சோப்பு ஒரு சிறப்பு பார்வை !

சோப்பு பத்தி பேச என்ன இருக்கு?? இருக்கே.. நிறைய இருக்கே… நாம் அன்றாடம் உபயோகிக்கும் சோப்பு நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.
soap
குளியல் சோப்பு , கை கழுவதற்கு என்று தனியாக சோப்பு , முகம் கழுவுவதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியே கடைகளில் விற்கபடுகிறது.

இந்த சோப்புகள் என்னவோ நம்மை கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பது உண்மை தான்..

ஆனால் விளம்பரத்தில் சொல்வது போல் எல்லா சோப்புகளும் 99.9% கிருமிகளை அழிப்பது இல்லை !

பொதுவாக சோப்புகள் இயற்கையாக விளையும் காய்கறி கொழுப்புகள் மற்றும் எண்ணெயிலிருந்து தயாரிக்க படுகின்றன… அவை ரொம்பவே சுத்தமானது.

வெறுமனே தண்ணீர் வைத்து கைகளை கழுவும் போது கைகள் சுத்தமாவது இல்லை! பாக்டீரியா போன்ற கிருமிகள் நம் கைகளில் ஒட்டி கொண்டு தான் இருக்கும்.


அடுத்து நாம் சாப்பிடும் போது அக்கிருமிகள் நம் கைகளில் இருந்து வாய்க்கு சென்று விடும் வாய்ப்புகள் அதிகம்.

சாதாரண சோப்புகள் கூட கிருமிகளை விரட்டும் அதனை ஒழுங்காக உபயோகிக்கும் வழிதனை அறிந்து கொண்டால்..

சோப்பு போட்டு கைகளை நன்கு தேய்த்து   பின் ஓடும் தண்ணீரில் கைகளை கழுவுவது நலம் பயக்கும்..

அதன் பின்னே நல்ல காய்ந்த  சுத்தமான  துண்டில் கைகளை துடைத்து கொள்ளும் போது ஓரளவு சுத்தமாகும்.

உணவு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னே நல்ல தரமான கிருமி நாசினிகள் உடைய சோப்பை  பயன்படுத்தும் போது கிருமிகள் முழுவதும் அழிந்து விடுகின்றன.

சோப்பு வழங்கு பம்ப்(pump dispenser ) போன்றவை சோப்பு கட்டிகளுக்கு ஒரு படி மேல் தான் ..
soap-clipart-soap-bottle-md

கிருமி நாசினிகள் நிறைந்த சோப்புகள் நம் உடம்பின்  சுரப்பிகளில் இருந்து 

சுரக்கும் திரவங்களில் வளரும் நுண்ணுயிர்களை அழிக்க வல்லது.

ஆனால் நித்தம் இத்தகைய சோப்புகளை உபயோகிக்கும் போது

நம் தோலில்  தடுப்பு சுவர் போல் இருந்து நோய் கிருமிகளிட மிருந்து

நம்மை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களும் சேர்ந்ததே அழிந்து போகும்.

இந்த வகை நல்ல பாக்டீரியாக்கள் நம் உடம்பில் சுரக்கும் வியர்வையை தின்று உயிர் வாழும்.

மற்ற நோய் கிருமிகள் நம் வியர்வையை  உண்ணுவது மட்டுமல்லாது  நம்மையும் சேர்ந்தே உண்டு விடும். Staphylacoccus aureys என்பது ஒரு கிருமி..

பருக்கள் , தோல் கொப்புளங்கள் ஆகியவற்றுக்கு காரணகர்த்தா… கிருமி நாசினிகள்

இருக்கும் சோப்பை பயன்படுத்தும் போது  இந்த வகை ஆக்கிரமிப் பாளர்கள்  செத்து மடிகின்றனர்..

இதே சோப்பை நாம் ஏன் துணி துவைக்க பயன் படுத்த கூடாது என்ற கேள்வி எப்பொழுதாவது எழுந்திருக்கிறதா?  

364181_f260


அப்படி செய்தால் நம் முகம் ,கை கால், உடம்பு சுத்தமானது போல்

நம் துணிகளும் சுத்தம் ஆகுமா? கண்டிப்பா ஆகாது..

இந்த வகை சோப்புகளை துணி துவைக்க பயன்படுத்தும்

போது அவை துணிகளில் படிந்திருக்கும் 

அழுக்கை போக்குவது போல் போக்கி திரும்பவும் துணியிலேயே அழுக்கை படிய வைத்து விடும்..

மேலும் உப்பு தண்ணீரில் துணியை துவைக்கும் பொழுது  சோப்பானது அழுக்கோடு சேர்ந்து ஒரு தயிர் போன்ற பொருளாய் மாறி துணியில் ஒட்டி கொள்ளும்!
detergent-cake-500x500

அது தண்ணீரிலும் கரையாமல் நிரந்தரமாய் துணியிலேயே தங்கி 

துணியை நாசமாக்கி  விடும். அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா கதை தான்!

இது போன்ற பின்னடைவுகளை தவிர்க்க செயற்கையாக கண்டுபிடிக்க பட்டது தான் டிடர்ஜெண்ட் (Detergent ). 

இவை துணிகளை சுத்தமாக துவைப்பது மட்டுமின்றி,

 அழுக்கு திரும்பவும் துணியினுள் வந்து ஒட்டி கொள்ளாது காத்து அருள்கிறது . மேலும் இது உப்பு தண்ணீரிலும் நன்கு செயல் படுகிறது!

இந்த டிடெர்ஜெண்டில்  இருக்கும் முக்கிய உட்பொருள் மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகள் (Surfactants ).

இந்த காரணிகள் எவ்வாறு செயல் படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.


தண்ணீரானது நம்மை முழுமையாக நனைத்து நம்மை சொட்ட சொட்ட ஈரம் ஆக்குகிறது என்று நினைக்கிறோம்..

ஆனால் உண்மை அது இல்லை.. தண்ணீருக்கென்று  ஒரு மேற்பரப்பு பதற்றம்(surface  tension ) உண்டு.
தண்ணீரின் மூலக்கூறுகள்(molecules ) ஒன்றை ஒன்று ஈர்த்து  கொண்டு தனி தனி சொட்டுகளாய் இருக்கும் தன்மையுடையது..

இந்த மேற்பரப்பு பதற்றத்தை கொஞ்சம் குறைக்க முடிந்தால் தண்ணீர்  சீராக எல்லா இடமும் பரவி சுத்தம் செய்ய ஏதுவாக இருக்கும்..

இதை  சிறப்பாக செய்து முடிப்பதே இந்த மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகளின்(surfactants ) வேலை !

இப்போ டிடர்ஜெண்ட் எப்படி செயல் புரிகிறது என்று பார்க்கலாம்..

கிரீஸ் , எண்ணெய் போன்ற கறைகள்  ஆடைகளின் மேல் படிந்திருக்கும் போது அதை தண்ணீரினால் தனியே சுத்தம் செய்ய முடியாது.

நாம் அந்த தண்ணீரில் சேர்க்கும் டிடேர்ஜென்ட்டின் கைகளில் தான் இருக்கிறது..

டிடர்ஜெண்ட்டில்  இருக்கும் மேற்பரப்பில் இருந்து செயல்படும் காரணிகளின் (surfactants ) மூலக்கூற்றுக்கு (molecule )  தலை பிரட்டையை  போல தலை  ஒன்று வால்  ஒன்று இருக்கும் .
அதிலே தலைக்கு தண்ணீர் என்றால் கொள்ளை பிரியம். வாலுக்கொ  தண்ணீர் என்றால் தீராத வெறுப்பு.

அதனால் வால்  ஆனது துணிகளில் கறையாய் படிந்திருக்கும் கிரீசையும் எண்ணெயையும் தன்  பக்கம் ஈர்த்து கொள்கிறது…

இந்த தருணத்தில் துணியானது தண்ணீரில் அலசப்படும் போது , தலை பகுதி தண்ணீரின் மேல் கொண்ட பிரியத்தில்

அதன் ஓட்டத்துக்கு ஈடு கொடுத்து ஓடும் போது , வாலும்  பின் தொடர்ந்து தானே ஆக வேண்டும் .

வேறு வழியின்றி எண்ணெயும் கிரீசும் ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பது போல்

வாலை ஒட்டி கொண்டு கிளம்ப நம் கறை படிந்த துணி ஒரு வழியாய் சுத்தம் ஆகி விடுகிறது !!
Tags: