கண்ணுங்களா, ரமணன் ஓய்வு பெறுகிறார் !

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் தமிழகம் முழுவதும் பிரபலம். 


அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர். முன்பு எல்லாம் அவர் மழை வரும் என்று அறிவித்தால் அன்று மழை வராது என்று மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். 

சென்னையில் மழை கொட்டு கொட்டு என கொட்டித் தீர்த்ததில் இருந்து ரமணனை இனி கிண்டல் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். 

ரமணன் சார் மன்னித்துவிடுங்கள், இனி உங்களை கிண்டல் செய்ய மாட்டோம் என்று சமூக வலைதளங்களில் மக்கள் தெரிவித்திருந்தனர். அந்த அளவுக்கு அவர் பிரபலம். இப்படி வானிலை அறிக்கை தெரிவித்து பிரபலமான ரமணன் வரும் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். 

இது குறித்து ரமணன் கூறுகையில், ஓய்வு பெற்ற பிறகு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வானிலை குறித்த விபரங்களை மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுப்பேன் என்றார்.
Tags:
Privacy and cookie settings