டெங்கு காய்ச்சல் - Dengue fever !

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித் தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்களைப் பார்ப்போம். 

டெங்குவை பரப்பும் ஈடிஸ் (Aedes) நுளம்பு காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.

நுளம்பின் நீளம் சுமார் 5 மில்லி மீட்டர் இந்நோய் 200 ஆண்டு களுக்கு முன்பே கண்டறியப் பட்டுள்ளது. (நுளம்பினை இந்தியாவில் "கொசு" என்று அழைப்பர் )

நுளம்பின் உணவுப்பழக்கம்

*இவ்வகை நுளம்பு கள் பகல் வேளைகளில் கடிக்கும்.

*முக்கியமாக வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள மனிதர்களின் இரத்தத்தை உட்கொண்டு வாழக் கூடியவை.

*திரும்பத் திரும்பக் கடிக்கும் தன்மை கொண்டவை.

ஓய்வெடுக்கும் பழக்கும்

*வீட்டிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஓய்வெடுக்கும்.

*வீட்டின் இருட்டான மூளைகள், தொங்கிக் கொண்டிருக்கும் ஆடைகள், குடைகள் அல்லது மேசை நாற்காலி போன்ற வைகளின் அடியில் ஓய்வெடுக்கும்.

இனப்பெருக்கம் செய்யும் முறை

*ஏடிஸ் எஜிப்டி வகை கொசுவானது மனிதனால் ஏறப்டுத்தப்பட்ட எல்லா வகையான பாத்திரங்கள் மற்றும்

நீரை சேமிக்கும் பாத்திரங்களில் மிக குறைவாகவே தண்ணீர் இருப்பினும், தங்கள் இனப் பெருக்கத்தை செய்யும்.

*இவ்வகை நுளம்பு களின் முட்டைகள் ஓராண்டிற்க்கும் மேலாக தண்ணீர் இல்லாத சூழ்நிலையிலும் உயிரோடு இருக்கும் தன்மை கொண்டவை.

இனப்பெருக்கத்திற்கு உகந்த இடங்கள்

குளிப்பானகள், பீப்பாய்கள், ஜக்குகள், பாணைகள், வாலிகள், பூந்தொட்டிகள், தாவரத் தொட்டிகள், நீர்தேக்கத் தொட்டிகள், பள்ளங்கள்,

பாட்டில்கள், டப்பா க்கள், டையர்கள், கூறையில் உள்ள நீர்வடி பள்ளங்கள், குளிப்பதனப் பெட்டியி லிருந்து சொட்டும் தண்ணீரை சேமிக்கும் பாத்திரங்கள்,

சிமெண்ட் தொட்டிகள், சிமெண்ட் கலசங்கள், மூங்கில் குடில்கள் (புட்டிகள்) தேங்காய் ஓடுகள், மரத்தி லுள்ள துணை குழிகள்

மற்றும் மழைநீர் தேங்கியுள்ள சேகரிக்கப் பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இவை தங்கள் இனப் பெருக்கத்தை செய்கின்றன.


டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?

டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக் (பெண்) நுளம்பு இந்த வைரசைப் பரப்புகிறது.

இந்நோய்தொற்றக்கூடிய காலம்

டெங்கி காய்ச்சல் கண்ட நபரினால் இந்நோய் உண்டாவதற்கு 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்னரே இவ்வகை 'டெங்கு காய்ச்சலை பரப்பி வைரஸ்'

மனிதனின் உடலிருந்து அந்த நபரை கடித்த நுளம்பு வின் உடலுக்குள் சென்று நுளம்பி ல் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும்.

இந்த கால கட்டத்தில் அன்னுளம்பு மற்றொருவரை கடிக்கும் போது நுளம்பு கடிப்பட்ட நபருக்கு டெங்கு காய்ச்சல் தோன்றுகிறது

டெங்கு காய்ச்ச லினால் பாதிக்கப் படும் நபரின் வயது மற்றும் இனம் எல்லா வயதினர் மற்றும் இருபாலின த்தாரும் பாதிக்கப் படுகின்றனர்.

இரத்தப் போக்குடன் கூடிய டெங்கு காய்ச்சல் திடீரென ஏற்படும்போது குழந்தைகள் இறப்பது மிக அதிகமாக காணப் படுகிறது.

நோய் பரவும் வழிகள்:

"ஈடீஸ்" எனப்படும் நுளம்புகளால் தான் வைரஸ் கிருமிகள் பரவி டெங்கு காய் ச்சல் ஏற்படுகிறது.

'ஈடீஸ்' வகைக் நுளம்புகள், பகல் நேரத்தில் தான் மனிதர் களைக் கடிக்கும். தேங்கிய நீர்நிலை களில் முட்டை யிட்டுப் பெருகக் கூடியவை.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நபரைக் நுளம்பு கடிக்கும் போது பாதிக்கப்ட்டவரின் உடலில்இருந்து வைரஸ் கிருமிகள் நுளம்புக்குப் பரவும்.

பிறகு, இந்தக் நுளம்பு இன்னொருவரைக் கடிக்கும்போத அதன் உடலில் இருந்து வைரஸ் கிருமிகள் அவருக்கும் இந்தக் கிருமிகள் பரவி டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தி விடும்.

மழைக் காலங்களில் தான் நுளம்புகள் அதிகம் உற்பத்தி ஆகி நோயைப் பரப்புகின்றன.

முதன் முறையாக நுளம்பு கடித்து வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்த 3 முதல் 14 நாள்களு க்கும் காய்ச்சல் ஏற்படும்.

7 முதல் 10 நாள்கள் வரை காய்ச்சல் இருக்கும்.

டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

திடீர்க் காய்ச்சல்,

தலைவலி,

தசைவலி,

மூட்டுவலி,

கண் பகுதியில் வலி

தோல் தடித்து சிவத்தல் (RASHES)

தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.

வயிற்று வலி, உமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு

வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்

தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்? அதிக காய்ச்சல்

கண், மூக்கு, வாய், காது, வயிறு மற்றும் தோலில் இரத்தக்கசிவு

டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?

டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்தி லிருக்கும் நீரானது இரத்தக் குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலை யில் உயிரிழப்பு அதிகம்.


ஆய்வுக்கூட சோதனைகள் மூலம் நோயினை கண்டறிதல்

மருத்துவர் நோயினால் பாதிக்கப் பட்டவரின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும்.

டார்ன்குட் டெஸ்ட் என்றும் முறையினை பயன்படுத்தி முழங்கையில் சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்று கின்றனவா என்பதனை கண்டறிய வேண்டும்.


இரத்தப் போக்குடன் கூடிய காய்ச்சல் கண்ட எல்லா நோயாளி களின் உடலிலும் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எனும்

தட்டை இரத்த அணுக்க களின் எண்ணிக்கை குறைந் துள்ளதா என்பதனை சரியாக கண்டறிய வேண்டும்.

அதிர்ச்சி மற்றும் நிலை குலைவு அதாவது சுய நினை விழக்கும் நிலை ஏற்படும் போது வயிறு

மற்றும் மார்பு பகுதிகளில் தேவையற்ற நீர் சேர்க்கை ஏற்ப்ட்டுள்ளதா என்பதனை கண்டறிய வேண்டும்.

நோய்பரப்பும் காரணிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

1. சுயபாதுகாப்பு முறைகளின் மூலம் கட்டுப்படுததல்.

நுளம்பு (கொசு) களை விரட்டும் உடன் பூச்சு களிம்புகள், திரவம், சுருள் மற்றும் மாட்களை பயன் படுத்தவும்.

முழுக்கை சட்டை, பேண்ட்ஸ், மற்றும் கால்உறை பயன் படுத்தலாம்.

குழந்தை களுக்கு பகல் நேரங்களில் துாங்கும் போது படுக்கையை சுற்றி நுளம்பு வலைகளை பயன்படுத்தி கொசுக்கள் கடிப்பதை தவிர்க்கலாம்,

குளிர்பானகள் தேங்கும் நீரினை மற்றும் சிறுசிறு பாத்திர ங்களில் தேங்கும் நீரினை வாரத்திற்கு ஒருமுறை நீக்கும் போது

இந்நோயைப் பரப்பும் கொசுக்களின் இனப்பெருக் கத்தை தடுக்கலாம். சட்டையோடும் விளையாட அனுமதிக்கக் கூடாது.

டெங்கு காய்ச்சல் உள்ளவரால் அடுத்த வருக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த காய்ச்சல் உள்ள நோயாளி தன்னை நுளம்புகள் கடிக்காமல் காத்துக் கொள்ள வேண்டும்

2. உயிரியல் முறையில் கட்டுப்படுத்தல்

லார்வா புழுக்களை உண்ணக் கூடிய வண்ண மீன்களை மீன் தொட்டிகள், நீர் ஊற்றுகள் மற்றும் பிற நீர்நிலை களில் வளர்ப்பதின் மூலம் உயிர் கொள்ளிகளை பயன் படுத்தியும்.


3. இராசாயான முறை கட்டுப்படுத்தல்

லார்வா புழுக்களை அழிக்கக் கூடிய அபேட் என்றும் இரசாயனப் பொருளை நுளம்பு இனப் பெருக்கம் செய்யக் கூடிய இடங்களில் பயன்படுத்தி கட்டுப்ப டுத்தலாம்,

4. சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் கொசு உற்பத்தியை குறைக்கும் முறைகள்

நுளம்பு உற்பத்தி யாகும் சூழலை கண்டறிந்து அகற்றுவது.

வீட்டின் கூரை பல்கானி மற்றும் வீட்டின் முன், ஜன்னல் வழியாக வீட்டினுள் சூரிய ஓளிக் கதிர்கள் உட்புகாமல் தடுக்கும் கட்டிட அமைப்பு களில் தண்ணீர் தேங்கமால் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சேமிக்கும் தண்ணீரை பாதுகாப்பாக மூடி வைப்பது.

பாதுப்பான குடிநீர் வினியோகம்.

ஓவ்வொரு வாரமும் சுற்றுச்சூழலை நீர் தேஙகாமல சுத்தமாக பேணி காத்தல்.

டெங்கு நோயினை கையாளும் முறை

டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும்.

நோயின் அறிகுறிகளை அறிந்து அதற்கேற்றாற்போல் கையாள வேண்டும்.

டெங்குவினால் நிலை குலைவு ஏற்படின் கீழ்காணும் சிகிச்சை முறைகளை பரிந்துரை செய்யலாம்,

-இரத்தத்திலுள்ள பிளாஸ்மா எனும் திரவப்பொருள் இழப்பினை ஈடுசெய்வது

-உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் தொந்தரவுகள் போன்ற வற்றை சரிசெய்வது.

-உடலில் உள்ள இரத்தத்தை புதியதாக செலுத்தி மாற்றிமைப்பது,

தடுப்பு முறைகள்: 

டெங்குவுக்கென தடுப்பூசிகள் கண்டு பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. இது வரை வெற்றி கிட்ட வில்லை. 

இந்த நோய் காணப்படும் நாடுகள்

இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும்.

உதாரணமாக: 

வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ்,
பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற நாடுகளில் பரவி வருகின்றன.
Tags: