144 மற்றும் ஊரடங்கு உத்தரவு - ஒரு அலசல் !

0
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம், நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில், 
நெருப்பை மூடுவது
சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டி வீரன் நினைவு தினம், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் உள்ள 

வீரன் சுந்தரலிங்கனாரின் பிறந்த தின கொண்டாட்டம், தூத்துக் குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் என 

அறவழி போராட்டம் மற்றும் நடை பயணத்திற்கே தடை விதிக்கும் இந்நேரத்தில் 144 - தடை யுத்தரவைப் பற்றி சற்று காண்போம்.

ஊரடங்கு உத்தரவு (curfew) சொல் பயன்பாடு...

பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்கு களையும், மெழுகுதிரி களையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. 

இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக இடைக்கால ஆங்கிலத் திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப் பட்டது. 

பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப் பட்டன.
ஊரடங்கு உத்தரவு எனில், காவல் துறையினர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பொது மக்கள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். 

என்பது விதிமுறை. இந்த விதிமுறைகள் வன்முறைக் காலகட்டங்களில் நிலைமை களைக் சமாளிக்கவும், 

சீரமைக்கவும் மிக உதவியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு கால கட்டங்களில் முன்னதாக போலீஸ் அனுமதி யின்றி மக்கள் நடமாடவோ, 
வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப் படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப் படுகின்றன, சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.

144 தடை உத்தரவு-144 வது சட்ட பிரிவு என்ன சொல்கிறது?

1861-ஆம் ஆண்டில் ராஜ்-ரத்னா E.F. டீபோ (Raj-Ratna E.F. Deboo IPS ) என்ற காவல் அதிகாரியே 144-வது பிரிவின் வடிவமைப் பாளர் ஆவார், 

அதன் மூலம் பரோடா மாநிலத்தில் அந்த நேரத்தில் மொத்தக் குற்றங் களைக் குறைத்தார்

குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 144. தொல்லை அல்லது எதிர் பார்க்கப்படுகிற அபாயம் ஆகிய அவசர நிலைகளில் உத்தரவு பிறப்பிப் பதற்குள்ள அதிகாரம்

(1) மாவட்ட நடுவர் (District magistrate/ District Collector), உட்கோட்ட நடுவர் (Additional District magistrate/ District Revenue Officerr 

அல்லது மாநில அரசால் இதற்கெனச் சிறப்பு வகையில் அதிகார மளிக்கப்பட்ட வெறெந்த நிர்வாகத் துறை நடுவரின் கருத்தின்படி, 

இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள் வதற்குப் போதுமான காரணம் இருந்து, 

உடனடியாக தடையோ, விரைவான பரிகாரமோ விரும்பத் தக்கதாக வுள்ள நிலைகளில் அத்தகைய நடுவர் வழக்கிற்கு 

முக்கிய மானவையாக உள்ள சங்கதிகளைக் குறிப்பிட்டு 134 வது பிரிவின் படி சார்வு செய்யப்படும் எழுத்து வடிவத்தி னாலான ஒரு கட்டளை மூலமாக 

ஒருவரது அனு போகத்தில் அல்லது அவரது ஆளுகையில் உள்ள குறிப்பிட்ட சொத்தைப் பொறுத்து குறிப்பிட்ட செயலைத் தவிர்க்குமாறு, 

அல்லது குறிப்பிட்ட உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, அவருக்கு உத்தர விடுவதானது,
  144 வது பிரிவு நோக்கம்
சட்ட பூர்வமாக வேலை செய்து வருகிற எவருக்கும் ஏற்படும் இடையூறு, தொந்தரவு 

அல்லது கேட்டையோ, மனித உயிர், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயத்தையோ, 

பொது அமைதிக்கு ஏற்படும் பங்கம், அல்லது கலகம் அல்லது சச்சரவையோ தடுக்கக் கூடும் 

என்று எண்ணு வாரானால் அத்தகைய நடுவர் அவ்வாறே அத்தகை யவருக்கு உத்தர விடலாம்.

(2) இந்தப் பிரிவின் படியான கட்டளை ஒன்று நெருக்கடி நிலைகளிலும், அல்லது எவருக் கெதிராகக் 

கட்டளை குறிப்பிட்டனுப்பப் படுகிறதோ அவருக்கு முன்னறிவிப்பை, உரிய காலத்தில் 

சார்வு செய்வதற்குச் சூழ்நிலைகள் இடங்கொடாத சந்தர்ப்பங் களிலும் அவர் இல்லாமலேயே பிறப்பிக்கப் படலாம்.
(3) இந்தப் பிரிவின் படியான கட்டளை யொன்று, குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட இடம் 

அல்லது குறிப்பிட்ட அப்பகுதியில் அடிக்கடி வந்து போகிற அல்லது பார்க்க வருகிற பொது மக்களுக்கு பொதுவாகக் குறிப்பிட்டு அனுப்பலாம்.
(4) இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப் பட்ட கட்டளை எதுவும் அது பிறப்பிக்கப் பட்டதி லிருந்து இரண்டு மாதங் களுக்கு மேல் அமலில் இருத்தல் கூடாது.

வரம்புரையாக, மனித உயிருக்கோ, ஆரோக்கி யத்திற்கோ ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற் காகாகவோ, 

கலகம் அல்லது சச்சரவு எதையும் தடுப்பதற் காகவோ, அவ்வாறு செய்வது அவசியமென மாநில அரசாங்கம் எண்ணு மானால், 

அது அறிவிப்பு மூலமாக, இந்தப் பிரிவின் படி நடுவரால் பிறபிக்கப்பட்ட ஒரு கட்டளை யானது மாநில அரசின் கட்டளை யில்லாதிருப்பின் 

எந்தத் தேதியில் முடிவடைந் திருக்குமோ அந்தத் தேதி யிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேற்படாது 

மேற்சொன்ன அறிவிப்பில் அரசு குறிப்பிட லாகும் கால அளவுக்கு அந்தக் கட்டளை அமலில் இருக்க வேண்டுமென உத்தர விடலாம்.

(5) நடுவர் எவரும் தம்மாலோ, தமக்குக் கீழமைந்துள்ள நடுவராலோ அல்லது தமக்கு முன் பிருந்தவராலோ பிறப்பிக்கப் பட்ட கட்டளை எதையும் முன்வந்தோ 

அல்லது அக்கட்டளை யால் பாதிக்கப் பட்டவரின் விண்ணப் பத்தின் பெயரில் ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்
(6) மாநில அரசாங்கம், 4-வது உட்பிரிவின் வரையத்தின்படி தான் பிறப்பித்த கட்டளை எதையும் தானே முன்வந்தோ 

அல்லது இந்தக் கட்டளையால் பாதிக்கப் பட்டவரின் விண்ணப் பத்தின் பேரிலோ ரத்து செய்யலாம்.
(7) (5) ஆவது உட்பிரிவு அல்லது (6)-வது உட்பிரிவின்படி விண்ணப்ப மொன்று கிடைக்கப் பெற்றதும், நிலவரத்திற் கேற்ப, நடுவரோ 

அல்லது மாநில அரசாங்கமோ, தம்முன் நேர்முகமாக அல்லது வாதுரைஞர் மூலமாக 

அந்தக் கட்டளையை எதிர்த்துக் காரணம் சொல்வதற்கு வாய்ப்பினை விண்ணப்ப தாரருக்கு அளித்தல் வேண்டும், 

மற்றும் நிலவரத் திற்கேற்ப நடுவரோ அல்லது மாநில அரசோ அவ்விண்ணப் பத்தை, முழுவதுமோ 

ஒரு பகுதியையோ நிராகரிப் பாரானால் அவர் அல்லது அது அவ்வாறு செய்வதற் கான காரணங் களை எழுத்து மூலம் பதிவு செய்தல் வேண்டும்.

