தீக்காயத்தால் ஏற்படும் தழும்புகளை குணமாக்குவது எப்படி?

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும்.

 




இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய பெண்கள் வேலை செய்யும் போது இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள்.

அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவதுஇ துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள்.

இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும். இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும்இ அதைப் பயன்படுத்தினால்இ எந்த ஒரு பலனும் இருக்காது.

ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால்இ தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடுஇ மறையவும் வைக்கலாம்.

இப்போது அது எவ்வாறு என்று பார்ப்போமா !

• சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவிஇ 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 

முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

• தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்கஇ பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால்இ நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.




• கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால்இ தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றிஇ சருமமும் மென்மையாகும்.

• பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. தினமும் குளிக்கும் முன்புஇ பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவிஇ மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

• ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. 

எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும் மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தாலஇ ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.




• தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால்இ அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிஇ தழும்புகளை மறைய வைக்கும். 

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிஇ தினமும் மசாஜ் செய்து வந்தால்இ தழும்புகள் போய்விடும்.
Tags: