நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி சாப்பிடுவது?

எடை குறைப் பதற்காக, எடை கூட்டு வதற்காக, இருமல் நிற்பதற்காக. என அன்றாடம் தேனைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகம்.
நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி சாப்பிடுவது?
இந்நிலை யில், நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் தேன் சுத்தமானது தானா என்பதற்கு எந்த உத்தரவாத மும் இருப்ப தில்லை. 
எனவே, நல்ல தேனை எப்படிக் கண்டு பிடிப்பது... எப்படிச் சாப்பிடுவது? என்பது குறித்து சில தகவல்களை இங்கே பகிர்கிறார், சித்த மருத்துவர் அர்ஜுனன்.

“தேன், பல மருத்துவ குணங்களைக் கொண்டது. தேன் இல்லாமல் நமது ஆயுர்வேத மருத்துவம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால், பல கடைகளில் தேன் என்று சொல்லி சர்க்கரைத் தண்ணீரைத் தான் விற்பனை செய்கிறார்கள்.

தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட் டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கல்லீரலில் கொழுப்பு படிதல் !
சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பி போல அடியில் போய் விடும். 

இதை நாய் முகராது. அதே போல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. 
நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி சாப்பிடுவது?
தேனில் உள்ள பூவின்  மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும்.

இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்தி ருந்தாலும் கெடாது.
ஆண்களை விட பெண்களுக்கு தூக்கம் அவசியம் !
‘ஓடைத்தேன்’ என்பது தான் இருப்பதிலேயே மிகவும் கெட்டியாக இருக்கும் தேன். மிகவும் இடுக்கான பகுதிகளில் இருக்கும் தேன் கூடுகளில் இருந்து இது எடுக்கப்படுகிறது.

இதில் ஏதேனும் பழத்தைப் போட்டு வைத்தால், 200 ஆண்டுகளுக்குக் கூட கெடாது.  

மலைவாழ் மக்கள் நிறைய பொருட்களைப் பதப்படுத்துவதற்கு இந்தத் தேனைத் தான் பயன்படுத்துவர்.  மரங்களில் இருக்கும் தேன் கூடுகள் மூலம் கிடைப்பது கொம்புத்தேன்.

பெரும்பாலும் கடைகளில் நமக்குக் கிடைப்பது இந்தத் தேன் தான். ஆனால், இதில் பொருட்களை அதிக நாட்கள் பதப்படுத்த முடியாது. 
நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி சாப்பிடுவது?
ஆனால், இந்தத் தேன் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும். தாம்பத்திய உறவில் சிறந்து விளங்க மலைவாழ் மக்கள் இரவு நேரத்தில் தேன் அருந்துவர். 

அவர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு விட்டு வெயிலில் கட்டிலைப் போட்டு போர்த்திக் கொண்டு படுக்கும் பழக்கத்தையும் கடை பிடிக்கிறார்கள்.
சியாட்டிகாவுக்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?
முகத்தில் வறட்சி, அதிகக் கொழுப்பு, குடல் சம்பந்தபட்ட  பிரச்னை எதுவாக இருந்தாலும், தேன் சாப்பிட்டால் சரியாகி விடும். 

காலையில் வெறும் வயிற்றில் தேனைச் சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பு கரைந்து விடும். பலாப்பழமும் தேனும் கலந்து சாப்பிட  முகம் பொலிவாகும்.

உடலில் நீர் அதிகமாக இருப்பவர்களுக்கு தேன் ஒரு அருமருந்து. சுடு தண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது.
மூலநோய் வெளிக்காட்டும் அறிகுறிகள் !
வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது.

வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல. அதனால், பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம்.

ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும் போது... ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம்” என்ற அர்ஜுனன் 
நல்ல தேனை கண்டுபிடிப்பது எப்படி? எப்படி சாப்பிடுவது?
நிறைவாக, “எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ் பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதே போல, தேனை நக்கித் தான் சாப்பிட வேண்டும். 

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும் போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக மாறி விடும். 
விக்கல் நிறுத்த செய்ய வேண்டியது !
மருந்து சாப்பிடும் போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். 

அப்படி சாப்பிடும் போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக் கூடாது” என்று எச்சரிக்கை செய்தார்... இ.ராஜ விபீஷிகா
Tags: