சூட்டிங்கில் சிவாஜி கட்டிய தாலி.... கழட்ட மறுத்த நடிகை !

0

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நாட்டிய பேரொளியாக வலம் வந்தவர் நடிகை பத்மினி. அன்றைய காலக்கட்டத்தில் தன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கொடிகட்டி பறந்தார் நடிகை பத்மினி. 

சூட்டிங்கில் சிவாஜி கட்டிய தாலி.... கழட்ட மறுத்த நடிகை !
பெங்காலி, ரஷ்ய மொழி படங்களிலும் நடித்துள்ளார் பத்மினி. இவர் அறிமுகமான முதல் படமே நடிகர் திலகம் சிவாஜியுடன் தான். 

அதனால் தான் என்னவோ சிவாஜி மீது பத்மினி அளவில்லா அன்பு கொண்டுள்ளார். அதனால் என்னவோ, பத்மினி சிவாஜியுடன் மட்டும் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட பத்மினி 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியுடன் நடித்துள்ளார். 

அதிலும் தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் போன்ற படங்களில் இவர்களின் ஜோடி பொருத்தத்தைப் பார்த்து கண்ணுப் போடாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை குட்டி பத்மினி, பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், நடிகர் சிவாஜிக்கு சுவாமி மலையில் நிஜ திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், சூட்டிங்கில் ஒரு காட்சியில் பத்மினி கழுத்தில் தாலி கட்டுவது போன்று படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பில் நடிகை பத்மினிக்கு தாலி கட்டி விட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் மறுநாள் சிவாஜி தன்னுடைய நிஜ திருமணத்திற்காக சென்று விட்டார். 

ஆனால், பத்மினி சிவாஜி கட்டிய தாலியை கழட்ட மனமில்லாமல் சில மாதங்கள் இருந்து வந்தார். 

அவரது அக்கா ராகினி அதை பார்த்து விட்டு சத்தம் போட்டார். ஆனாலும், பத்மினி அந்த தாலியை கழட்டவில்லை. 

அதன் பிறகு, பத்மினியின் அம்மா, சினிமா வேற... வாழ்க்கை வேற... என்று சில அறிவுரைகள் சொல்லி பத்மினியின் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட வைத்துள்ளார். 

ஆனால், தாய் சொல்லி தான் தாலியை கழட்டினாரே தவிர... தன் மனதளவில் ஒரு போதும் சிவாஜியை தூக்கிப் போடவில்லை பத்மினி என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான செய்திகள் சமூகவலைத் தளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)