ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?





ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
இந்த கல் மோதிரத்தை போட்டா உங்க பிரச்னை எல்லாம் தீர்ந்துடும். இந்த உலோகத்தை வீட்டு பீரோவுல வைச்சிருந்தா உங்களுக்கு பணப் பிரச்னையே வராது என்பன போன்ற சாதாரண டெக்னிக் தான் ரைஸ் புல்லிங். 
ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?
ஆனால் அவ்வளவு சாதாரண மாக இல்லாமல் இதை பிரம்மாண்டப் படுத்தியதில் தான் இவை மோசடி களில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துக் கொண்டன. 

'உங்களை யாராலும் அசைக்க முடியாத சக்ரவர்த் தியாக இந்த பொருள் மாற்றும்' என யாரை யாவது நம்ப வைத்து, அதை அவர்களிடம் பல கோடிக்கு விற்க முடியுமா?

முடியும் என்றால் அது நிச்சயம் ரைஸ் புல்லிங் மட்டும் தான். ஆன்மீகத்தை கலந்து அரங்கேற்ற ப்படும் இந்த மோசடி, கொங்கு மண்டல மோசடிகளில் மிக மிக பிரசித்தி பெற்றது.

ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?

கோவிலில் உள்ள கோபுர கலசத்தில் உள்ள இரிடியம் எனும் உலோகம், இடி தாக்குவ தால் சக்தி வாய்ந்த உலோகமாக மாறி விடும் என்றும், 

அதை நீங்கள் வைத்திருந்தால் எந்த கொம்ப னாலும் உங்களை அசைக்க முடியாது என்பதும் தான் இந்த மோசடி.
நிழல் நிறம் கருப்பு ஏன்?
அப்படி இந்த மோசடியை நடத்தும் போது, கோபுர கலசத்தில் உள்ள இரிடியத்தின் சக்தியை விவரிக்க மோசடி யாளர்கள் செய்யும் ஹைடெக் சோதனைக்கு (?) பெயர் தான் ரைஸ் புல்லிங்.

அதாவது சக்தி வாய்ந்த இரிடிய த்தை கொண்ட கோபுர கலசம் என்றால், சுற்றிலும் அரிசியை போட்டால் இழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த தாக சொல்லப் படும். 
கலசத்தில் சக்தி வாய்ந்த இரிடியம் இருக்கா என சோதிக்கும் முறை தான் இது. அரிசியை இழுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்தது என்பதால் இது ரைஸ் புல்லிங் அதாவது அரிசியை இழுப்பது என்ற பெயர் பெற் றுள்ளது.

இரிடியத்தின் பெயரால்

ரைஸ் புல்லிங் என அழைக்கப் பட்டாலும், இந்த மோசடியின் மூலமாக இருப்பது இரிடியம் தான். இரிடியம் என்பது கெட்டியான, அடர்த்தி யான ஒரு உலோகம். 

இதன் உருகுநிலை என்பது மிக அதிகம் என்பதால், உயர் வெப்ப நிலைக ளில் இந்த உலோகம் பயன்படும். 

மேலும் இடி விழுந்தாலும் இது தாங்கும் என்பதால் கோவில் களில் கடவுள் சிலையை பாதுகாக்க, பொக்கிஷங்களை பாதுகாக்க இரிடியம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

பழமையான கோவில் கலசங்களில் இந்த இரிடியம் பயன்படுத்தப் படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரிடியம் இடி தாக்கப்பட்டால் அது சக்தி மிக்கதாய் மாறிவிடும் என்றும், 

அதை வைத்தி ருப்பவர்களுக்கு தொட்ட தெல்லாம் வெற்றி தான் எனச் சொல்லி இரிடியத்தின் பெயரால் தான் இந்த மோசடி நடத்தப் படுகிறது.

மோசடி நடப்பது எப்படி?

வெறுமனே கோபுர கலசம், இடி, இரிடியம் எனச் சொல்லி யாரையும் நம்ப வைக்க முடியாத ல்லவா? அதனால் இதற்கு மிகப் பெரிய ஆன்மீக பின்புல த்தை ஏற்படுத்தி யிருக்கிறா ர்கள். 

"கோவில்ல தீர்த்தமா கொடுக்கறது வெறும் தண்ணீர் தான். ஆனா அது எப்படி நம் நோயை தீர்க்குது. பிரச்னையை தீர்க்குது? ஏன்னா கோவில்ல கிடைக்குற பாசிட்டிவ் வைப்பரேசன். 

மந்திரங்கள் சக்தியா மாறி தீர்த்தம் நோய் தீர்க்குற, பிரச்னை தீர்க்குற மருந்தா மாறுது. 
அது மாதிரி தான் கோவில்ல ஆயிரக்க ணக்கான முறை உச்சரிக்கிற மந்திரங்கள் மிகப்பெரிய சக்தியாக மாறி கோவில் கலசத்தை அடையும்.

அதுல இடி, மின்னல் தாக்கும் போது அதன் சக்தி உச்சம் பெறும். அப்படி சக்தி மிக்க கலசத்தை வைச்சிரு க்குறவங்க தான் ராஜா. 

அவங்க ளுக்கு ஒரு பிரச்னையும் வராது என்று ஆன்மீக காரணத் தைச் சொல்லி தான் இந்த மோசடி அரங்கேறு கிறது.

ஏமாற்றுவது யாரை?

மற்ற மோசடி களை போல் இதில் சாதாரணமா னவர்கள் குறி வைக்கப் படுவ தில்லை. ஆனால் பயன் படுத்தப்படு வார்கள். 

இந்த மோசடியின் டார்கெட். ஆன்மீக நம்பிக்கை கொண்ட மிகப்பெரிய செல்வந்த ர்களும், தொழிலதி பர்களும், அரசியல் பிரமுகர்களும் தான். 

அவர்களை நம்ப வைக்க சாதாரண மக்கள் பயன் படுத்தப்படு வார்கள்.  'ரைஸ் புல்லிங் கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. அது கிடைச்சா கோடியில் பணம் கிடைக்கும். 

சக்தி வாய்ந்த கோவில் கலசங்கள் பற்றி தகவல் சொன்னாக் கூட பல லட்சம் கிடைக்கும்.  
அப்படி சக்தி வாய்ந்த கோபுர கலசத்துக்குப் பக்கத்தில் அரிசியைக் கொண்டு போனால், அது மெரூன் கலராகி கலசத்துல ஒட்டிக்கும். டார்ச் லைட் அடிச்சா பல்ப் ஃப்யூஸ் ஆகிடும். 

கலசத்துக்கு மேல் ஊசியைப் போட்டா அந்தரத்தில் நிற்கும்... என ஏராளமான கதைகளை அள்ளிவிட்டு, வேலையே செய்யாம பணக் காரர்களா கணும்னு இருக்குற சாதார ணமானவர் களை டார்ச் லைட்டும் கையுமா, 
கோவில் கோவிலா சுத்த வைச்சுருவாங்க. அதுக்கு அப்புறம் இது உண்மை தான்னு நம்ப வைக்குற மாதிரி சில புத்தகங்களை இவங்களே பிரிண்ட் பண்ணு வாங்க.

டார்கெட் பண்ற ஆட்கள் கிட்ட இந்த பேச்சு, புக், செய்தி எல்லாம் போய் சேர்ற மாதிரியா ன வேலை களை செய்வாங்க. 

இதுக்கு அப்புறம் அதுக்கு அவ்வளவு சக்தியா?னு ஆர்வம் ஆயிட்டா அவ்வளவு தான். அடுத்த ஓரிரு சந்திப்புல கோபுர கலசமும், பல கோடி பணமும் கை மாறி இருக்கும்.

ஏமாறுவதை தவிர வேறு வழியே இல்லை?

அட போங்க பாஸ். இதுக்கெ ல்லாம் ஏமாறு வாங்காளா? னு தானே கேட்கறீங்க. நிச்சயம் ஏமாறு வாங்க. ஏன்னா அவங்க சொல்ற முறையும், தேர்வு செய்யுற ஆளும் அப்படி.

அரசியல்ல அல்லது தொழில்ல நல்ல வளர்ச்சி கண்டு சமீபத்துல கொஞ்சம் இறங்கு முகத்துல இருக்குறவங்க, இல்லை பெரிய வளர்ச்சியை எதிர் பார்த்துட்டு இருக்கு றவங்க கிட்ட, ஆன்மீகம் கலந்து சொல்லும் போது,

அதுவும் இவங்க ஸ்டைல்ல சொல்லும் போது ஏமாற்றதை தவிர வேறு வழி இல்லை ங்கற மாதிரிதான் தோணும். அப்படி ஏமாத்து வாங்க.

கோவில், மந்திரங்கள், பாசிட்டிவ், நெகட்டிவ் வைப்ப ரேசன், கலசம், இடி என இவர்கள் அடுக்க டுக்காய் சொல்லும் விஷய ங்கள் உங்களை கொஞ்ச நேரம் சிலிர்க்க வைத்து, அப்படியே நம்ப வைத்து விடும்.

இதற்காக மோசடியா ளர்கள் பின்பற்றும் டெக்னிக் மிக நுட்ப மானது. கோவில் மந்திரங்க ளையும், கலசத் தையும்,

இடியையும் வைத்து இவர்கள் விளையாடும் வார்த்தை விளையா ட்டில் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். அந்தளவு க்கு பேசி ஆளை மயக்கு வதில் சிறந்து விளங்கு வார்கள் இவர்கள்.
யாகம் நடத்தி ஏமாற்றும் கும்பல்

நீங்கள் ஏமாறத் தயாராகி விட்டீர்கள் என்பதை உங்கள் செயல் பாட்டில் இருந்து அறிந்து கொள்ளும் அவர்கள், அடுத்து சமீபத் தில் கோவில் கோபுர கலசம் திருடப்பட்ட ஒரு செய்தியை காட்டு வார்கள். 

'இந்த கலசம் ரொம்ப சக்தி வாய்ந்தது. 5 மாசமா பத்திரமா இருக்கு. இதன் சக்தியை கூட்ட தொடர்ச்சியா மந்திரங்கள் ஓதிட்டு வர்றோம். 

இது மட்டும் உங்க கிட்ட இருந்தா அவ்வளவு தான் நீங்க எங்கேயே போய்டு வீங்க' என உங்களின் ஆசையை தூண்டு வார்கள்.
சமீபத்தில் அரசியலில் பெரும் எழுச்சி பெற்ற வரை சுட்டிக் காட்டி, "அவர்கிட்ட இந்த கலசம் இருக்கு. இந்த கலசம் வந்த பின்னாடி தான் எல்லா பிரச்னை கள்ல இருந்து வெளியே வந்தார். 

கலசம் இருக்குற வரை அவருக்கு இறங்கு முகங் கறதே இல்லை," என நீங்கள் சர்வசாதா ரணமாய் தொடர்பு கொள்ள முடியாத ஒரு வரைப் பற்றி தத்ரூபமாய் கதை சொல்வார்.

'நீங்க வேணா அந்த கலசத் தோட சக்தியை பாருங்க. அப்போ தெரியும் அதோட சக்தி' என அடுத்த மீட்டிங் கான நாள் குறிக்கப்படும்.  

நடுநிசி ஒன்றில் யாகம் நடத்தப் படுவதைப் போன்று அந்த சோதனை நடக்கும். அரசியல் பிரமுகரோ,

தொழிலதிபரோ கோவில் கருவறையில் அமரவை க்கப்படுவதை போல சட்டையி ல்லாமல், மாலை அணிவித்து அமர வைக்கப் படுவார்கள். 
ரைஸ் புல்லிங் மோசடி என்றால்?
சிறிய யாகம் வளர்த்து, பட்டுத் துணியால் போர்த்தப்பட்ட கலசம் கொண்டு வரப்படும். பின்னர் கலசத்தை வைத்து சுற்றிலும் அரிசியை கொட்ட அரிசியை வேகமாக உள்ளி ழுத்துக் கொள்ளும் கலசம். 

அந்த நேரம் கடவுளை நேரில் காணும் காட்சி போல அந்த காட்சி மிகப்பெரி யதாய் உருவக ப்படுத்த ப்படும். 

இதை பார்த்தவர் கோடிகள் அடங்கிய பெட்டியை கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுச் செல்வது நிச்சயம்.

ஏமாற்றுவது எப்படி?

எப்படி அரிசி, கலசத்தை நோக்கி இழுக்கப் படும் என கேட்கிறீர்கள் தானே. அது ரொம்ப சிம்பிள் டெக்னிக் தான். கலசத்தில் காந்தம் பொருத் தப்பட்டிரு க்கும்.

அரிசியில் இரும்பு துகள் இருக்கும். இரும்பு துகள் இருக்கும் அரிசியை காந்தம் கவர்ந்தி ழுப்பது அதிசயமா என்ன?  இதைத் தான் ஏதோ மிகப்பெரிய அதிசயம் நடந்ததாக சொல்லி ஏமாற் றப்படுகிறா ர்கள்.

அரிசி முழுவதும் இரும்பு துகளாய் இருந்தால் வேகமாக இழுத்துக் கொள்ளும். வேகமாக இழுத்துக் கொண்டால் இதன் சக்தி மிகவும் அதிகம் என்பார்கள்.

சளித்தேக்கத்தை வெளியேற்றும் வல்லாரை !

'ஏ.. அப்பா... 20 செ.மீ தூரம் அரிசியை இழுத்தி ருக்கு. இது மாதிரி எந்த கலசமும் இழுத்த தில்லை. ரொம்ப சக்தி வாய்ந்த கலசம்!" என்பார்கள். உண்மையில் அவை டுபாக்கூர் கலசங்கள்.

இதை தயாரிப்பதற் கென்றே சில இடங்கள் இருக்கிறது. காந்தம் வைத்து தயாரிக் கப்பட்ட இந்த சாதாரண கலசம், சில கோடிகளுக்கு கைமாற்ற ப்பட்டிரு க்கும். 

அதை இன்னும் சக்தி வாய்ந்தது என பலர் வீட்டில் வைத்தி ருக்க கூடும். உண்மை தெரிந்து திருடனு க்கு தேள் கொட்டிய கதையாக அதை தூர எரிந்து விட்டு அடுத்த வேலையை பார்த்துக் கொண்டி ருக்க கூடும்.
அடுத்து ப்ளான் பி

கடந்த வாரம் நாக மாணிக்க கல் மோசடியில் சொல்லப் பட்டதை போல, இதிலும் ப்ளான் பி உண்டு. கலசத்தை சுற்றி அரிசியை கொட்டி, அரிசியை இழுப்பதை எல்லாம் காட்டிய பின்னர், 

அதாவது கடைசி நேரத்தில் நீங்கள் இந்த டீலுக்கு ஒத்து வர வில்லை என்றால், நீங்கள் அங்கிருந்து நிச்சயம் பணத்துடன் திரும்ப முடியாது. அதுதான் ப்ளான் பி.

நீங்கள் இந்த டீலுக்கு ஒத்து வரமாட் டீர்கள் என தெரிந்தால், உடனே அங்கு போலீஸ் வரும். போலீஸ் என சத்தமிட்டு, 

அந்த கும்பல் கலசங் களோடு உங்கள் பணத்தை யும் பறித்துக் கொண்டு செல்லும். எல்லாவ ற்றையும் பின்னர் பேசலாம் என்பார்கள். 
அதன் பின்னர் அவர்களு க்கு அழைப்பே வராது. கலசத்தை மையப் படுத்தி அதுவரை பேசி வந்தவர்கள் எல்லாம் திடீரென காணாமல் போவா ர்கள். அப்படி நடக்கும் போது அவர் முழுமை யாக ஏமாற் றப்பட்டிரு ப்பார்.

இரிடியம் சக்தி வாய்ந்ததா?

இது தொடர் பாக மின்னியல் துறை சார்ந்த சிலரிடம் கேட்டோம். "இரிடியம் ரொம்ப காஸ்ட்லி யான உலோகம். இது, எரிமலைக் குழம்பு களில் இருந்து உருவா கிறது. இந்தியாவில் உற்பத்தி யாகறது இல்லை. 

ஒரு கிராம் இரிடியம் எப்படியும் 3 ஆயிரத்துல இருந்து 7 ஆயிரம் வரை கிடைக்குது. 
இரிடியம் வெப்பத்தை தாங்கும், அரிமான த்தைத் தடுக்கும் அப்படீங்க றதால ராக்கெட்டு களில் கோட்டிங் மெட்டீரி யலாகப் பயன் படுத்துகிறா ர்கள். 

கோபுரக் கலசங்களிலும் இதை கோட்டிங் கொடுத்து இருக்கலாம். இரிடியத்துக்கு வேற எந்த விதமான விசேஷ குணமும் கிடையாது. இது எல்லாம் சுத்தப்பொய். காசு பிடுங்கற வேலை," என்றார்.

யார் சொன்னா கேக்கு றாங்க? நீங்க இந்த கட்டுரை யை படிச்சு கிட்டு இருக்க றப்போ கூட ஏதோ ஒரு இடத்தில், யாரோ ஒருவர் கோபுர கலசத்துல டார்ச் அடிச்சு பாத்துட்டு இருப்பார்.

இன்னொரு இடத்தில் கலசத்தை சுத்தி அரிசியை கொட்டி இன்னொரு கும்பல் பேச்சு நடத்திட்டு இருக் கலாம்.
Tags: