வால்வோவின் பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

ஸ்டைலுக்கு ரஜினி, நடிப்புக்கு கமல், டான்ஸுக்கு விஜய், ரேஸுக்கு அஜித் என தமிழ் நாட்டில் ஒரு நடிகரைப் பற்றிக் கேட்டால் எப்படிச் சொல் வார்களோ, 

அதே போல உலகின் எந்தத் திசைக்குப் போய் கேட்டாலும் `வால்வோ, பாதுகாப்பான கார்' என்று சொல்வார்கள். 

உண்மையோ, பொய்யோ... இப்படி ஒரு பிம்பம் உருவாவ தற்கும், அது 50 ஆண்டு களைக் கடந்து நிலைப்ப தற்கும் ஒரு காரணம் இருக்கும் தானே!

வால்வோ

இந்தக் கதை ஆரம்பிக்கும் இடம் ஸ்வீடன், 1950-ம் ஆண்டு. கார்கள், மனித உயிர்க் கொல்லிகள் போல பார்க்கப்பட்ட காலம் அது. 
ஸ்வீடன், டென்மார்க், நார்வே போன்ற நாடுகளுக்கு மின்சாரம் வழங்கிக் கொண்டிருந்த `வாட்டன்ஃபால்' எனும் நிறுவனம், 


தங்கள் ஊழியர்கள் தொடர்ந்து உயிரிழப் பதைத் தடுக்கும் வகையில் நிறுவனத்தில் பாதுகாப்பு நடவடி க்கைகள் மேற்கொள்வது எப்படி என ஓர் ஆராய்ச்சியைத் தொடங்கியது. 

இந்த வேலை Bengt Odelgard மற்றும் Per-Olof Weman இருவரிடமும் கொடுக்கப் படுகிறது. 

இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அனை வருக்குமே ஆச்சர்ய மான அதிர்ச்சியைக் கொடுப்ப தாக இருந்தது.

`வாட்டன்ஃபால் ஊழியர்கள் அதிகம் இறப்பது, அதிக அழுத்தம் கொண்ட மின்சாரத் தினாலோ, வொயர்கள் ஷார்ட் சர்க்யூட் ஆவதினாலோ அல்ல. 
வேலைக்கு வரும் வழியிலோ அல்லது வேலை நேரத்திலோ நிகழும் கார் விபத்தினால் தான்' என்பது ஆராய்ச்சியின் முடிவு. 

அப்படி யென்றால், கார்களை இன்னும் பாது காப்பானதாக மாற்றினால் இந்த உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று 
அந்த நாட்டு கார் நிறுவனங் களான வால்வோ மற்றும் சாப்-க்கு இருவரும் சில பரிந்துரைகளை அனுப்பு கிறார்கள்.

கார் சேஸி

சாப் நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவில் ஃபிளைட் எஜெக்டர் சீட் தயாரிக்கும் 


வேலையில் இருந்த நிள்ஸ் போலின், வால்வோ நிறுவனத்தில் இணைந்த காலம் அது. 

இந்தப் பரிந்துரை களை ஏற்ற போலின், கார்கள் மூலம் நிகழும் விபத்துகளை ஆராய்ந்தார். 
அந்தக் காலத்தில் 20 கி.மீ வேகத்தில் மோதினால் கூட மரணம் தான் என்ற நிலையைப் பார்த்து, 

முதல் முறையாக 3-பாயின்ட் சீட் பெல்ட்டை உருவாக்கி, உலகத்துக்கு அறிமுகப் படுத்தினார். 

இந்த சீட்பெல்ட் தொழில் நுட்பத்தைத் தான் நாம் இன்று வரை எல்லா கார்களி லுமே பயன்படுத்தி வருகிறோம். 

அதுவரை இருந்த சீட்பெல்ட் அனைத்துமே இதன் அளவுக்கு உபயோகிக்க சுலப மாகவும், எல்லா கார்களிலுமே பொருத்தும் படியாகவும் இல்லை. 
நிள்ஸ் போலினின் சீட்பெல்ட், 60 கி.மீ வேகத்தில் நடைபெறும் விபத்துகளில் கூட உயிரிழப்புகள் நிகழாமல் பாதுகாத்தது.

சீட் பெல்ட் கண்டுபிடித்த நிள்ஸ் போலின்

இந்தக் கண்டு பிடிப்பு, வால்வோ கார்களின் விற்பனையை ஏக போக மாக்கி யிருக்கும். 

ஆனால், பணத்தை விடப் பாதுகாப்பை மதித்து சீட் பெல்ட்டுக் கான காப்புரிமையை இலவச மாக்கினார்கள். 

இந்த முடிவால் தான், நாம் இன்று வால்வோவில் மட்டுமல்ல எல்லா கார்களிலுமே பாதுகாப்பாகப் பயணிக் கிறோம். 

சீட்பெல்ட், 2009-ம் ஆண்டில் மட்டுமே 10 லட்சம் உயிர்களைக் காத்ததாக அமெரிக்கா வின் கணிப்பு தெரிவிக்கிறது. 

உலகம் முழுவதும் பல கோடி உயிரிழப்பு களை நிச்சயம் தடுத்திருக்கும். 
இது மட்டுமல்ல, வால்வோ வின் இமேஜுக்குக் காரணம் உலகில் உள்ள மற்ற கார் நிறுவனங் களை விட பயங்கர மானதாக இருக்கும் 

வால்வோ வின் க்ராஷ் டெஸ்ட். எட்டு ஏர்பேக், blindspot camera, 360 டிகிரி கேமரா, டிரைவர் அலெர்ட் கன்ட்ரோல், ரேடார் தொழில் நுட்பம், lane control, EBS 
போன்ற தொழில் நுட்பங்களை எல்லாம் பல ஆண்டு களுக்கு முன்பே தனது கார்களில் கட்டாய மாக்கியது வால்வோ. 

இரண்டு ஏர் பேக்கை எல்லா வேரியன்டிலும் கொடுப்ப தற்கே நம் நாட்டு கார் நிறுவனங்கள் தயாராக இல்லை. 

ஆனால், வால்வோ கார்களில் காரின் மீது மோதும் பாதசாரிக்கு கூட அடி படாமல் இருக்க பானட்டில் ஏர்பேக் வைத்து ள்ளார்கள். 

இந்த நிறுவனத்தின் கொள்கையே வால்வோ காரில் பயணிக்கும் யாரும் மரணிக்கக் கூடாது என்பது தான். 
2020-க்குள் இந்த கொள்கையை நிறைவேற்ற பல திட்டங் களுடன் இயங்கிக் கொண்டிருக் கிறது. 

ஸ்வீடனில் ஒரு வால்வோ கார் விபத்தில் சிக்கினால், வால்வோ நிறுவனத்தி லிருந்து 24 மணி நேரத்தில் 

ஒரு குழு வந்து விபத்தான காரைப் பரிசோதித்து, அந்த கார் விபத்தின் தகவல்களை எடுத்துக் கொள்வார்கள். 

இதை வைத்து அடுத்த தலை முறை காரை எப்படி இது போன்ற விபத்தி லிருந்து காப்பது என்று தீர்வை யோசிக்கிறதாம் வால்வோ. 

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களு க்கும், புதிய அதிவேக கார்களு க்கும் இடையில் வால்வோவின் இந்தப் பிம்பத்தைப் பாதுகாப்பது சாதாரண விஷய மல்ல. 

ஆனால், இந்தப் பிம்பம் தான் இந்த நிறுவன கார்கள் விற்பனை யாவதற்கு மிக முக்கியக் காரணம். 
உண்மையோ, பொய்யோ, வால்வோவின் இந்தக் பிம்பத்தை உடைப்பதும், இதுபோல ஒன்றை உருவாக்கு வதும் எரி மலையைக் குடைந்து வைரம் எடுப்பதற்குச் சமம்!
Tags: