உத்தராகண்ட் நிஜ ஹீரோ... யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?

0

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்கள் பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் அனைவரும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். 

உத்தராகண்ட் நிஜ ஹீரோ... யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?
மீட்பு குழுவினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஒட்டுமொத்த நாடும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதை அவர்களது உறவினர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். 

இந்த அபார வெற்றிக்கான பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்.

வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் ஜெனீவாவை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். புவியியலாளர், பொறியாளர் மற்றும் வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார். 

கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

மேலும், நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார். 

அண்டர் கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும் அர்னால்ட் டிக்ஸ் இருந்து வருகிறார். உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு உதவுவதற்காக கடந்த 20 ஆம் தேதி அர்னால்ட் டிக்ஸ். 

இந்த மீட்புப் பணிகள் குறித்து அவர் கூறுகையில், ஆரம்பத்தில், இந்தப் பணி விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்க வில்லை. இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்க வில்லை. 

ஆனால், கிறிஸ்துமஸ் சீக்கிரம் வருகிறது. அந்த சமயத்தில் 41 பேரும் காயமின்றி வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன் என்றார்.

வெற்றியின் ரகசியத்தை உச்சரித்த அர்னால்ட், நாங்கள் அமைதியாக இருந்தோம், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒரு அற்புதமான குழுவாக பணியாற்றினோம். 

தொப்பை போட வைக்கும் செயற்கை குளிர்பானங்கள் !

பொறியாளர்கள், சிறந்த ராணுவம், அனைத்து ஏஜென்சிகள், கூட்டாட்சி அதிகாரம், வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. என்று தெரிவித்தார்.

அவர் சொன்னது போலவே, 41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். 

மீட்புப் பணியின் போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோயிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings