு இங்கு வந்த திருடர்கள் 2 பழமையான சிலைகள் மற்றும் கோவிலில்

இருந்த விலை மதிப்புமிக்க பொருட்களை கொள்ளை யடித்து சென்றுள்ளனர். 

இதே போன்று கவுகாத்தி நகரில் மலிகாவன் பகுதியில் அருகருகே உள்ள 5 கோவில்களில் நேற்றிரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 

கோவிலின் நன்கொடை பெட்டியில் இருந்த பணம் மற்றும் பிற விலைமதிப்பு மிக்க பொருட்களை திருடர்கள் கொள்ளை யடித்து தப்பி சென்றுள்ளனர். 


இதே போன்று நகாவன் மாவட்டத்தில் ரந்தாலி நகரில் உள்ள கோவிலில் இருந்தும் 

சிலைகள் மற்றும் பிற விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளை யர்கள் திருடி சென்றுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)