கொச்சி ராஜாவின் கதை !

கேரளத்தில் தென்னிந்தி யாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நான்கு மாத விசாரணைக்குப் பிறகு மலையாளத்தின்
கொச்சி ராஜாவின் கதை !
சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த நாளிலிருந்து மலையாளத்தின் பத்திரிகைகள், செய்தித் தொலைக் காட்சிகள் ஆகிய வற்றில் சந்தேகிக் கப்பட்ட ஒரு பெயர் திலீப்.

ஆனால், திலீபின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் திட்டமிட்ட சதி இது என திலீப் தரப்பி லிருந்து இதற்கு விளக்கம் தரப்பட்டது. அவரே மலையாளத்தின் முன்ன ணித் தொலைக் காட்சிக ளில் தோன்றி இதற்கு விளக்கம் கொடுத்தார். 

இதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங் களுக்கு முன்பு கூடிய மலையாள நடிகர் சங்க மான ‘அம்மா’, பாதிக்கப் பட்ட அதன் உறுப்பினரான நடிகைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாக, 

அதன் தலை மகனைப் போல் செயல்பட்ட திலீப்புக்காகப் பத்திரிகை யாளர் களை விமர்சித்ததன் விளை வாகச் சங்கம் பிளவுபட்டது.

யார் இந்த திலீப்?
1990-களில் மிமிக்ரி மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்த திலீப், உதவி இயக்குநர், நகைச் சுவை நடிகர் எனப் படிப்படியாக முன்னேறி ‘ஜனப்பிரிய நாயகனாக’ ஆனவர். 

மோகன் லாலும் மம்மூட்டி யும் கோலோச்சிக் கொண்டிருந்த மலையாளத் திரையுலகில் அவர்களுடன் நடித்து அவர்களையே மிஞ்சிய திரு உருவாகத் தன்னை மாற்றிக் கொண்டார். 

மம்மூட்டி, மோகன் லால் ஆகியோரைப் போல் ஒரு நடிகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோடு நில்லாமல், அதிகார மையமாக ஆக முயன்றவர் திலீப்.

‘அம்மா’ சங்கம் கடும் பொருளாதார நெருக் கடியில் இருந்த போது, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு ‘டுவண்டி டுவண்டி’ என்னும் 

படத்தைத் தயாரித்து, தேவைக்கு அதிகமாக அம்மாவுக்கு நிதி திரட்டித் தந்தார். அதன் மூலம் அம்மாவின் பொருளாளரானார். 

மலையாள சினிமாவை நெருக்கடிக் குள்ளாக்கிய திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தனது  முயற்சியால் முடிவுக்குக் கொண்டு வந்து, 

64 திரையரங்க உரிமையாளர்களை ஒன்று திரட்டிப் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைவரானார்.
மலையாளத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தையும் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் கூடத் தனக்குச் சாதகமாகத் திருப்பினார் என்ற முணுமுணுப்பு எழுந்தது. 

இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு ராஜாவைப் போல மலையாள சினிமாவின் சகலத் துறைகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து ‘கொச்சி ராஜா’ ஆனார் என்று கூறப்பட்டது. 

இதனால் திலீப்பின் தயவு இல்லாமல் மலையாள சினிமா வில் யாரும் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்ட தாக பத்திரி கைகள் எழுதின. 

என்றாலும் மோகன் லாலும் மம்மூட்டியும் கூட திலீப்பை எதிர்த்துக் கருத்து கூறத் தயங்கிய தாகச் சொல்லப் பட்டது. 

இந்த மித மிஞ்சிய செல்வாக்கு காரண மாக, தனக்குப் பிடிக்காத நடிகரை, நடிகையை, இயக்கு நரை, தயாரிப் பாளரை, விநியோக ஸ்தரை அவரால் எளிதாக வீழ்த்த முடிந்த தாக மலை யாளப் படவு லகில் புலம் பல்கள் கேட்கத் தொடங்கின.

அதிகார துஷ்பிரயோகமா?
இந்தப் படத்தை வாங்குங்கள், இதை வாங்காதீர்கள் என, விநியோ கஸ்தர்களி டம் திலீப் நெருக்கடி கொடுத்தாகவும் ஆசிக் அபு உள்ளிட்ட மலையா ளத்தின் இளம் இயக்கு நர்கள் பகிரங்கமாகச் சொல்லி யிருக்கிறார்கள். 

மலையாளத்தின் மூத்த நடிகரான மறைந்த திலகன், திலீப்பின் உத்தர வால் வாய்ப்புகளை இழந்த தாகப் பகிரங்கமாக அறிவித்தார். ‘திலீப் தனது எதிரி’ என அவர் ஒரு நேர் காணலில் சொன்னார். 

நடிகை பாவனா வும் இதே குற்றச் சாட்டை முன் வைத்தார். ரீமா கலிங்கல் உள்ளிட்ட வேறு சில நடிகைக ளுக்கும் இந்த நிலை ஏற்பட்ட தாகச் சொல்லப் படுகிறது. 

தேசிய விருது பெற்ற இயக்குநர் வினயனும் திலீப்பால் மலையாள சினிமாவி லிருந்து வெளி யேற்றப்ப ட்டதாகத் தெரிகிறது.

திலீப் தனது ராஜாங் கத்தை நடத்தி வந்த சமயத் தில், ‘அம்மா’ சங்கம் இதை வேடிக்கை பார்த்து வந்தது. அதன் உறுப்பினர்களான அஜூ வர்கீஸ், சலீம் குமார், 

திலீப் உள்ளிட்ட நடிகர்கள், குறிப்பிட்ட நடிகை யின் பெயரைக் குறிப் பிட்டு விமர்சி த்துச் சமூக வலைத் தளங்க ளில் கருத்துத் தெரிவி த்திருந்தனர். 
மேலும், ‘அம்மா’வில் பிரதான அங்கம் வகிக்கும் இடது முன்னணி நாடாளு மன்ற உறுப்பினரான இன்ன சண்ட், இடது முன்னணி சட்டமன்ற உறுப்பின ர்களான 

முகேஷ், கணேஷ் குமார் உள்ளிட்ட பலரும் திலீப்புக்கு ஆதரவாகப் பத்திரிகை யாளர் சந்திப்பில் வெகுண் டெழுந்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார் களான மோகன் லாலும் மம்மூட்டி யும் மவுனம் சாதித்தனர்.

அஞ்சு பைசா ஜனநாயகம்

இந்தப் பின்ன ணியில் தான் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் நடவடிக் கைகள் பொது வெளியில் விமர்ச னத்துக்கு உள்ளானது. 

அதுவரை தனிப் பட்ட ஒரு சங்கத்தின் நடவடி க்கையாகப் பார்க்கப் பட்ட ‘அம்மா’ வின் செயல் பாட்டை அரசியல் தலை வர்கள் விமர்சி க்கத் தொடங் கினர். 

அம்மாவைக் கலைக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னி தலா கூறினார். 

‘அம்மா’ செயல் பாட்டுக்கு எதிராகப் பல பெண்கள் அமைப் புகள் போராட்ட ங்களை நடத்தின. மலையாள மக் களின் அபிமான நட்சத் திரங்கள் அவமானங் களாகப் பார்க்கப் பட்டனர்.
இவ்வளவு க்குப் பிறகும் மலையாள நடிகர் களின் நலனுக் காகத் தொடங்கப் பட்ட அம்மா தனது உறுப்பி னரான, பாதிக்கப் பட்ட நடிகை க்கு எதிராகக் கருத்துச் சொன்ன உறுப்பினர் களுக்கு எதிராக எந்த நடவடி க்கையும் எடுக்க வில்லை. 

இதுவரை தங்கள் சொந்த நலன் பாதிக்கப் படும் என்பதால் வாய் திறக் காமல் இருந்த திரைத் துறை யினரும் தங்கள் மவுனம் கலைத் தனர். 

அஞ்சு பைசா ஜனநாயகம் கூட ‘அம்மா’வில் கிடையாது என ஆசிக் அபு வெளிப் படையாக விமர்சி த்தார். ஆசிப் அலி, ரீமா கலிங்கல், பிருத்விராஜ், ரம்யா நம்பீசன் போன்ற பலரும் வெளிப்படையாக ‘அம்மா’வின் நடவடிக்கைகளை விமர்சித்தனர்.
கொச்சி ராஜாவின் கதை !
மக்கள் பிரதிநிதிகளான முகேஷ், இன்னசண்ட் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் வலுவடைந்துவருகிறது. 

மாற்று சினிமா முயற்சிகளுக்கு இந்த நட்சத்திர அதிகாரம் பெரும் தடை” என நடிகர் பிரகாஷ் பேர் கூறியி ருக்கிறார்.

கடத்தப்பட்ட ஒரு பெண்ணு க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடங்கிய இந்தப் பன்முனைப் போராட்டம் இன்று அதையும் தாண்டி மலையாள சினிமா வில் நட்சத்திர நடிகர் களின் ஆதிக்கத் துக்கு எதிராக மாறி யுள்ளது. 

இப்போது கைது செய்யப் பட்டுள்ள திலீபை, எந்த விளக் கமும் கேட் காமல் அடிப்படை உறுப்பினர் பதவியி லிருந்தே விலக்கி யுள்ளது ‘அம்மா'. 
இழந்த தனது பெயரை அவசர அவசர மாக நிலை நாட்டிக் கொள்ளும் அம்மா வின் முயற்சி இது. 

ஆனால், இதற்கெல் லாம் அப்பாற் பட்டு மலையாள சினிமா வில் ஜனநாயகம் வலுவடைய இந்த வழக்கு ஒரு தொடக் கமாக இருக்கும் என எதிர் பார்க்க லாம்.
Tags: