புனித கஃபாவை தவாபு செய்ய புதிய மேம் பாலம் திறக்கப்பட்டது !

சவூதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களின் உத்தரவுக்கமைய, இரண்டு புனித மஸ்ஜித்களின் விவகாரங்களுக்கான தலைவர் அல்ஷேஹ் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ் அவர்கள், ஊனமுற்ற
புனித கஃபாவை தவாபு செய்ய புதிய மேம் பாலம் திறக்கப்பட்டது !
மற்றும் முதியவர்கள் புனித கஃபாவை தவாபு செய்யவதற்கான தற்காலிகமான மதாப் பாலத்தை கடந்த வியாழக்கிழமை திறந்துவைத்தார்கள்.

அல்ஷேஹ் அல் சுதைஸ் கூறுகையில், தான் இந்த பாலத்தை பரிசோதனை நிமித்தம் திறந்து வைப்பதாகவும், இதன் செயல்முறை திறப்பு வெள்ளிக்கிழமை  நடைபெறும் என்று கூறினார்.

12 மீட்டர் அகலமும் 13 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பாலத்தில், ஒரு மணி நேரத்தில் 1,700 சக்கர நாற்காலிகள் இடமளிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இதேபோல் மற்றொரு மாடிப் பாலமும் (one more level) பின்னர் திறக்கப்பட்டு அது புனித மஸ்ஜித்தின் முதல் மாடியுடன் இணைக்கப்படும். 

விரிவாக்க பணி நிறைவடையும் வரை இந்தப் பாலம் ஊனமுற்ற மக்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வீடியோ :  காட்சி 1காட்சி 2.
இந்தப் பாலத்தின் விரிவாக்கம் பணி முடிந்த பிறகு, அதன் திறன் ஒரு மணி நேரத்திற்கு 105,000 யாத்திரீர்களை உள்ளடக்கக் கூடியதாக அதிகரிக்கும்.

இதன் விரிவாக்கக் காலத்தில் மணி நேரத்திற்கு 48,000 யில் இருந்து 22,000 யாத்ரீகர்ககளை உள்ளடக்கக் கூடியதாக குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags: