பால் சாப்பிடுவது அவசியம்தானா?

பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் என நம் அன்றாடத் தேவைகளில் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு அதிகமே.  
பால் சாப்பிடுவது
ஆனால், பாலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதன் காரணமாக நடுத்தர மக்கள் பலரும் தற்போது, பாலுக்கு மாற்று உணவு என்ன என் கிற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியி ருக்கிறார்கள்.  

‘நம் முன்னோர் கள் காலத்தில் காளைகள் உழவுக் காகவும், பசுக்கள் இனப் பெருக் கத்துக் காகவும் தான் பயன் படுத்தப் பட்டன. 

காலப் போக்கில் பசுவின் பாலை மனிதன் பயன் படுத்தத்  துவங்கினான். 

ஆனால், பசுவின் பால் நமக்குத் தேவை யற்றது என்பது தான் உண்மை. ஓர் உயிரை வருத்திப் பெறும் பால் அவசிய மில்லாதது!’ என்கி றார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
இடை, தொடை சுற்றளவு என்ன?
அதேசமயம், ‘பெரியவர்க ளுக்கு வேண்டு மானால் பால் தேவைப் படாமல் இருக்கலாம். ஆனால், குழந்தை களை எப்படி பாலில் இருந்து விலக்கி வைக்க முடியும்?’ என்பது அம்மாக்கள் பலரின் கேள்வி.
 
இந்தக் கேள்வியை சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீநிவாச னுக்கு மாற்றிய போது, ”குழந்தை களைப் பொறுத் தவரை தாய்ப்பால் தான் முக்கியம். மாட்டுப்பால் தேவையே இல்லை. 

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்து க்குக் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு தாயின் மன நிலையே பால் சுரப்புக்குக் காரணம். 

சிறிய மார்பகம், சத்தில்லாத தேகம் என பால் தராததற்கு பொய்யான காரணங் களை பெண்கள் கண்டு பிடிப்பது முற்றிலும் தவறு. 

அதேபோல் பால் கொடுப்பதால் மார்பகங் களின் அழகு போய் விடும் என்பதும் வதந்தியே!” என்ற டாக்டர், 

பால் சுரப்புக்கு கை கொடுக்கும் வழிமுறை களைக் குறிப்பி ட்டார். ”பாலூட்ட, முதலில் ஒரு தாய் மனதள வில் தயாராக வேண்டும்.
குழந்தைக்கு பால் கொடுக்க
தன் குழந்தை க்குத் தன்னால் பால் கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும் என அவள் நினைத் தாலே, கண்டி ப்பாக பால் சுரக்கும். 

’வில்லிங் மதர், சக்கிங் பேபி’ (willing mother, sucking baby) என்பார்கள். தாய் விருப் பத்துடன் கொடுக்கும் போது, குழந்தை யும் பால் குடிக்கும். 

இதற்காக தாயானவள் தினமும் சாப்பிடும் உணவோடு சற்று கூடுதல் சத்துக் களை சேர்த்துக் கொண்டாலே போது மானது.

அப்படியும் தாய்ப்பால் சுரக்க வில்லை என்றால், குழந்தையை மார்பகங் களில் சப்புவதற்கு நன்கு பழக்கப் படுத்த வேண்டும். 

ஒரு குழந்தை எவ்வள வுக்கு எவ்வளவு சப்ப ஆரம்பிக் கிறதோ அந்த அளவுக்கு பால் சுரப்பதும் அதிகமாகும். 

இந்த இரு வகைக ளிலும் பால் சுரக்க வில்லை என்றால், தாய்க்கும் தாயின் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் கொடுத்து 

காரணத்தைக் கண்டறிய வேண்டுமே ஒழிய, தாய்ப் பால் சுரக்க வில்லை என தானாக முடிவெடுத்து, 

பால் பவுடரையோ அல்லது பசும் பாலையோ நாடுவது முற்றிலும் தவறு” என்ற டாக்டர், தாய்ப் பாலின் சிறப்பை நிரூபிக்கும் ஆய்வு முடிவு களையும் தொட்டுக் காட்டினார்.
தாய்ப்பாலின் சிறப்பை நிரூபிக்கும் ஆய்வு
”அதிக நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள், மற்ற குழந்தைகளை விட மூளை வளர்ச்சியில் முன்னி லையில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கி ன்றன.

ஆனால், 35 சதவிகித பெண்கள் மட்டுமே முதல் 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கி றார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். இது 100 சதவிகி தமாக உயர வேண்டும்.
பிரெஞ்ச் கிஸ் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் !
6 மாதத்துக்குப் பிறகு சத்து மாவுக் கஞ்சி, கிழங்கு வகைகள், பருப்பு, இட்லி முதலான திட உணவு களைக் குழந்தைக்குப் பழக்கப் படுத்த வேண்டும். 

பாலில் உள்ள கால்சியம் சத்து இந்த உணவுகளின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும்போது, பசும் பாலின் அவசியம் இல்லை. 

குழந்தையின் 2 வயதுப் பிறகு குழந்தை விரும்பும் பட்சத்தில் பசும் பாலை அறிமுகப் படுத்த லாம். அதுவரை குழந்தைக்கு பசும்பால் தேவையே இல்லை!” என்றார் டாக்டர் ஸ்ரீநிவாசன் அழுத்தமாக! 

குழந்தைகளுக்குத் தாய்ப் பால் போதும். பெரியவர்கள் பாலை ஒதுக்கிவிட்டால், அவர்களுக்கான மாற்று உணவு?

இதைப் பற்றி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் கூறுவதை கேட்போமா..?!
 
”பாலில் உள்ள கால்சியம் சத்து அவசியமான ஒன்றுதான். ஆனால், அதை பாலில் இருந்து தான் பெற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. 

கால்சியம் சத்து, கேழ்வரகில் நிறையவே இருக்கிறது. அதனால் கேழ்வரகுக் கஞ்சி, கூழ் என உண்ணப் பழக்கலாம். 

டீ, காபிக்குப் பதி லாக க்ரீன் டீ, துளசி ஜூஸ், கஞ்சி மாதிரியான மாற்று ஆகாரங் களை எடுத்துக் கொள்ளலாம்.
அசைவம் சாப்பிடு கிறவர் கள், மீன், கருவாடு (இவற்றின் முள்ளில் கூட கால்சியம் இருப்பதால், எலும்பு போல இருக்கும் மீன் முள்களை மட்டும் மென்று சாப்பிடலாம்!) என்று எடுத்துக் கொள்ளலாம். 

 கேழ்வரகுக் கஞ்சி,  கூழ்

கீரை, சுண்டல், கறிவேப்பிலை, புதினா, கொத்த மல்லித் தழை போன்ற  பச்சை  உணவுகளிலும்    பாலுக்கு நிகரான சத்து இருப்பதால், சைவம் சாப்பிடு பவர்கள் இவற்றை நாடலாம். 

புட்டரிசி தோசை, கேழ்வரகு அடை இதை யெல்லாம் உணவில் சேர்ப்பது நல்லது. பசும்பாலை தவிர்க்கவே முடியாத வர்கள், நேரடியாகப் பசுவின் தரம் பார்த்து பாலை வாங்குவது நல்லது. 

இல்லை யென்றால், பசுவிடம் ஏதேனும் நோய் இருந்து அது நமக்குப் பரவ வாய்ப்பி ருக்கிறது” என்று எச்சரித்து முடித்தார் ஷைனி. 

ஆர்கானிக் பால்!

கும்மிடி பூண்டியில் உள்ள ‘ஆஸ்ட்ரா டெய்ரி (Astra dairy)’ ஆர்கானிக் பால் பண்ணையின் இயக்குநர் ராகேஷ் ரவீந்திரன் கூறும் போது, 

”எங்கள் பண்ணைப் பசுக்களுக்கு இயற்கையான முறையில் வளர்க்கப்படும் புற்களையும் தாவரங் களையுமே உணவாகக் கொடுக் கிறோம். 
 ஆர்கானிக் பால்!
தாவங்க ளின் மீது எந்த ரசாயன உரத்தையும் தெளிப்பது கிடையாது. பூச்சித்தா க்குதல் இருந்தால், இயற்கையான முறையில் தயாரிக்கப் பட்ட பூச்சி விரட்டி களையே பயன்படுத் துகிறோம்.

பசுக்களையும் இயற்கை யான சூழலில் தான் வளர விடுகிறோம். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு போன்ற வற்றை வெளியிடங் களில் வாங்கிக் கொடுப்பதும் இல்லை. 

இந்த மாடுகளுக்கு வெறும் பச்சைத் தாவரமும் தண்ணீரும் தான் உணவு. இதனால் மாடுகளின் உடம்பில் எந்த ரசாயனக் கலப்பும் இருக்காது. 

இப்படி இயற்கை யான முறையில் வளரும் மாடுகளிட மிருந்து கறக்கும் பாலை, உடனுக்குடன் 1 லிட்டர் பாட்டில் களில் அடைப்போம்.
ரசாயனக் கலப்பு
அதை அப்படியே நேரடியாக வாடிக்கை யாளர் களுக்கு விநியோகிப்போம். இதனால் பாலில் எந்தக் கலப்பும் நடக்க வாய்ப் பில்லை.  

இப்படி இயற்கை யாக கிடைப்பதால், இந்தப் பாலின் விலையை லிட்டர் 60 ரூபாய் என்று நிர்ணயித்தி ருக்கிறோம்!” என்றார்.
Tags: