உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் !

மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றன.



இந்த ஏழு சக்கரங் களும் உடலின் வெவ்வேறு பகுதிக ளில் அமைந் திருந்தாலும் அவை ஒன்றுக் கொன்று தொடர் புடையவை. ஏழு சக்கரங்க ளையும் அவை கட்டுப் படுத்தும் உறுப்புக ளைப் பற்றியும் தெரிந்து கொள் வோம்.

 மூலாதாரம்

முது கெலும்பின் அடிப் பாகத்தில் அமைந் துள்ள இந்த சக்கரம் தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கே தான் உற்பத்தி ஆகிறது. 

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந் தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.

ஸ்வாதி ஷ்டானம்

இது பாலியல் உணர்வு களை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்தி ருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டி ருக்கிறது.

பாலியல் சக்தியைக் கொடுப் பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது.

மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத் துக்கு உண்டு. ஐம்புல ன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதி லிருந்து தான் கிடைக்கி றது.

பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலு த்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டு ப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக் கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்து தான் உடல் இயக்கச் சக்தி உடலெ ங்கும் விநி யோகிக்கப் படுகிறது.



கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொ ள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்க மடைந்து விடுகின்றன.

கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில் தான் செயல் படுகிறது. இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், ஆகியவை இதன் கட்டுப் பாட்டில் தான் செயல் படுகின்றன.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் ! 

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதர த்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல் புகளின் இருப்பி டமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்ப டுகிறது. இருதயம், நுரையீ ரல்கள், இரத்த ஓட்டம், கல்லீரல், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ண ங்களை வெளிப் படுத்துதல், படைப் பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத் திற்கு உட்பட்டவை.

நம்முடைய புலன்க ளுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத் தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப் பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவு க்குழல், கைகள் இதன் கட்டுப் பாட்டில் செயல் படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக் கண் சக்கரம் என்றும் சொல் வார்கள். இரண்டு புருவங் களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்தி ருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத் தான் கிடைக் கின்றன.

அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷ யங்களை உருவகப் படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல் கிறார்கள்.



பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப் பாட்டில் இருக்கிறது. தண்டு வடம், மூளை யின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப் பாட்டுக்கு உட் பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந் திருக்கிறது. இந்தச்சக் கரத்தின் மூலம் தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத் துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்து கின்ற சக்கரம் இது.

எப்போதும் காதுக்குள் இரைச்சல் ஏற்பட காரணம் என்ன?

என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூ ட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடை க்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப் பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத் துக்கு உட்பட்டது.
Tags: