மார்பக புற்று நோய்.. மார்பகத்தை இழக்காமல் இருக்க !

இந்தப் பெண் போல பாதிப்புறுவதற்கு எந்தப் பெண்ணிற்குத் தான் விருப்பம் இருக்க முடியும். பெண்மை யின் அடையாளமாக அவளது பெருமையின் சின்னமாக, சுயகௌரவத் தைப் பேணுவதாக இருப்பது மார்பகங்கள்.

இதை இழப்பது பெண்களால் சகிக்கக் கூடிய விடயம் அல்ல. மற்றவர்களை மோகிக்க வைத்த அதே உறுப்பு அவளைச் சாகடிக்க வும் கூடும் என்பதுதான் சோகமான மறுபக்கம்.

புற்றுநோய் என்றால் புதை குழிக்கு செல்வதற் கான நேரம் வந்து விட்டது என்ற எண்ணமே இன்றும் பலரிடையே நிலவு கிறது.

ஆனால் இன்று மார்புப் புற்றுநோயானது குணமாக்கக் கூடிய நோய் என்பது பலருக்குத் தெரிவ தில்லை. அதுவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் வந்த சுவடின்றி முற்றாக மாற்றக் கூடிய தாகும்.

மார்பகப் புற்று நோயானது பால் சுரக்கும் கலங்களில் அல்லது சுரந்த பாலை முலைக்குக் கடத்தும் குழாய் (கான்) களில் தோன்று வதாகும்.

யாருக்கு?

ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம். பெண்களே பெருவாரியாகப் பாதிக்க ப்படுகி றார்கள். அவர்களில் எத்தகை யவர்க ளுக்கு இது வருவதற் கான வாய்ப்பு அதிகம்?

தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர் களிடையே காணப் பட்டால் வாய்ப்பு அதிகமாகும்.

மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.

காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்க ளுக்கு ஏனைய வர்கள விட அதிக சாத்தியம் உள்ளது.

மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறிய வர்கள்.

பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டு வதற்கான சிகிச்சை களை நீண்டகாலம் செய்தவர் களுக்கு.

மிகக் குறைந் தளவு வயதிலேயே பூப் படைந்தவர் களுக்கு.

மிகப் பிந்திய வயதிவேயே மாதவிடாய் முற்றாக நின்றவ ர்களுக்கு.

ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரை களை மருத்துவ ஆலாசனை இன்றி நீண்ட காலம் உபயோகித்தவ ர்களுக்கு

இவ்வாறான வாய்ப்பு ள்ளவர்களுக்கு மாத்திர மின்றி ஏனையவ ர்களுக்கும் அது வருவத ற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

எனவே ஒவ்வொ ருவரும் தமது மார்பகங்களில் அக்கறை செலு த்துவது அவசியமாகும். அதன் முதற்படி அதனை அக்கறையுடன் கவனிப்பது தான்.

இதன் மூலம் ஆரம்ப அறிகுறிகளை ஒருவரால் கண்டறிய முடியும்.

அறிகுறிகள்

முக்கிய மானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிக ளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்ற ங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய வையே.

மார்புக் கச்சையின் அளவும் ஆரோக் கியமும்

சாதாரண அவதான த்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம்.

சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதை விடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டி யதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம்.

மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.

மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம் பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங் களுமாக மாற்றம் ஏற்பட்டால்.

முலைக் காம்பின் தோற்ற த்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண் டிருந்த முலைக் காம்பு உள்வாங்கப் பட்டால்.

முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.

மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாத விடாய் நேரத்தில் வழமையாக வலி ஏற்படு வதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்து வரைக் காண வேண்டும்.

மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்

பரிசோதனைகள்

மார்பகத்தில் கட்டியி ருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால் பரிசோத னைகள் மூலமே விடை காண முடியும்.

1. மமோகிறபி அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும். ஐககளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப நிலை யிலேயே கண்டறிய உதவுகிறது. 

வழமையன கதிர்படங்கள் (X Ray) போலல்லாது மிகக் குறைந்தளவு கதிர்வீச்சு மட்டுமே பயன் படுத்த ப்படுவதால் ஆபதற்றது.

2. ஸ்கான் (Ultra Sound Scan) பிரிசோதனை. குட்டியி ருக்கிறதா எனச் சந்தேகம் இருந்தால் அதனைக் கண்டறிய மிக உதவியானது. அதிலும் முக்கியமாக இளம் பெண்களில் கட்டி மிகத் தளிவாகத் தெரியும்.

3. சிறிய ஊசி மூலம் கட்டியி லுள்ள சிறியளவு திசுக்களைப் உறிஞ்சி எடுத்து பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல். கட்டியானது ஆபத்தற்ற சாதாரண கட்டியா புற்றுநோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப் பெண் போல மார்பகத்தை இழக்கா மலிருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? 

1. ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் உதாரணமாக மாதமொரு முறை உங்கள் மார்பக ங்களை கட்டியிரு க்கிறதா என்பதையிட்டு சுயப ரிசோதனை செய்வது அவசிய மாகும்.. இதை எப்பொழுது செய்வது எவ்வாறு செய்வது என்பது பற்றி மற் றொரு கட்டுரையில் பார்க்கலாம்.

2. கட்டி சிறியதாக இருந்தாலும் உடனடியாக மருத்து வரைக் காணுங்கள். சுயபரி சோதனையின் போது மேலே சொன்ன அறி குறிகளில் ஏதாவது இருந்தாலும் அவ்வாறு அணுகவும்.

3. மருத்துவரின் ஆலோச னையுடன் மமோகிறபி (Mamography) எனப்படும் மார்பக கதிர்ப்படம் எடுத்தல். கட்டி வந்த பின் அல்ல. வெளிப் படையாகத் தெரிய முன்னரே ஆரம்ப நிலை யிலேயே கண்டறிவது அவசியமாகும்.

மமோகிறாம்

இது ஒரு முக்கிய பரிசோ தனை. கட்டி தென்பட்ட பின் செய்வது மாத்திர மல்ல, இந்நோய் வர வாய்புள்ள பெண்கள் தங்கள் பாதுகா ப்பிற்காக அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனை ஆகும்.

இந் நோய் வருவ தற்கான சாத்தியம் அதிகமுள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு பின்னர் வருடா வருடம் செய்வது அவசியம்.

50வயதிற்கு மேற்பட்ட பெண் களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்வது அவசியம்.

ஆயினும் இதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பது உண்மையே. ஆயினும் கொழும்பில் தனியார் துறை யினரால் பல இடங்களில் செய்யப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மருத்துவம்

இன்றைய நிலையில் மார்பகப் புற்று நோய் வந்தால் கூட முதலில் கூறியது போல மார்பகத்தை முற்றாக அகற்றும் சிகிச்சைகள் செய்யப் படுவதில்லை.
சத்திரசிகிச்சை, கதிர் சிகிச்சை, மற்றும் ஊசி மருந்துகள் மூலம் முழமை யாகக் குணமா க்கலாம்.

ஆபத்தான நோயெனப் பயந்து மறைக்காது, உடனடியாக மருத்துவரை அணுகு வதன் மூலம் பூரண குணம் பெற்று ஏனைய பெண் களைப் போல வாழ லாம் என்பது உறுதி.
Tags:
Privacy and cookie settings