கூந்தலுக்கு தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய் களில், தேங்காய் க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்ற னவாம்!)

2 வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்

3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்

4. அவுரி சாறு – 0.5 லிட்டர்

5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்

6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்

7. நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்

8. சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர் (மேலே குறிப்பிடப் பட்டிருக்கும் பொருட்கள் கிராமப் புறங்களில் பரவலாகக் கிடைக்கும்.

அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.) இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

நெல்லிக் காய்களில் கொட்டை களை நீக்கி விட வேண்டும். சோற்றுக் கற்றாழை யில் அதன் உள்ளிரு க்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவி விட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுக ளின் கலவையைத் தேங்காய் எண்ணெ யுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிரு க்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக் கொள்ளவும்.

இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச் சியை ஊக்கு விக்க இந்தத் தைலம் குறைந் தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.)

அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும்.

பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷ னர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங் களின் கலவை தான். 

எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல் லாமல் போன நான்காம் விதி!
Tags: