புற்று நோய் ஏன்? எப்படி? வருகிறது..

புற்று நோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும்.

இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சி யடைந்த நிலையில் இந்த புற்றுக் கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன.

புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப் பிற்கான முதன்மைக் காரண ங்களில் இதுவும் ஒன்றாகும்.
புற்று நோய் வருவதற்கான அறிகுறிகள் என்னென்ன?
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால்

உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கி யமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவா க்குகிறது.

சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்று கின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன.

இவ்வாறான அதிகப் படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல.

கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும். தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம்.

பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.

கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளை விக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடு மின்றியும் பிரிவுற்று பெருகும்.
பாலின நோய்கள் தெரியுமா? உங்களுக்கு !
இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்து விடும்.

புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத் துக்குள் நுழைந்து விடும்.

இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.

நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும்.

கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற

உடல் உறுப்பு களுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.

இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங் களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும்

பொருள் களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங் களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும.
சிவந்த உதடுக்கு வீட்டிலேயே லிப் கிளாஸ் தெரியுமா?
உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும்

பிறழ்வு களினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது.

இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன.

இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர். அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்ப்படும் மாற்றங் களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது.

மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக் களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்து ள்ளார்கள்.

இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணு க்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள

கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணு க்களை தோற்று விக்கின்றன.

புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப் படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும்.

அவை தன்னிடத் திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும், மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது.
கால்மேல் கால்போட்டு உட்காரும் பெண்ணா நீங்கள்? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும் !
பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணு க்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது.

மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன.
 

இக்கரணியத் தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணு க்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட தாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணு க்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன.

ஆனால் சில நோய்கள், எடுத்துக் காட்டாக இரத்தப் புற்றுநோய், கட்டி இல்லா மலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்று நோயைப் பற்றி படித்தல்,
1-3 வயது வரையிலான குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயை தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப் பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்று நோயியல்) என்று அழைக்கப் படுகிறது.

புற்று நோய் மாந்தரை எந்த அகவையிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்க்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன.

புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கன் கான்செர் சொசைடி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.

புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது. பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும்.

இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது.

இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம்,

வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது. மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன.
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?
சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம் பரியத்திறன்

ஆனது புற்று ஊக்கி களுக்கும் இடத்தை யளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடை வினைகளால் வழக்கமாக பாதிப்படை கின்றன.

நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டு பிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும்

குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கிய மானவையாக கருதப் படுகிறது. பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.

1.மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)

2. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes)

ஏற்படும் பிறழ்வுகள்

முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு

வெகுவாக்கப் படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப் பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
திட்ட மிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால், உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.

இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால், புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்கு விக்கப் படுகிறது.

புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்ப்படுத்த பட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும்.

புற்று நோய்: - ஏன்? - எப்படி?

புற்று நோய்.

`யாருக்கு வேண்டு மானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண்டி ருக்கும் நோய் இது!

ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடித்தால் 95 சதவீதம் குணப்படுத்தி நிம்மதியாக வாழ முடியும்.

இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அளவிற்கு நவீன நோய் கண்டுபிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன.

அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழைத்து, நலமாக வாழ வாய்ப் பிருக்கிறது.

ஆனால் அறிகுறி களை அலட்சியப் படுத்தி விட்டு கண்டு கொள்ளாமலே இருந்தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகிவிடுகிறது.
பெட்ரோலியம் ஜெல்லியின் 23 வகையான பயன்கள் !
'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன் காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக் கேட்டால்

நோய் வரும் முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள் தென்படும்.

அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதைப் போல.

நோய்க்கான அறிகுறி தென்பட்ட வுடன் அப்போதே தேவையான வைத்தியம் செய்து களை எடுத்து விட்டால் நோயிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப் போடலாம்.


இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்து விடுகிறது.

சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
பழைய கல்லறைகளைத் தோண்டும் அரசு - கொரோனாவால் உறைந்த பிரேஸில் !
இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது.

சில வேளைகளில் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கி விடும்.

இதன் பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்து விடுவார்கள்

புற்று நோய்க்கு என்ன காரணம்?

பல காரணங்கள் இருக்கின்றன. பாரம் பரியத்தாலும் வரும். பழக்க வழக்கங் களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும்.

ஆண்களுக் கென்று சில புற்று நோய்களும், பெண்களுக் கென்று சில புற்றுநோய்களும், இரு பாலருக்கும் என்று பொதுவான புற்று நோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும்,
மார்பக காம்புகளைச் சுற்றி முடி இருக்கிறதா? அப்ப இத படிங்க !
விரைப்பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
Tags:
Privacy and cookie settings