மஞ்சள், பால், மிளகு அருந்துவதால் உண்டாகும் பலன்கள் !





மஞ்சள், பால், மிளகு அருந்துவதால் உண்டாகும் பலன்கள் !

Anonymous
By -
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர் களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர் களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
மஞ்சள், பால், மிளகு அருந்துவதால் உண்டாகும் பலன்கள் !
* குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர வேண்டும்.

நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். 

* இந்த வைத்தி யத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடை பிடிக்கிறார்கள்.

* மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

* பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
*அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.

* மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும் போது, இருமல், சளி சரியாகிவிடும்
Tags: