கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் ஏற்படுவது ஏன்?

நடை முறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்து விட்டால், நாம் மிகவும் அஞ்சுவது மூளை தொடர்பான நரம்பு கோளாறாக இருக்குமோ என்பது தான்.
தலைச் சுற்றல் ஏற்படுவது ஏன்?
அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காது தான் முக்கியக் காரணமாக இருக்கும்.

ஆனால் மற்ற காரணங்களாக ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு,

நீரிழிவு, தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, கர்ப்பத்தின் ஆரம்பம், இதயத் துடிப்பு கோளாறுகள்,

மருந்துகள் பக்கவிளைவு, பார்வை கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, தலைக்காயங்கள் என பலவற்றைக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது உடலைச் சமநிலைப் படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காது தான்!
காது கேட்பது?
காது கேட்பது எப்படி?
காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள் கொண்டு செல்கிறது.

நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலை களை ஏற்றுக் கொள்ளும் போது அதிர்கிறது.

இந்த அதிர்வுகள் செவிப் பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன. 

அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. 

இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக் காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டா கின்றன. 

அப்போது இந்தத் திரவங்களில் மிதந்து கொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன.

உடனே, அங்கு மின்ன லைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகு தான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.

உடலைச் சமநிலை ப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதி
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. 

லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரை வட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. 

லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டு விதமாக இருக்கிறது. 

மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. 

நாம் நடக்கும் போது, எழுந்திருக்கும் போது, ஓடும் போது, தலையைத் திருப்பும் போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. 

இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக் குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும். 

இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவி நரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். 

இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்து கொள்ளும். 

அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப் படுத்துகிறது. 

இந்தச் சங்கிலி வினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படு மானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். 

அப்போது மூளை குழம்பி விடும். இதனால் தான் தலைச் சுற்றல் ஏற்படுகிறது.

தலைச்சுற்றல் என்பது என்ன?
தலைச் சுற்றல் என்பது என்ன?
கிறு கிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறு கிறுப்புக்கு அடுத்த நிலை தான் உண்மையான தலைச் சுற்றல். 

காது பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும் போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவது போல் தோன்றும்.

அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவது போல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவ த்தில் ‘வெர்டிகோ’ (Vertigo) என்கிறார்கள்.

வெர்டிகோ என்பது ஒரு சமநிலை கோளாறு ஆகும். இந்த பிரச்சினை ஏற்படும் போது தலைசுற்றல் மற்றும் காது கேளாத தன்மையை பெறுகிறோம். 

இது பொதுவாக உள்காதுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களால் உண்டாகிறது.

இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. 

ஆண்களை விட பெண்களு க்குத் தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது என்பது ஓர் ஆறுதல்.

தலைச்சுற்றல் மூன்று வகை
குமட்டலும் தலைச்சுற்றலும்
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். 

படுத்துக் கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்து விடும்.

மத்திய வகை: இவர்களுக்குத் தலைச் சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டால் இவை சரியாகி விடும். 

தீவிர வகை: இந்த வகை தான் மோச மானது. தலைச் சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும்.

தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கி விடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

மினியர் நோய்
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலை சுற்றல் வருவது ஒரு வகை. இது தூங்கும் போது கூட வரும். 

இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களு க்கு மேல் கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும்.

எப்போதும் படுக்கை யிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்த மாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.

ஒரு திசை தலைச்சுற்றல்
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும் போது, மேல்நோக்கிப் பார்க்கும் போது, குனியும் போது, நிமிரும் போது தலை சுற்றும். 

இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysma Positiona Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். 

குறிப்பாக, இந்த வகைத் தலைச் சுற்றலின் போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. 

தலை சுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிற வர்களில், பெரும்பாலோருக்கு இந்த வகை தலைசுற்றல் தான் முக்கியக் காரணமாக இருக்கும்.

உட்செவி நரம்புப் பிரச்சினை
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும் போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். 

லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும்.

நடுக்காதில் சீழ் வைக்கும் போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும் போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

இதர காரணங்கள்
கிறுகிறுப்பு, தலைச் சுற்றல் ஏற்படுவதற்கான இதர காரணங்கள்
பொது வாகக் காதுப் பிரச்சினை காரண மாக 80 சதவீதம் பேருக்குத் தலைச் சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங் களால் தலைச் சுற்றல் ஏற்படு கிறது.

ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக் கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை,

கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத் துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு,

பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச் சுற்றல் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள் என்ன?
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல் முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும் போது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்து கொள்ள முடியும்.

மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒரு முறை காரணத்தைக் கண்டு பிடித்து விட்டால், அடுத்த முறை இது தொல்லை தரும் போது பயப் படாமல் இருக்கலாம்.

பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். 

முழு ரத்தப் பரிசோதனை உதவக் கூடும். ஆடியோ கிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப் படும்.

சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.

சிகிச்சை என்ன?
சிகிச்சை என்ன?
தலைச் சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போது தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். 

காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன.

இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்ப தால், தலைச் சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.

மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது.

இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குண மடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.

பயிற்சிகள் உதவும்
பயிற்சிகள் உதவும்
இங்கு ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. 

குறிப்பிட்ட உடற் பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம். படுத்தி ருக்கும் போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்து கொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள் பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், 

தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்க வாட்டில் வளைத்தல், நடந்து கொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச் சுற்றலைத் தடுக்க உதவு கின்றன.

இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோச னையுடன் முறை யாகவும் சரியாகவும் செய்து வந்தால், தலைச் சுற்றல் விடை பெற்றுக் கொள்வது உறுதி.

தடுப்பது எப்படி?
தடுப்பது எப்படி?
உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். 

சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். 

புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள். போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள். 

தலைசுற்றுவது போல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக் கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை முன் பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக் கொள்ளுங்கள். 

படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது நேராக எழுந்திருக்காமல், பக்க வாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்க மாகவே எழுந்திருங்கள். 

எழுந்தவுடனேயே நடந்து செல்ல வேண்டாம். படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலை சுற்றல் ஏற்படாது. 

படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ் நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக் காதீர்கள்.

தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
உடலின் ஒரு நிலையி லிருந்து மற்றொரு நிலைக்கு உடனடி யாக மாறா தீர்கள். உதாரண த்துக்கு, புரண்டு படுக்கும் போது திடீரெனப் புரளாதீர்கள். 

அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பி களைச் சுவற்றில் பதித்துக் கொள்ளுங்கள். 

அப்போது தான் தலைச் சுற்றல் வரும் போது இந்தக் கம்பி களைப் பிடித்துக் கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். 

வீட்டிலும், குளிய லறை மற்றும் கழிப்பறை களிலும் வழுக்காத தரை விரிப்பு களையே பயன் படுத்துங்கள். 

இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்று வதைத் தவிருங்கள். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். 

அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள். மன அழுத்தத்தைத் தவிருங்கள். வாகனத்தை ஓட்டாதீர்கள். 

ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.ஆண்டுக்கு ஒரு முறை காதுப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
Tags: