யாரேனும் நினைத்தால் விக்கல் வருமா?

நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்’ என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சை யாகவும் சுருங்கி விரிந்து செயல் படுகின்றன.
 


அப்போது ஏற்படுவது தான் விக்கல். தன்னிச்சையாக என்றால்…? உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப் பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. 

அதாவது, அனிச்சைசெயல் போன்றது. உதாரணத்திற்கு ஒரு சம்பவம் : நீங்கள் நடந்து சென்று கொண்டிருக் கிறீர்கள். கீழே தரையில் பெரிய கற்கள் கிடக்கின்றன. அவற்றை நம் கண்கள் பார்க்கின்றன. 

அடுத்த சில மைக்ரோ செகண்ட் நொடிகளிலேயே நம் முளையின் ஹைப்போ தலாமஸ் பகுதியில் இருந்து ஒரு உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. அங்கே பெரிய, பெரிய கற்கள் கிடக்கின்றன. 

அதனால், அந்த கற்களை தாண்டிச் செல்ல வேண்டும். இல்லை யென்றால், விலகிச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

அந்த உத்தரவை மீறிச் சென்றால், காலில் ரத்தக் காயம் வாங்குவது நிச்சயம். ஆனால், அனிச்சை செயல் என்பது அப்படி கிடையாது.

சில அவசரமான நேரங்களில் முளையின் ஹைப்போ தலாமஸ் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே சில நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம். உதாரணம் : வேட்டி கட்டிய ஒருவர் ஒரு வெட்ட வெளியில் நடந்து சென்று கொண்டிருக் கிறார். 

திடீரென்று காற்று வேகமாக வீசுகிறது. அவரையும் அறியாமல் அவரது கை அவர் அணிந்திருக்கும் வேட்டியை பிடிக்கச் செல்கிறது.

இந்த சம்பவத்தில், ஹைப்போ தலாமசில் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கையானது நடவடிக்கை யில் ஈடுபட்டு விடுகிறது. 

பெண்களில் பலர், தங்களது மாராப்பை அடிக்கடி சரி செய்து கொண்டிருப்பார்கள். அது, ஏற்கனவே சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும், சரி செய்வார்கள். இதுவும் அனிச்சைசெயல்தான். 

சரி… இனி விஷயத்துக்கு வருவோம்… விக்கல் நமது உடலுக்கு  தேவையான – பயனுள்ள ஒன்றுதானா என்றால், `இல்லை’ என்பது தான் பதில். பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் நின்றுவிடுகின்றன. 


ஓரிரு நிமிடங்களுக்கு மேல் அது நீடிப்பது மிகக் குறைவே. அவ்வாறு விக்கல் ஏற்படும் போது, பொதுவாக ஒருவர் நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கக் கூடும்.

குறைந்தளவு நேரம் மட்டும் நீடிக்கும் அத்தகைய விக்கல்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் தேவை யில்லை. 

ஆனால், சிலருக்கு சில நாட்கள்வரை இந்த விக்கல் விட்டு விட்டு தொடரலாம். இதற்கு காரணம் ஏதாவது நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.
Tags: