பருவமழை எப்போது? வானிலை மையம் !

0
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தான் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
பருவமழை எப்போது? வானிலை மையம் !
தமிழக த்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை அதிக மாகவே பெய்துள்ளது. இதனால் தமிழக த்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி யுள்ளன.

அதே நேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில ங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் தமிழக த்திற்கு நீர்வரத்தும் அதிகரித் துள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி கடந்த ஆண்டு தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் பெரும் வறட்சி ஏற்பட்டது.

இதனால் விவசாயம் செய்ய முடியாமல் 100க்கும் மேற்பட்ட விவசாயி கள் தற்கொலை செய்து கொண்டனர்.

மழை பெய்யுமா?

சென்னை, வேலூர், தருமபுரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்ட ங்களில் கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட தால் மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு தெரு தெருவாக அலைந் தனர்.

இதைத் தொடர்ந்து இந்தாண் டாவது பருவமழை பெய்யுமா என்ற எதிர்ப் பார்ப்பு மக்களிடையே அதிகரித் துள்ளது.
வட கிழக்குப் பருவமழை

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தி யாளர்களிடம் பேசினார்.

அப்போது தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பின்னர் தான் தொடங்கும் என தெரிவித்தார்.

வலுவிழந்தால்

தென்மேற்கு பருவமழை இன்னும் நீடிப்ப தாகவும் பாலச் சந்திரன் கூறினார். தென்மேற்கு பருவமழை வலு விழந்தால் மட்டுமே வட கிழக்குப் பருவமழை தொடங்கும் என்றார்.

2 நாட்களு க்கு மழை

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த 2 நாட்களு க்கு மழை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். மத்திய வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்ற ழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாக அவர் கூறினார்.

தாழ்வு மண்டலம்

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்ற ழுத்த தாழ்வுப்பகுதி காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது.

இதனால் தமிழக த்தின் டெல்டா மாவட்ட ங்கள் மற்றும் வட தமிழக த்தில் மழை பெய்யும் என்றும் அவர் தெரி வித்தார்.
சென்னை யில் மழை

2 நாட்களு க்குப் பிறகு தமிழக த்தில் படிப்படி யாக மழை குறையும் என்றும் அவர் கூறினார். சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத் துடன் காணப் படும் என்றும் ஓரிரு இடங் களில்

மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச் சந்திரன் தெரி வித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings