பச்சைக்குத்துவது எப்படி? அதற்கு பயன்படும் பொருட்கள் எவை?

0

டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்திக் கொள்ளுதல், இப்போது இளைய தலைமுறை மத்தியில் ஃபேஷன்! பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே பச்சைக் குத்துவது பின்பற்றி வரப்படுகிறது. 

பச்சைக்குத்துவது எப்படி? அதற்கு பயன்படும் பொருட்கள் எவை?
நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்கள் பலரும் அவர்களது கைகளிலும், தாடை பகுதிகளிலும் பச்சைக் குத்துவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

ஆண்களை அவர்களது கைகளில் அவர்களுக்கு பிடித்தமான பெயர்களை பச்சைக்குத்திக் கொள்வார்கள். 1990-களில் இருந்து இதன் மோகம் குறையத் துவங்கியது. 

நாகரீகம் அது, இது என கூறி பச்சை குத்துவதை அன்றைய இளைஞர்கள் தவிர்த்து வந்தனர். பின் 2010-களில் இதன் மோகம் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்தது. 

பச்சைக்குத்துவது டாட்டூவாக உருமாறியது, பல வண்ணங்களில் பல டிசைன்களில் உடல் எங்கிலும் டாட்டூ குத்த துவங்கினர் நமது இளைய சமுதாயத்தினர். 

திரையுலக நடிகர்களின் மூலமாக இது மிக வேகமாக வைரஸ் போல பரவியது என்ற கூறலாம். பெண்கள் மத்தியில் இந்த டாட்டூ பழக்கம் பரவ த்ரிஷா ஒரு முக்கிய காரணம் என கூறலாம். 

பொலிவான சருமம் பெற ஊட்டச்சத்து மிக்க மைசூர் பருப்பு !

த்ரிஷா அவரது மார்பில் குத்திக் கொண்ட டாட்டூ டிசைன் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. 

சில மணி நேரங்களில் விதவிதமான டிசைன்கள், பெயர்களை டாட்டூவாகக் குத்திக் கொள்வது பெருமைக்குரிய விஷயமாகப் பலரும் கருதுகிறார்கள். 

சிலரோ, மற்றவர்களிடம் இருந்து தன்னை  வேறுபடுத்தி, ஸ்பெஷலாகக் காட்டிக் கொள்வதற்கும், ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும் டாட்டூஸ் குத்திக் கொள்கின்றனர். 

இந்த டிசைன்கள் சருமத்தில் நிரந்தரமாக இருக்கக் கூடியவை, சமயத்தில் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பது தான் பிரச்னையே.

பச்சைக்குத்திக் கொள்பவர்களில் 10-ல் ஒருவருக்கு அரிப்பு, வீக்கம், நோய்த்தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பச்சைக்குத்தும் முறை மருந்துப் பொருட்களை கூரிய ஊசி முனையில் வைத்து, தோலின் மேல்புறத்தில் தீட்டுவார்கள். இது, மருந்துப் பொருட்களுக்கு ஏற்ப நிறம் மாறும். 

பச்சைக்குத்துவது எப்படி? அதற்கு பயன்படும் பொருட்கள் எவை?
அந்த நிறமானது மேல் தோலின் உட்பகுதியை அடைந்ததும், நிலையாக அப்படியே இருக்கும். 

இன்னும் சற்று ஆழத்தில் உட்தோலில் ஊசியைச் செலுத்தினால், எந்தக் காலத்திலும் அழியாமல் நிலையாக இருக்கும். டாட்டூஸ் வரைவதில் தேர்ந்த கலைஞர்களிடம் பச்சை குத்திக் கொள்வது நல்லது. 

அங்கு, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் ஊசியைக் கொண்டு பச்சை குத்தப்படுகிறதா, பச்சைக்குத்தும் கலைஞர் கையில் பாதுகாப்பு கையுறை அணிந்திருக்கிறாரா, 

ஒரு முறைக்கும் மேல் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் கிருமி நீக்கம் செய்யப் பட்டுள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும்.

துவரம் பருப்பு சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன?

சிலர், உடலின் எல்லா இடங்களிலும் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள். இதனால், மெல்லிய ரத்தக் குழாய்கள், நரம்புகள் மீது ஊசி படுவதால், ரத்தக்கசிவு ஏற்பட்டு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. 

சிவப்பு வண்ண டாட்டூவில் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். இதனால், சருமப் பாதிப்பு உண்டாகலாம். 

உடல்நலம் பாதிக்கப்பட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், டாட்டூ இருக்கும் இடத்தில் ஸ்கேன் தெளிவாகத் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. 

பச்சை அபாயம்

பச்சைக்குத்துவது எப்படி? அதற்கு பயன்படும் பொருட்கள் எவை?

ஊசியை சரியாகத் தூய்மை செய்யாமல், அதை மற்றவர்களும் பயன்படுத்துவதால் தடிப்பு, புண், கட்டி, பச்சைக்குத்தும் பகுதி அழுகுதல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி, காசநோய், 

பால்வினை நோய்கள் போன்ற பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மிக அரிதாகச் சிலருக்குத் தோல் புற்றுநோய்கூட ஏற்படலாம்.

கேரட் பச்சையாக சாப்பிடுவதன்தால் கிடைக்கும் நன்மைகள் !

பச்சை குத்தப் பயன்படும் பொருட்கள்

கரித்துண்டு (கார்பன்), சைனா மை, இந்தியா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் தீட்டுகிறார்கள்.

குரோமிக் ஆக்சைடு பயன்படுத்தி பச்சை நிறத்தில் தீட்டுகிறார்கள். 

மெர்குரி (பாதரசம்), காட்மியம், டின், அயன் ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப் படுகின்றன.

பச்சை குத்தியதை அழித்தல்

பச்சைக்குத்துவது எப்படி? அதற்கு பயன்படும் பொருட்கள் எவை?

சித்ரமூல வேரை அரைத்துப் பச்சை குத்திய இடத்தில் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். அந்த புண் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணெயை வைத்து வந்தால் சரி செய்யலாம். 

குன்றிமணி விதையை அரைத்தும் தடவலாம். சிரட்டைத் தைலம் என்ற மருந்தை பஞ்சில் வைத்துப் பற்றிட்டால், அந்த இடத்தில் புண் உண்டாகும். 

அந்தப் புண்ணில் தேங்காய் எண்ணெய் அல்லது புங்கன் தைலம் வைத்து வந்தால், விரைவில் குணமாகும். 

இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !

இந்த மூலிகைகளால் தோலில் மேற்பகுதியில் பச்சை குத்திய அடையாளங்கள் மட்டுமே ஓரளவு மறைய வாய்ப்பு உள்ளது. 

இந்த சிகிச்சை புண்ணினை உண்டாக்கும் முறை. எனவே, சித்த மருத்துவரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி செய்வது பாதுகாப்பானது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)