144 வது பிரிவு நோக்கம்

இந்த பிரிவை அமல் படுத்தும் முன்பாக மனதில் கொள்ளப்பட வேண்டிய கோட்பாடுகள் மஞ்சுர் ஹசன் Vs முஹம்மத் ஜமான் 
144 மீறினால் தண்டனை
மற்றும் ஷேக் பிர் பக்ஸ் Vs வால்கால்டி பட்டி வழக்கில் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஆச்சார்யா ஜக்திஷரநந்தன் அவதத் Vs போலிஸ் ஆணையாளர்

பிரிவு 144 ன் நியாயமான பயன் பாட்டிற்கான விதி முறைகளைப் பற்றி விவரிக்கின்றது

1. பயமுறுத்தல்

2. மனித வாழ்க்கைக்கு பங்கம்

3. பொது அமைதிக்கு இடையூறு

4. ஒரு தரப்பினருக்கு அனுகூலத்தை வழங்குவதற்காக செய்ய முடியாது

தலைமை நீதிபதி ஹிந்துதல்லாஹ், குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவு ஒழுங்காக பயன் படுத்தப்படும் என்றால் 

அது அரசிய லமைப்புக்கு எதிரானது அல்ல என்றும் அரசிய லமைப்பில் வரை யறுக்கப்பட்ட சுதந்திரத்தை கட்டுப் படுத்துவது என்பது 

குற்றவியல் நடைமுறைக் கோட்பாட்டில் 144 வது பிரிவின் கீழ் செல்லு படியாகும் என்றும் அது அரசிய லமைப்புக்குட் பட்டதே என்றும் கூறினார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படும் சந்தர்ப்பங்கள்

இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன் பாதுகாப்பு போன்றவை பிரிவு 144 ஆணை உரிய முறையில் வெளியிடப்பட வேண்டும்

இந்தப்பிரிவின் படி வெளி யிடப்படும் தடையாணை, பிரிவு 134ல் உள்ளபடி வெளியிடப்பட வேண்டும் எனக் கூறுகிறது குற்றவியல் நடை முறைச் சட்டம்.

பிரிவு 134 என்ன கூறுகிறது ?

(1) இந்த ஆணை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
(2) அப்படி சாத்தியம் இல்லாத பட்சத்தில், இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலம், மாநில அரசு வெளியிடும் விதிகளின் படி, 

சம்பந்தப் பட்ட நபர்களுக்கு தெரியும் விதத்தில் பொது இடத்தில் ஒட்டப் படுவதன் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், 

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரும் வாகனங்கள், 
சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகிய வற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப் படுகிறது.

மீறினால் தண்டனை என்ன ?

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188. பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப் பட்ட கட்டளை க்குக் கீழ்ப்படியாமை:-

இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படை யில் தண்டனை விதிக்கப்படும். 

தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்து வோருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதாரக் கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்து போனால் 

அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

காவல் துறையின் கடமைகள்

Police Standing Order PSO No 703 Sec 6 (பி) இன் படி துப்பாக்கி சூடு, தடியடி போன்ற நிகழ்வுக்கு பின்னர் 
காவல் துறை உடனடியாக காயம் பட்டவர் களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கவும், 
காயம் பட்டவர் களை உடனடி யாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Police Standing Order PSO No 705 உட்பிரிவு (எப்) ன் படி கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடத்தில் 

அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் ஒன்றும் முதலுதவி பெட்டகம் ஒன்றும் நிறுத்தி வைக்க வேண்டும். 

ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைப்பதால் கலவரக் காரர்கள் மனதில் அமைதி ஏற்பட வழி வகுக்கும்

144 தடை உத்தரவு முதல்வரை கட்டுப் படுத்துமா?

அவரைக் கட்டுப் படுத்தாது. சட்டத்தை போடும் இறையாண்மை கொண்ட முதல்வருக்கு பொருந்தாது. 

144 தடை உத்தரவை போடுவதே அரசு தானே? 144 போட்டால் 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்று கூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாட கூடாது. 

அப்படி யானால் 4 போலீஸுக்கு மேல் அங்கு நடமாடாமல் இருப்பார்களா? 

அதைக் கட்டுப் படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் போலீஸார் தானே? நூற்றுக் கணக்கில் போலீஸார் அங்கு போகிறார்களே?

144 தேவையா..?
144 தேவையா
தூக்குத் தண்டணையே தேவை யில்லை என்ற வாதங்கள் இருக்கும் பொழுது, 144 தடை யுத்தரவு தேவையா? என்பதும் வாதத்திற்குரியதே. 

இத்தடை யுத்தரவு பெரும்பாலும் பொது மக்களின் அறப் போராட்டங் களுக்குகே தடை போடப் படுகிறது என்பதும், 
அதனால் மக்கள் படும் துயரங் களைப் பார்க்கும் பொழுது சுதந்திரம் கிடைத்து விட்டதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)