கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் பின்னணி என்ன?

0

திருவாரூர் மாவட்டம் மறையூர் தான் இவர்களது பூர்வீக கிராமம். இவர்களது தந்தை ராமதாஸ் மின்வாரியத்தில் உதவி பொறியாளராகப் பணி புரிந்தார். 

எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.ஸ்வாமிநாதன்

இதன் காரணமாக கும்பகோணம் மாதுளம் பேட்டையில் குடியேறினார். சில ஆண்டுகள் கழித்து பணியிட மாறுதலில் குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விட்டார். 

அதன் பின்னர் அவர் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று விட்டதாகவும், சகோரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர். ஸ்வாமிநாதன் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் வந்த இவர்கள், விஐபி ஏரியாவான ஸ்ரீநகர் காலனியில் சொந்தமாக வீடுகட்டி செட்டிலானார்கள். 

கொற்கை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பசுமாடுகளுடன் பால் பண்ணை ஆரம்பித்தனர். தொடர்ந்து ‘விக்டரி ஃபைனான்ஸ்' என்ற நிதி நிறுவனம் தொடங்கினர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக அருகில் உள்ள கிராமத்தில் சுமார் 100 பசு மாடுகளை வாங்கி கிரீஷ் பால் பண்ணை என்ற பெயரில் பால் பண்ணை ஒன்றைத் துவங்கி நடத்தி வந்தார்கள்.

தித்திப்பான மாம்பழ சட்னி செய்வது எப்படி?

இதற்குச் சில   நாட்களுக்குப் பிறகு, "விக்டரி பைனான்ஸ்" என்ற பெயரில் வங்கியல்லாத நிதி நிறுவனம் ஒன்றைத் துவங்கினர். 

விக்டரி ஃபைனான்ஸ் நிதி நிறுவனம்

சில ஆண்டுகளுக்கு முன் எம்ஆர் கணேஷின் மகன் அர்ஜுனின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட போது ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

உடல் எடை குறைக்க ஓட்ஸ் டயட் ரொட்டி செய்வது எப்படி?

சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கத் தொழில் செய்து வருவதாக சொல்லி வந்தனர். அதோடு, கொற்கை பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தனர். 

ஆம்புலன்ஸ் சேவைக்கும், சுற்றுலா செல்லவும் ஹெலிகாப்டர் வாடகைக்குக் கிடைக்கும்' என நாளிதழ்களில் பெரும் செலவு செய்து விளம்பரம் செய்து, அர்ஜுன் ஏவியேஷன்' என்ற நிறுவனத்தையும் தொடங்கினர். 

20க்கு மேற்பட்ட கார்கள் வைத்துள்ள அவர்கள் தங்களைப் பாதுகாக்க செக்யூரிட்டிகளையும் நியமித்துக் கொண்டனர்.

இப்படி அனைவரிடமும் தங்களைப் பற்றி பிரமாண்டமான இமேஜை உருவாக்கினர். இந்த அடிப்படையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முகவர்களும் நியமிக்கப்பட்டனர்.  

(nextPage)

விளம்பரங்களை நம்பி

ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்

தங்களுடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி ஏஜென்ட்டுகள் மூலமாக செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் குறி வைத்து கோடிகளில் பணம் வசூல் செய்து வந்தனர். 

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு செய்வது எப்படி?

இந்த நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் ஓராண்டில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. 

இந்த விளம்பரங்களை நம்பி, பெரும் எண்ணிக்கை யிலானவர்கள் தங்கள் பணத்தை விக்ட்ரி ஃபைனான்சில் முதலீடு செய்தனர். துவக்கத்தில் சிலருக்கு மட்டும் பணத்தைக் கொடுத்த இவர்கள், ஒரு கட்டத்தில் இழுத்தடிக்க ஆரம்பித்தனர். 

ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஹெலிகாப்டர் பிரதர்ஸ் யாருக்கும் சரியாகப் பணத்தைத் திருப்பித் தரவில்லை எனப் புகார் கிளம்பியது.

இந்த நிலையில் தான் இந்த விக்ட்ரி ஃபைனான்சில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்த பைரோஜ் பானு - ஜபருல்லா தம்பதி தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய்யை அணுகி புகார் ஒன்றை அளித்தனர். 

பைரோஜ் பானு - ஜபருல்லா தம்பதி

அதில், இந்த நிறுவனத்தின் தின வருவாய்த் திட்டத்தில் சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும் தற்போது பணத்தைக் கேட்டால் திருப்பித் தர மறுப்பதாகவும் 

அரசியல் கட்சியில் செல்வாக்கு இருப்பதால் தங்களை ஏதும் செய்ய முடியாது என்று கூறியதாகவும் அவர்களது புகாரில் கூறப்பட்டிருந்தது.

பலாக்கொட்டை மாங்காய் அவியல் செய்வது எப்படி?

கும்பகோணம் முழுவதும் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. குடந்தையில் மெகா மோசடி ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நடத்திய நிறுவனத்தில் வர்த்தகர்கள் 

மற்றும் பொதுமக்களை ஏமாற்றி 600 கோடி ரூபாய் மெகா மோசடி செய்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா. இப்படிக்கு பாதிக்கப் பட்டவர்கள் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப் பட்டுள்ளது.

(nextPage)

12 சொகுசு கார்கள்

குடந்தையில் மெகா மோசடி ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

இவர்களது பால் பண்ணையில் பணியாற்றியவர்கள் உட்பட பலரும் இவர்கள் மீது புகார்களைக் கொடுத்தனர். இதையடுத்து இந்த சகோதரர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

வழக்கை மாவட்ட குற்றப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்தது. விக்ட்ரி ஃபைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது அங்கிருந்த ஸ்ரீகாந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

சகோதரர்கள் இருவரும் தலைமறை வானார்கள். இதையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அத்துடன் எம்.ஆர்.கணேஷ் மனைவி அகிலா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். 

12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன

சென்னை, பாண்டிச்சேரி, வடலூர் உள்ளிட்ட ஊர்களில் செல்போனை வைத்து ஆய்வு செய்து தேடிச் சென்றனர். ஆனால் அந்தத் தேடுதல் வேட்டையில் அவர்கள் சிக்கவில்லை. 

இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமாராவதி அருகேயுள்ள வேந்தன்பட்டி கிராமத்தில் வக்கீல் ஒருவரின் பண்ணை வீட்டில் அவர்கள் பதுங்கி யிருப்பதாகத் தகவல் கிடைத்தது. 

பின்னர் இன்று மூன்று தனிப்படை போலீஸ் குழுக்கள் தலமையிலான போலீஸார் பண்ணை வீட்டைச் சுற்றி வளைத்து அவர்களைக் கைது செய்தனர். 

மேலும் அவர்களிடமிருந்து 13 பேக்குகள், உயர் ரக கார், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். 

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

இதையடுத்து தஞ்சாவூர் குற்றப்பிரிவு அலுவகத்துக்கு ஹெலிகாப்டர் சகோதரர்களை அழைத்து வந்து, பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

(nextPage)

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்ற பெயர் ஏன்?

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்ற பெயர் ஏன்?

இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான பால் பண்ணைக்கு அருகிலேயே ஹெலிபேட் ஒன்றை அமைத்து, அவ்வப்போது ஹெலிகாப்டரில் பயணங்களை மேற்கொண்டு வறுவது, 

ஹெலிகாப்டர் வாடகைக்கு விடுதல் போன்ற காரணங்களுக்காக இவர்களுக்கு ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்ற பெயர் ஏற்பட்டது. இவர்களுக்கென தனியாக செக்யூரிட்டிகளையும் வைத்திருந்தனர்.

2019 ஆம் ஆண்டில் ஐம்பது லட்ச ரூபாய் முதலீட்டில் "அர்ஜுன் ஏவியேஷன் பிரைவேட் லிமிட்டெட்" என்ற பெயரில் விமான நிறுவனம் ஒன்றையும் எம்.ஆர். கணேஷ் பதிவு செய்திருந்தார். 

15 கோடி ஏமாந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியர் கூறியதாவது

15 கோடி ஏமாந்த ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியர் கூறியதாவது

இந்த நிலையில், ஜபருல்லா - பைரோஜ் பானு தம்பதியர் நேற்று கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி எங்களிடம் ரூ.15 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த ஹெல்காப்டர் பிரதர்ஸ் மீது புகார் கொடுத்திருந்தோம். 

பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோரிடமும் புகார் அளித்திருந்தோம்.

அமிலப் பின்னோட்ட நோய் எப்படி ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

கும்பகோணத்தில் பொதுமக்களிடம் மோசடி செய்து வாங்கிய பணத்தை சகோதர்ரகள் வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். மேலும், இவர்களது வங்கிக் கணக்குகள், சொத்துகளை முழுமையாக முடக்கி வைக்க வேண்டும். 

வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதால் அது குறித்தும் போலீஸார் கண்காணிக்க வேண்டும் .

பொது மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் ஏமாற்றியிருப்பதால் சி.பி.ஐ விசாரணையும் நடத்தி, அவர்களிடமிருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கொற்கை கிராமத்தில் நடத்தி வரும் பால் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்குச் சம்பளம் தரவில்லை எனவும், அதைப் பெற்று தர வேண்டும் எனவும் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(nextPage)

மேலும் இது குறித்து ஊழியர்கள் கூறியதாவது. 

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள்

ஹெலிகாப்டர் சகோதரர்கள் கொற்கை கிராமத்தில் வெளிநாட்டுப் பசு மாடுகளை வைத்து பால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

அவர்களுக்குச் சில மாதங்களாகவே சம்பளம் தரவில்லை. சம்பளம் கேட்டதற்கு தந்து விடுவதாகச் சொல்லி தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். 

இதே போல் மாடுகளுக்கு வைக்கோல், தீவனப்புல் கொடுத்தவர்கள் எனப் பலருக்கும் அவர்கள் பணம் தரவேண்டியிருக்கிறது.

வீட்டில் செக்யூரியாக பணிபுரிந்தவர்கள், வாட்ச்மேன், கொற்கையில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சம்பளம் தரவில்லை. 

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா !

இவை மட்டுமே ரூ. 80 லட்சம் இருக்கும். இந்த நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. 

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது

எங்களுக்குச் சம்பளம் வழங்கினால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை. எனவே, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். 

இதைப் பெற்றுக் கொண்ட போலீஸார் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்கள் தொடங்கி அவர்களிடம் பணியாற்றி யவர்களிடமும், வர்த்தக ரீதியாக தொழில் செய்து வந்தவர்களிடமும் 

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்திருப்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)