சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 3

0
கருத்தரிப்பு வீதம் : கருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக் குழாய் முறையில், முட்டை களைப் பெற்று வெளியே கருக்கட்டிய  பின்னர், 
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 3
முட்டைகள் பெண்ணின் கருப்பை யினுள் வைக்கப் பட்ட பின்னர், வெற்றிகரமாக கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும்.

அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பை யில் பதிந்திருப் பதை உறுதிப்படுத் துவதையே இது குறிக்கும். 
குழந்தையின் இதயத் துடிப்பு கருத்திற் கெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது, 'வாழும் பிறப்பு வீதம்' (Live Birth Rate) எனக் கருதப்படும்.

பெண்களின் வயது அதிகரிக்கை யில் கருத்தரிப்பு வீதம் குறைந்து செல்லும். அதே போல் உறைய வைக்கப் பட்ட முட்டைகளை கருக்கட்டச் செய்யும் போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளை 

கருக்கட்டச் செய்வதிலும் பார்க்க குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.

சிறந்த உயிரித் தொழில் நுட்பம் காரணமாக இந்த கருத்தரிப்பு வீதமானது அண்மைய வருடங்களில் அதிகரித் துள்ளது.  

கனடாவில் உள்ள அமைப் பொன்று தற்போதைய இம்முறை யால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் 35% எனக் குறிப்பிட் டுள்ளது.
பிரான்ஸில் செய்யப் பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயற்சி செய்த பின்னர் 40% மான பெற்றோ ர்கள் இந்த பரிசோதனை முறையின் போதும்,

மேலும் 26% மான பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந் தையை பெறுகின்றனர்.

இச்சோதனை முறையை இடை நிறுத்திய பின்னர் பெறப்படும் குழந்தைகளில் 46% குழந்தைகளை தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தருப்பு மூலமும் ஏற்படுகின்றது.

இச்சோத னையை இடை நிறுத்தப்பட்ட பின்னர் தன்னிச்சை யாக நிகழும் கருத்தரிப் புக்குக் காரணம் 

வளரூக்கிகள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டபட்டிருப்பதின் பின் விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வாழும் பிறப்பு வீதம்

வாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக் குழாய் முறையில் நடத்தப் படும் மொத்த சோதனைகளில் எத்தனை சதவீத சோதனையில் உயிருள்ள குழந்தை பிறப்பு ஏற்படு கின்றது என்பதைக் குறிக்கும். 

இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப் படுவதில்லை.
அத்துடன் இரட்டைக் குழந்தை களோ, அல்லது மூன்று குழந்தை களோ பிறந்தால் கூட, அதனை ஒரு குழந்தை பிறப்பு என்றே கணக்கில் கொள்ள ப்படும்.

வெற்றி தோல்விக் கான காரணிகள்

இந்த சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வியை நிர்ண யிக்கும் முக்கியமான காரணியாக பெண்ணின் வயது இருக்கின்றது. 

பெண்ணின் வயது 23-39 ஆக இருப்பதே இம்முறை யில் கருத்தரிப்பு நிகழ பெரிதும் உகந்த வயதாகக் காணப் படுகின்றது.

அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலம், கருமுட்டை தூண்டும் வள்ரூக்கியின் (FSH - Follicle Stimulating Hormone) அளவு, முட்டைக் குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக் கின்றன..
மன அழுத்தம்

2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களில், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல் முறைகள் ஆரம்பிக்க ஒரு மாதம் முதலில் இருந்து தொடங்கி செய்யப் பட்ட ஒரு ஆய்வில், 

மன அழுத்த த்திற்கும்  கருக் கட்டலில் கிடைக்கும் விளை விற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என அறியப் பட்டது.

எனவே இதனை இந்த சோதனை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர் களிடம் கூறும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தப் பட்டார்கள். 

ஆனாலும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளை வானது மன அழுத்தத் தையும், மனத் தளர்ச்சியை யும் உருவாக்க வல்லது.

இந்த முயற்சியில் ஏற்படும் செலவீனங்கள் பற்றிய கவலை கூட வசதி குறைந்த பெற்றோர் களுக்கு இவ்வகை யான நிலைமை யைத் தோற்று விக்கக் கூடும். 
அதே வேளை, இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோ ருக்கு தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடும்.

குத்தூசி மருத்துவம்

இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்து வர்களின் பார்வையில், வெளிச்சோதனை முறை கருக்கட்டலுடன்,  குத்தூசி மருத்துவம் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது.

பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையி ன்படி, வெளியே  கருக் கட்டல் மூலம் பெறப்பட்ட முளையம், பெண்ணின் கருப்பையினுள் மாற்றம் செய்யப்படும் போது, 
இந்த குத்தூசி மருத்துவமும் சேர்த்து செய்யப் படுவதால், கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் சிசுவின் விருத்தியும், உயிர் குழந்தை பிறக்கும் நிலையும் அதிகரிக்கும்.

குத்தூசி மருத்து வத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள், இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.

நரம்பியல் சார்ந்தஅகஞ் சுரப்பி யியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள். கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்.
உயிரணு சைகை களைக் கொண்ட cytokine எனப்படும் னுரத மூலக்கூற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள். மன அழுத்தம், மனக் கலக்கம், மனத் தளர்ச்சி என்பவற்றைக் குறைத்துக் கொள்ளலாம்.

கருமுட்டை களை செயற்கை முறையில் பிரித்தெ டுக்கும் போது, வலியைப் போக்குவ தற்காக வழங்கப்படும் வலி நிவாரணி களுக்குப் பதிலாக, 

மின் குத்தூசி மருத்துவ முறையை பயன்ப டுத்துவதால், குறைந்த செலவி னத்தை கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவு களைப் பெறலாம்.

வேறு காரணிகள்
சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் ! பகுதி 3
புகைத்தல், புகைப்பிடித்தல் இம்முறையில் வாழும் பிறப்பு வீதத்தில் 34% வீழ்ச்சியைக் கொடுப்பதுடன், கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவ தற்கான சந்தர்ப்பத்தை 30% ஆல் அதிகரிக்கும்.

உடல் நிறை குறியீட்டெண் 27 ஐ விட அதிகரிக்கு ம்போது, ஒப்பீட்ட ளவில் 20-27 டல் நிறை குறியீட்டெண் உள்ளவர் களைவிட, வாழும் பிறப்பு வீதமானது 33% ஆல் குறைகின்றது.

அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தை யில் அசாதாரண நிலைகள், அல்லது பிறவி ஊனம், 

கருச்சிதைவு, கருத்தரிப்பு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலிய க்குருதி யுறைமை  போன்றனவும், குழந்தை பிறப்பின் போது வேறு பிரச்ச னைகளும் ஏற்படலாம். 

சிறந்த உடல்நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கின்றது. 

வெளிச்சோதனை முற கருக்கட்டலுக்கு முன்னரே பலோப்பியன் குளாய் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவு களைத் தரும்.

முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். மதுசாரம், காஃவின் உள்ளெ டுத்தல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.

டி.அன்.ஏ துண்டாகும் தன்மை (DNA fragmentation] அளவு

கருப்பையினுள் வைக்கப்படும் முளைய எண்ணிக்கை

பயன்படுத்தப்படும் விந்தின் தரம்.
தன்னுடல் தாக்குநோய் கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலை நிறுத்தப் படுவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப் படுகின்றது.

கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிறின் பயன்பாடும் குறைக் கின்றது.

சிக்கல்கள்

இந்த வெளிச்சோதனை முறை கருக்கட்டலில் பல படிநிலை களில் சிக்கல்கள் ஏற்படலாம். அளவுக் கதிகமான கருமுட்டை தூண்டலால் பிரச்சனைகள் வரலாம். 

இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% மான பெண்களில் இது சிறியளவில்/ மிதமான அளவில் காணப்படும். 

இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் 
பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படு வதுண்டு. அவ்வேளை யில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவா தலுக்கான சந்தர்ப்பம் அளிக்கப்ப டுகின்றது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)