விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை !





விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கீழிறங்கா ஆண் விதைகள் என்றால் என்ன? வழக்கமாக, ஆண் குழந்தை பிறப்பதற்கு முன், ஆண் விதைகள் விதைப் பைக்குள் (ஆண் விதைகளைக் கொண்டி ருக்கும் பை) இறங்கும்.
விதை இறக்கம் கீழிறங்கா ஆண் விதைகளுக்கான அறுவைச் சிகிச்சை
இருந்தாலும், சில வேளைகளில், ஆண் விதைகளில் ஒன்று அல்லது இரண்டும் விதைப் பைக்குள் இறங்காது, அதற்குப் பதிலாக, உடலிலுள்ள துவாரத்தினுள் தங்கி விடும்.

இது கீழிறங்கா விதைகள் அல்லது கிறிப்டோகிடிசம் என்றழைக்கப் படும்.

அதாவது “மறைக்கப்பட்ட ஆண்விதைகள்” என்று அர்த்தப்படும். மேலுமாகத் தெரிந்து கொள்ள, தயவு செய்து “கீழிறங்கா ஆண் விதைகள்” என்ற கட்டுரையை வாசித்துப் பார்க்கவும். 

விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்றால் என்ன? 

ஒரு விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்பது ஆண் விதையை விதைப் பைக்குள் கீழிறக்கும் அறுவைச் சிகிச்சையாகும். 
உங்கள் மகனுக்கு ஒன்று அல்லது இரண்டு விதைகளிலும் இந்த அறுவைச் சிகிச்சை தேவைப் படலாம். 
அறுவைச் சிகிச்சையின் போது என்ன சம்பவிக்கும் உங்கள் பிள்ளைக்கு ஒரு பொதுவான மயக்க மருந்து என்றழைக்கப் படும் ஒரு விசேஷ “நித்திரைக் கான மருந்து” கொடுக்கப்படும்.
புற்று நோய் பற்றிய விரிவான தகவல்கள் !
இது அவன் அறுவைச் சிகிச்சை நேரம் முழுவதும் நித்திரையா யிருப்பான் என்பதை நிச்சயப்படுத்தும். 

உங்கள் பிள்ளையின் கவடு என்றழைக்கப்படும், காலின் தொடக்கப் பகுதியில் மருத்துவர்கள் ஒரு சிறிய கீறலை (வெட்டு) ஏற்படுத்து வார்கள்.

அவர்கள் மெதுவாக உங்கள் பையனின் ஆண் விதையை விதைப் பைக்குள் நகர்த்தி வைப்பார்கள். 

இரண்டு பக்க ஆண் விதைகளும் கீழிறிக்க வேண்டி யிருந்தால் , கவட்டின் இரு பக்கங்களிலும், பக்கங் களுக்கு ஒன்றாக இரண்டு கீறல்கள் இருக்கும். 
பெரும்பாலும், ஒவ்வொரு பக்க ஆண்விதை அறுவைச் சிகிச்சை செய்வதற்கு ஒரு மணி நேரம் எடுக்கலாம். 

வழக்கமாக, விரை இறக்கும் அறுவை மருத்துவம் ஒரு வெளி-நோயாளருக்கான அறுவைச் சிகிச்சையாகும்.

அதாவது, உங்கள் பிள்ளை மருத்துவ மனைக்கு வரும் தினத்திலேயே அறுவைச் சிகிச்சை செய்யப்படும்.  

உங்கள் மகன் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் விழித்தெழும்பு வதற்காக சில மணி நேரங்கள் மருத்துவ மனையில் செலவிட வேண்டி யிருக்கும்.

உங்கள் மகன் பெரும்பாலும் அறுவைச் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பலாம்.  அவன் இரவில் மருத்துவ மனையில் தங்க வேண்டிய தில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பின் உங்கள் பிள்ளையை வீட்டில் பராமரித்தல்
தூங்கும் போது திடீரென கீழே விழுவது போன்ற உணர்வு ஏன்? 
வலி நிவாரணி உங்கள் மகன் அறுவைச் சிகிச்சைக்குப்பின் சில நாட்களுக்கு கவட்டில் புண் வலியை உணரலாம்.  

உங்கள் பிள்ளையின் மருத்துவர் வலி நிவாரணியாக கோடீன் மருந்தை எழுதிக் கொடுக்கலாம்.

உங்கள் பிள்ளைக்கு வலி நிவாரணியாக, அசெட்டமினோஃபென் (டைலெனோல்) அல்லது ஐபியூபுரோஃபென் என்பனவும் கொடுக்கப் படலாம். 

உங்கள் மருத்துவர் உங்களுக்குக்குச் சொன்னபடியே அவனுக்கு மருந்தைக் கொடுங்கள்.

உங்கள் பிள்ளை வலியில் இருப்பதற் கான அறிகுறிகள் பெரும்பாலும், வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கு வலி இருப்பதை உங்களுக்குச் சொல்வார்கள். 

சிறு குழந்தைகளுக்கு வலி இருப்பதற்கான பின்வரும் அறிகுறிகள் இருக்கின்றனவா என்று பாருங்கள்:
 
அதிக தொந்தரவு செய்தல் வியர்த்தல் அதிகரிப்பு தோல் நிறம் வெளிறுதல் நடக்க மறுத்தல் அல்லது நடக்கக் கஷ்டப்படுதல் வழக்கத்துக்கு மாறான அமைதி 

தையல்களைப் பராமரித்தல் உங்கள் மகனின் உடலில் கீறப்பட்ட பகுதி அல்லது பகுதிகளில் பன்டேஜ் இடப்பட்டி ருக்கும்.

இந்த பன்டேஜுகள் தையல்களை மூடியிருக்கும். பன்டேஜில் சிறிதளவு இரத்தம் காணப்படும். இது சாதாரண மானது. இரத்தக் கசிவு படிப்படியாக நின்று விடும். 
சில நாட்களின் பின், குளியல் தொட்டியில் நனைத்து பன்டேஜுகளை நீங்கள் அகற்றலாம்.பன்டேஜ் அகற்றிய வுடன், கீறல் காயம் உள்ள பகுதியை ஒரு நாளில் இரண்டு முறை சுத்தம் செய்யுங்கள்.  
இதை எப்படி செய்வது என்று தாதி உங்களுக்கு அறிவுரை வழங்குவார். ஒரு சுத்தமான ஈரத் துணியால், கீறல் காயம் உள்ள பகுதியை மெதுவாக ஒற்றித் துடைத்துச் சுத்தமாக்கவும். 

ஒரு வாரத்துக்கு, பொலிஸ்ப்போரின் போன்ற அன்டிபையோடிக் பூசுமருந்தை தையல்களின் மேல் மெதுவாகத் தடவவும். 

அன்டிபையோடிக் பூசு மருந்து என்பது கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு விசேஷ கிறீம் ஆகும். 

அன்டிபையோடிக் கிறீம்களை நீங்கள் மருந்துக் குறிப்பு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் வாங்கலாம்.

தையல்கள் தாமாகவே விழுந்து விடும். ஆகவே அவற்றை அகற்ற வேண்டிய அவசியமில்லை. 

உங்கள் பிள்ளை இன்னும் டயபர் அணிபவனா யிருந்தால், அவை ஈரமாகும் போது நீங்கள் அவற்றை மாற்ற வேண்டும். 
ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்களுக்கு டயபரை அணிவிக்காது விட்டு விடுங்கள். உங்கள் பிள்ளை வளர்ந்தவ னாக இருந்தால், அவன் தனது வழக்கமான உணவை உண்ணலாம். 

உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் மலங்கழிக்க வேண்டும். உங்கள் பிள்ளைக்கு மருத்துவ மனையில் மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும். 

உங்கள் மகன் தேறி வருகிறான் என்பதை நிச்சயப் படுத்திக் கொள்வதற் காக மருத்துவமனை பணியாட்கள் அவனுக்கு ஒரு மருத்துவ மனை சந்திப்புத் திட்டத்தை ஏற்படுத்தித் தருவார்கள்.

உங்களுக்கு ஒரு சந்திப்புத் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வில்லை என்றால், கேட்டுப் பெற்றுக் கொள்ளவும்.  
பட்டாணி புலாவ் செய்வது எப்படி?
உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகள் உங்கள் பிள்ளையின் மருத்துவமனை சந்திப்புத் திட்டத்திற்குப் பின்பு வரை அவன், 

கீறல் காயத்தைப் பாதிக்கக் கூடிய குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். 

அவை பின் வருவனவற்றை உட்படுத்தும்: 

தீவிரமான நடவடிக்கைகள் கால் பந்து அல்லது ஹொக்கி போன்ற மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடிய போட்டி விளை யாட்டுக்கள் 

சைக்கிள் ஓட்டுதல் சில வாரங்களுக்குப் பின், உங்கள் பிள்ளை தன் வழக்கமான பௌதீக நடவடிக்கை களுக்குத் திரும்பலாம்.

பிரச்சினைகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்தல் பெரும்பாலான பிள்ளைகளுக்கு, அறுவைச் சிகிச்சையின் பின்னர் நிவாரண மடைவதில் எந்தப் பிரச்சினையு மிருக்காது. 

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உங்கள் பிள்ளையின் விதைப்பை வீங்கலாம் அல்லது நசுக்குக் காயமடைந்திருக் கலாம்.
 
இது சில நாட்களின் பின்னர் சரியாகி விடும். சில பிள்ளைகளு க்கு விதைப்பையில் அல்லது மருத்துவர் அறுவைச் சிகிச்சைக் காகக் கீறிய இடத்தில் தொற்று நோய் உண்டாகலாம்.

உங்கள் பிள்ளைக்கு பின்வரும் அறிகுறிகளு க்குள் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளி ருந்தால் அவனுக்குத் தொற்று நோய் இருக்கலாம்.
உணவுக்குழாய் புற்று நோயை தடுப்பது எப்படி?
கீறப்பட்ட காயத்தில் வலி அதிகரிப்பு கீறப்பட்ட காயம் சிவப்பாக இருத்தல் கீறப்பட்ட காயத்தில் வீக்கம் கீறப்பட்ட காயத்தில் 

திரவக் கசிவு காய்ச்சல் 38.5℃ க்கு மேற்பட்டிருக்கிறது வாந்தி வயிற்று வலி அல்லது வயிற்றுக் குத்து பசியின்மை களைப்பு 
அல்லது சக்தி யின்மை உங்கள் பிள்ளைக்கு இவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரைச் சந்திக்கவும்.

சில வேளைகளில், அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர், ஒரு ஆண் விதை முறுக்கப் பட்டிருக்கலாம் அல்லது திரும்பவும் மேலெழுந் திருக்கலாம்.

பின்வரும் அறிகுறிகளு க்குள் ஏதாவது ஒன்றிருந்தால், உங்கள் பிள்ளை மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்: 

கடுமையான வலி அல்லது வீக்கம் சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீர் கழிக்க முடிய வில்லை.
உங்கள் பிள்ளையின் ஆண்விதை முறுக்கப் பட்டிருக்கிறது அல்லது திரும்பவும் மேலெழுந் திருக்கிறது என்பது பற்றி நீங்கள் கவலை யடைந்தால்,

மருத்துவ மனையை அழைத்து, கடமையி லிருக்கும் அறுவைச் சிகிச்சை மருத்துவருடன் பேசவும். 

பிரச்சினை இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால் ஏதாவது பிரச்சினை இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால் மருத்துவருடன் பேசவும்.
லாக்டவுனில் வீட்டில் உள்ள பொருளைக் கொண்டு உடற்பயிற்சி செய்வது எப்படி?
உங்கள் பிள்ளையின் அறுவைச் சிகிச்சையை செய்த அறுவைச் சிகிச்சை மருத்துவரை அழைக்கவும்.  

முக்கிய குறிப்புகள் விரை இறக்கும் அறுவை மருத்துவம் என்பது கீழிறங்கா ஆண் விதைகளுக் காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சையாகும்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சில நாட்களுக்கு, ஆண் பிள்ளைகள் தீவிரமான நடவடிக்கை களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். 

பெற்றோர்கள், கீறல்காயம் உள்ள பகுதியை சுத்தம் செய்து பன்டேஜ் மாற்ற வேண்டும்.
Tags: