குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

0

பெருங்குடல் மலக்குடலுக்குரிய புற்று நோய் (Colorectal cancer) என்பது பெருங்குடலின் பகுதிகளில் ஏற்படும் புற்று நோயைக் குறிக்கிறது.

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !
இது பெருங்குடலின் சுவர்களில் பாலிப்களை உருவாக்குவதில் இருந்து இது துவங்குகிறது. இந்த பாலிப்களின் அதிகப்படியான பெருக்கம், செரிமானப்பாதையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

இந்த பாலிப் செல்கள், புற்றுநோய் ஏற்படுத்தா தன்மை கொண்டதாக இருப்பின் அவை சிறிய அளவிலான அசவுகரியத்தையே நமக்கு பரிசாக அளிக்கிறது. 

இதுவே, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களாக இருப்பின், அது நமது உயிருக்கே பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் கவனம் வேண்டும் !

​பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய் ஏன் ஆபத்தானது என்றால், இதை கண்டறிவது மிக கடினமான வேலை ஆகும். 

இந்த கட்டுரையில், நாம் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஏன் குடல் புற்றுநோய் குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். 

குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கு காண்போம்.

​மலச்சிக்கல்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

குடல் இயக்கங்களில் சுணக்கம் அல்லது பாதிப்பு இருப்பின், அது பல்வேறு உடல்சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. 

போதிய நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகள், போதிய அளவு நீர் அருந்தாமை உள்ளிட்ட காரணங்களினாலேயே, குடல் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. 

போதிய நார்ச்சத்து மற்றும் நீர் இல்லாதபட்சத்தில், குடல்கள் வறண்டு போய் விடுகின்றன. 

இது உணவு செரிமானத்தின் போது ஏற்படும் கழிவுகளை,. உடலில் இருந்து வெளியேற்றும் பணியை மிக கடுமையானதாக ஆக்கி விடுகின்றன.

மலச்சிக்கல், நமது உடலில் பெரிய பாதிப்பு ஏற்படப் போகிறது என்பதை அறிவிப்பதற்கான எச்சரிக்கை மணி ஆகும். 

மலச்சிக்கல் முற்றிய நிலையில், அது குடல் புற்றுநோய் ஆகவும் மாற வாய்ப்பு உண்டு. செரிமானத்தின் விளைவாக ஏற்பட்ட கழிவுகள், குடல் பகுதியில் தங்கும். 

யாரிடமும் சொல்லாத ரகசியம் சொல்லிவிட்டு கண்கலங்கிய நயன்தாரா !

குடல் புற்றுநோய் காரணமாக, அதன் சுவர்களில் உருவான பாலிப்கள், இந்த கழிவுகளின வெளியேற்றத்தை தாமதப்படுத்தும். இதன்காரணமாக, நமது உடலுக்கு பல அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. 

நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்தாலே, உடனடியாக மருத்துவரை அணுகி, குடல் புற்றுநோய் தொடர்பான சோதனையை மேற்கொள்வது நலம்.

​வயிற்றுப்போக்கு

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !
வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் எதிரெதிர் பண்புகளை கொண்டு இருந்தாலும், அவைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான் உள்ளன. 

நாம் உட்கொள்ளும் உணவில், போதிய அளவிற்கு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் இல்லாத பட்சத்தில், மலச்சிக்கலும், அதிகளவில் நீர்ச்சத்து இருக்கும் பட்சத்தில், வயிற்றுப் போக்கும் நமக்கு ஏற்படுகிறது. 

வயிற்றுப்போக்கின் விளைவாக நாம் விரைவில் சோர்ந்து விடுகிறோம். 

ப்ளு காய்ச்சல் போன்ற நேரங்களில், நமக்கு வயிற்றுப்போக்கும் சேர்ந்து ஏற்பட்டால், நமது உடலில் உள்ள முக்கியமான சத்துக்கள், இந்த சீதபேதியின் வழியாக, நமது உடலை விட்டு வெளியேறி விடுகின்றன.

வயிற்றுப்போக்கு அல்லது சீதபேதியும், குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். 

குடலின் சுவர்களில் உருவாகியுள்ள பாலிப்கள் அல்லது கட்டிகள், உணவுக்கழிவை வெளியேற்றும் நிகழ்வை தாமதப்படுத்துகின்றன. 

அதாவது சீதபேதியின் போது, இந்த கழிவுகள், திரவ நிலையில் வெளியேறுகின்றன. இதே நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், மருத்துவரிடம் சென்று தகுந்த ஆலோசனை பெறுவது நல்லது.

​மலம்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

நாம் சாதாரணமாக கழிக்கும் மலம், நீளமாகவும், திட வடிவிலும் மற்றும் உருளை வடிவத்திலும் இருக்க வேண்டும். 

நாம் உண்ணும் உணவில் உள்ள எல்லா சத்துகளும் முழுமையாக உறிஞ்சப்பட்டு, அதன் கழிவுகள் உடலில் சிறிதளவும் தங்காமல், முழுமையாக வெளியேறுவதற்கு இது அடையாளம் ஆகும். 

நாம் கழிக்கும் மலத்தின் வடிவத்தில் மாறுபாடு இருப்பின் நமக்கு ஏதோ பிரச்சினை என்று அறியலாம்.

கிராமத்து கொத்துக்கறி குழம்பு செய்வது எப்படி?

நாம் வெளியேற்றும் மலம், விந்தையான வடிவத்தில் இருந்தால், அது நமது குடலில் ஏதாவது பாதிப்பு இருப்பதற்கான அறிகுறியாக கருத வேண்டும். 

மலம் சிறிய அளவிலோ அல்லது ரிப்பன் வடிவத்திலோ இருந்தால், நமது குடலின் சுவர்களில், அதிக தடைகள் இருப்பதாக அர்த்தம். 

நீங்கள் கழிக்கும் மலத்தில் ஏதேனும் வித்தியாசம் தெரிந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது உத்தமம்.

​குடல் இயக்கங்களில் சுணக்கம்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

சாதாரணமாக, நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இரண்டு குடல் அசைவுகள் இருக்கும். இந்த குடல் இயக்கங்கள், அவரவர்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாறுபடும். 

உணவை மெல்லுவது, விழுங்குவது, சிறுநீர் போவது உள்ளிட்ட தினசரி இயக்கங்களினால், நமது குடல் இயக்கங்கள் பெரிதாக பாதிக்கப்படுவது இல்லை.

ஆனால், நாம் கழிப்பறையில் குறிப்பிடத்தக்க வலியையோ அல்லது அசவுகரியத்தையோ உணர்ந்தாலோ ஏதாவது பெரிய பிரச்சினை உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். 

மலத்தை வெளியேற்ற கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டி இருப்பின், நமது குடல் பகுதியில் பாதிப்பு இருப்பதாக அர்த்தம். 

குடலின் சுவர்களில் பாலிப்கள் அல்லது கட்டிகள் இருந்து கொண்டு, மலத்தை வெளியேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த தடைகள், புற்றுநோய் கட்டிகளாக மாறி, நமது உயிருக்கே, பெரும் ஆபத்தாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. 

இந்த பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவரை அணுகி, குடல் இயக்கத்தை சீராக்குவதற்கான சிகிச்சையை தக்க நேரத்தில் மேற்கொள்வது நல்லது.

​வயிற்று பகுதியில் வலி

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

வயிற்று வலி மிக அசாரணமான ஒன்றாக கருத முடியாது. அவர்கள் எந்த வகை உணவு சாப்பிடுகிறார்கள் என்பதை பொறுத்தும் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், பீன்ஸ், புரோக்கோலி,புருசல்ஸ் ஸ்புரவுட்ஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிடும் போது அவரும் வயிறு சம்பந்தமான உபாதைகளால் பாதிக்கப்படுவார். 

வயிற்று வலி என்பது எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படும் அசவுகரிய நிலை ஆகும். 

ஆனால், இதே அசவுகரியம் தொடர்ந்து நீடிக்குமேயானால், அது நமது உடலில் பாதிப்பு இருப்பதன் அறிகுறியாக நாம் கருத வேண்டும்.

கழுத்து வலி நீங்க உதவும் சில யோகாசனங்கள்... செய்து பாருங்கள் !

குடல் பகுதியில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் மட்டுமே, வயிற்று வலி போன்ற அசவுகரியங்கள் நமக்கு ஏற்படும். இந்த அடைப்புகள், புற்றுநோய் கட்டிகளாகவும் மாறவும் வாய்ப்புகள் அதிகம். 

இவ்வாறு மாறி விட்டால், அது நமது உடலுக்கு பெரும் ஆபத்தாய் முடிந்து விடும். வயிற்றுப் பகுதியில் சிலருக்கு ஏற்படும் பிடிப்புகள், சிலருக்கு அதிக வலி அளிப்பவையாய் இருக்கும். 

இது கட்டி ஏற்படுவதன் அறிகுறி ஆகும். இதை நாம் அசாதாரணமாக கருதி அலட்சியம் செய்து விட்டால், அது குடலின் இயக்கத்திற்கே வேட்டு வைத்து விடும் என்பதை மறந்து விட வேண்டாம். 

தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று அதன்படி நடந்துகொள்வது நல்லது.

​மலத்தில் இரத்தம் வெளியேறுதல்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

மலம் கழிக்கும் போது சிலருக்கு அதில் ரத்தம் இருப்பதை பார்த்து இருப்போம். 

பீட்ரூட் போன்ற நிறம் அதிகம் கொண்ட உணவு வகைகளை சாப்பிடும் போது, இது போன்ற ரத்த நிறத்தில் மலம் வெளியேறுவது சாதாரண நிகழ்வு தான். 

மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்களுக்கு, அவ்வப்போது, இந்த ரத்த நிறத்தில், மலம் வெளியேறி வருகின்றன.

மலத்தில் அடிக்கடி ரத்தம் வெளியேறினால், குடல் பகுதியில் கட்டிகள் இருப்பதாக அர்த்தம். 

இந்த கட்டிகள் பல்கிப்பெருகி, நமது உடலின் கழிவுகளை வெளியேற்றுவதற்கு பெரும் தடையாக அமைந்து விடும். 

மலத்தில் ரத்தம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்வது நலம்.

​திடீர் உடல் எடை இழப்பு

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

திடீரென்று உடல் எடையில் இழப்பு ஏற்படும் நிகழ்வும், குடல் பற்றுநோய் இருப்பதற்கான அறிகுறி ஆகும். ஆனால், இதை முதன்மை அறிகுறியாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. 

வயிற்று வலி அல்லது வயிற்று பகுதிகளில் அசவுகரியம் உள்ளிட்டவைகளினாலும் சிலருக்கு உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. 

ஏதேனும் உணவு வகைகள் நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், அவ்வகை உணவுகளை நாம் தவிர்த்தல் வேண்டும்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?

சிலர் குறைவான அளவிலேயே உணவுகளை உட்கொள்வர் அல்லது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கொண்ட உணவு வகைகளை அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பர். 

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், நமது உடலுக்கு இன்றியமையாதது ஆகும். 

திடீரென்று உடல் எடை குறைந்தாலோ, வயிற்று வலி உள்ளிட்ட அசவுகரியங்களை உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

​அடிக்கடி கழிப்பறை செல்லுதல்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

அடிக்கடி மலம் கழித்தல் உணர்வும், குடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதற்கான அறிகுறி ஆகும். 

அதே போல், வயிற்று வலி, ப்ளு காய்ச்சல், போன்ற பாதிப்பு காலங்களிலும், இது போன்று அடிக்கடி கழிப்பறைக்கு செல்லும் நிலை ஏற்படலாம்.

அடிக்கடி மலம் கழிக்கும் உணவு ஏற்பட்டால், நமது உடலின் செரிமான மண்டலத்தில் பாதிப்புகள் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டும். 

குடலின் சுவர்களில் பாலிப்கள், கட்டிகள் இருப்பின் அது மலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தும். 

இந்த கழிவுகள் முழுமையாக வெளியேறாத பட்சத்தில், சிறிது சிறிதாக வெளியேறும் நிகழ்விலேயே, நமக்கு அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. 

இதே நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கும் பட்சத்தில், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

​​அதிக சோர்வு

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

தொடர் சோர்வு, அசதியால், அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளின் பாதிப்புகளாக இருக்கலாம். 

அவர்களது உறக்க முறைகளில் ஏற்படும் மாறுதல்களாக இருக்கலாம். அவர்களது வாழ்க்கை நடைமுறைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

தொடர்ச்சியான உடல் சோர்வு மற்றும் அசதி நிலையானது, குடல் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறி என்றே நாம் கருத வேண்டும். 

குடலின் சுவர் பகுதிகளில் உருவாகி உள்ள பாலிப்கள், கட்டிகள் போன்றவைகளின் வழியாக, கழிவுகள் செல்லும் போது அவை உடைபடுகின்றன. இதன்காரணமாக, ரத்தம் வீணாகின்றது. 

எலும்பு முறிவுக்கு என்ன செய்வது? அதற்குரிய முதலுதவி என்ன?

இதே நிலை தொடரும் பட்சத்தில், அது ரத்த சோகை அல்லது அனீமியா ஏற்பட காரணமாக அமைகின்றது. 

மலத்தில் ரத்தம் வெளியேறும் பாதிப்பு கொண்டவர்கள், தொடர்ந்து இதேநிலை நீடிக்கும் பட்சத்தில், அவர்கள் மிகுந்த சோர்வுடன் காணப்படுவர். 

இவர்கள் மருத்துவரை அணுகி, குடல் புற்றுநோயை கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்வது நல்லது.

வாயுப்பிடிப்பு அல்லது வீக்கம்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

சில வகை உணவுகள், சிலருக்கு வாயுப்பிடிப்பு அல்லது வீக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். இது குடல் இயக்கத்தின் போது சில அசவுகரியங்களையும் ஏற்படுத்தி விடும். 

நமது செரிமான மண்டலம், சில வகை உணவுகளை செரிமானத்திற்கு உட்படுத்தும் போது அதை சிதைக்க மிகவும் சிரமப்படும்.

சிலருக்கு உடலில் வாயுப்பிடிப்பு அல்லது வீக்கம் இருக்கும். இது குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக கருதலாம். 

சிறு குடல் பகுதியில் உருவாகியுள்ள கட்டிகள், மலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றுவதில் தடைகளை ஏற்படுத்துகின்றன. 

இந்த தடைகள் அதிகரிக்கும் பட்சத்தில், அது வாயுப்பிடிப்புகள் ஆகவும், வீக்கங்கள் ஆகவும் உருமாறுகின்றன. இது நமக்கு அசவுரியத்தையே பரிசாக அளிக்கிறது. 

இந்த நிலை தொடரும் பட்சத்தில், மருத்துவரை அணுகி, குடல் புற்றுநோயை கண்டறிவதற்கான சோதனையை செய்துகொள்ளுதல் நலம்.

​சுவாசித்தலில் பிரச்சினை

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

இரத்தசோகை அல்லது அனீமியா பாதிப்பு ஏற்பட்டு உள்ளவர்களுக்கு, சுவாசித்தலிலும் பிரச்சினை ஏற்படுகிறது. 

குடலின் சுவர் பகுதிகளில் உள்ள பாலிப்கள், கட்டிகள் உடைந்து ரத்தம் வெளியேறுவதால், மலத்தில் ரத்தம் வெளியேறுகிறது.

ஆப்கன் பெண்களின் நிலை... ஷரியத் சட்டம் என்ன சொல்கிறது?

மலத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறுதல் மற்றும் ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கு அவர்களது உடலில் உள்ள 

ரத்தத்தின் பிளாஸ்மாவில், இரும்புச்சத்து மற்றும் ரத்த சிவப்பு அணுக்கள் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும். 

இரத்தம் அதிகளவு வெளியேறுவதால், நமது உடலுக்கு தேவையான பிராண வாயுவான ஆக்சிஜன் அளவு குறைந்து, அது சுவாசித்தலில் பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

​குமட்டல் அல்லது வாந்தி

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

உணவு அலர்ஜி, வயிறு ப்ளு, சில மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவு உள்ளிட்டவைகளினால், குமட்டல் அல்லது வாந்தி வரும் உணர்வு ஏற்படுகின்றன. 

இந்த உணர்வு, குடல் புற்றுநோயின் அறிகுறி ஆகவும் இருக்க வாய்ப்பு உண்டு. 

குடல் பகுதியில் கட்டிகள் அதாவது சிறு குடலை ஒட்டியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது கட்டிகள் இருந்தால், அது குடல் இயக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

இது அதன் வழியாக திட, திரவ ஏன் வாயு வடிவிலான கழிவுகளையும் வெளியேற்ற தடை விதிக்கும். 

இது மலச்சிக்கல் மற்றும் வீக்கம் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும். மலச்சிக்கல் அல்லது வீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், குமட்டல் அல்லது வாந்தி வரும் உணர்வுக்கு உட்பட்டு இருப்பர்.

​கல்லீரலில் வீக்கம்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

சில வகைகளில், குடல் புற்றுநோயின் பாதிப்புகள், உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது. 

குடல் புற்றுநோய் முற்றும் பட்சத்தில், கடுமையாக பாதிக்கப்படுவது கல்லீரலே ஆகும். மெட்டாஸ்டாக்டிக், ஸ்டேஜ் 4 குடல் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், கல்லீரல் விரிவு அடையும் நிலை உண்டாகும். 

சிறுநீர்ப்பை அழற்சி என்றால் என்ன?

இது வயிற்றின் மேற்பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு அசவுகரியத்தை பரிசாக அளிக்கிறது. 

கல்லீரலில் பித்த நாளங்களின் செயல்பாடுகள் தடைபடுவதால், மஞ்சள் காமாலை பாதிப்பையும் இது ஏற்படுத்துவதாக அமைகிறது.

சிறுநீர் பாதையில் அடிக்கடி ஏற்படும் தொற்றுக்கள்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றுக்களை, சிறுநீர்ப்பை தொற்றுக்கள் என்றும் அழைக்கிறோம். 

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், அவசரம், தசைப்பிடிப்பு, சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டின் இழப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். 

இந்த பாதிப்புகளானது, ஆண்களை விட, பெண்களுக்கு அதிகளவில் ஏற்படுகின்றன.

சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களுக்கு பாக்டீரிய பாதிப்பு முக்கியமான காரணமாக அமைகிறது. இதே நிலை, குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகவும் கருதப்படுகிறது. 

சிறுநீர் கழிக்கும் போது, சிறுநீர்ப்பையில் ஏற்படும் அதிக அழுத்தம், உள்ளிட்டவை நமக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி விடுகின்றன.

​வீங்கிய நிணநீர் கணுக்கள்

குடல் புற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அறிகுறிகள் !

நிணநீர் கணுக்கள் என்பது மனித உடலின் நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதியாகும். 

அவை மனித உடலில் உள்ள டான்சில்ஸ், மண்ணீரல் மற்றும் அடினாய்டுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கின்றன.

குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு கல்லீரலை தொடர்ந்து லிம்ப் நோடுகள் எனப்படும் நிணநீர் கணுக்களிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இந்த லிம்ப் நோடுகள், கழுத்து, அக்குள்,முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும். 

பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கி அந்த வாழ்க்கையை தொலைக்கும் இளசுகள் !

நோய்த்தொற்றை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக போராடும் திரவங்களை இது தன்னுள் சுரக்கின்றன என்று லண்டன் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு, லிம்ப் நோடுகளில சுரக்கும் திரவம், ரத்தத்துடன் கலப்பதில் தடை ஏற்படுகிறது. 

இதன் காரணமாக, அந்த லிம்ப் நோடுகளில் அதிக வீக்கம் ஏற்படுகின்றன. இந்த நிலைக்கு லிம்படெமா என்று பெயர். இது லிம்ப் நோடுகளில் ஏற்படும் வீக்கங்களை பொறுத்து வகைப்படுத்தப் படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)