தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள் !

வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர் பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரி களை கொண் டுள்ளது.
 




ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப் படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரி க்கிறது. 

வயிற்றில் தொப்பை சேருகிறது. எனவே இலைபோல வயிறு வேண்டும் என் பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர் பானங்கள் போன்றவை களை உட்கொள்ளாமல் கட்டுப் பாட்டோடு இருந்தால்,

இரண்டு வாரங்களு க்குள் அழகான மாற்றம் தெரியும் என்கின்றனர் உணவி யல் நிபுணர்கள். 

மேலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களால் உடல் ஆரோக்கி யத்தை கெடுக்கின்றன. ஆனால் இன்றைய தலைமுறை யினர் விரும்புவது இந்த செயற்கை பானங்களை மட்டுமே. 


இதனால் உடல் நலம் கெடுகிறது என்பதை பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை. அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு பசி உணர்வை கட்டுப் படுத்தும்.

தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி விடும்.

தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவ தில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.
Tags: