நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய சுவாரசியமான விஷயங்கள் !

0

ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ, அதுவாகவே அவர்களின் பிம்பம் நம்மில் தங்கி விடுகிறது.. அப்படித் தான் சில்க் ஸ்மிதாவும். 

நடிகை சில்க் ஸ்மிதா பற்றிய சுவாரசியமான விஷயங்கள்

உடல் வனப்பும் கவர்ச்சியும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லை தான்.

இயற்கையிலேயே அள்ள அழகை பெற்றிருந்தார் விஜயலட்சுமி என்கிற சில்க்.. இவரது இளம் வயதில் யாரையுமே கேட்காமல் நடு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது வறுமை. 

தரித்திரம் கூரை மீது ஏறி தாண்டவமாடி மிரட்டியது.. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் என ஒரேடியாக மென்று தின்று விட்டது.

இறுதியில் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்த அழகுதான் சில்க்கை காப்பாற்றியது.

அப்போது சில்க்-க்கு 18 வயது.. ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைக்க வந்திருந்த போது தான் வினுசக்கரவர்த்தியின் கண்ணில் பட்டுள்ளார். 

அவரது தயவால், வண்டி சக்கரம் சுழல சுழல இவரது வாழ்க்கையும் வேகமாக சுழன்று முன்னேறியது. பளபள முகம், செக்க செவேல் நிறம் கொண்ட நடிகைகள் கூட சில்க்கை பார்த்து ஆச்சரியமும், பொறாமையும் அடைந்தனர். 

முகத்தில் எதுவுமே இல்லாத அந்த வெறுமை, முகசாயங்களே இல்லாத அந்த பொலிவு.. அனைவரையுமே சுண்டி இழுத்தது.

ஆந்திர மாநிலத்தில் 

ஆந்திர மாநிலத்தில்

ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி ஆக பிறந்த சில்க் ஸ்மிதா நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி சென்றவர். 

சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில்க் ஸ்மிதா நடிகையாக வேண்டும் என்ற கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். 

வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குனர் வினுசக்கரவர்த்தி

வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.

தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக் கொண்ட விஜயலட்சுமி முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக் கொண்டார். 

முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதா விற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன.

அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினர். 

இதன் காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார் சில்க் ஸ்மிதா.

போதை கண்கள்

போதை கண்கள்

ஆளுமை போதை ஏறிய கண்களுடன் 'வா மச்சான் வா' என்று பாடவும்.. அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசி வரை அப்படியே தான் அவரை பார்க்க விரும்பினர். 

ஒரு படத்தில் ஹீரோ இருப்பதுபோலதான் சில்க்கும் அன்றைய காலகட்ட படங்களில் நிறைந்திருந்தார்... 

ஒரு பாட்டுக்குத் தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மை பார்த்து கொண்டு சிரிப்பார்.. அந்த அளவுக்கு ஒரு ஆளுமை இருந்தது சில்க்கிடம்..

காசு போனியாகாமல்

காசு போனியாகாமல்

காசு போனியாகாமல் பெட்டியில் தூங்கி கொண்டிருந்த பல படங்களில் இவரது ஒரே ஒரு பாட்டை இணைத்து காசை அள்ளிய கூட்டமும் அதிசயமும் அன்று நடந்தது.. 

தவிர்க்கவே முடியாத தேவையானார் சில்க் ஸ்மிதா. கடித்து விட்டு மிச்சம் வைத்திருந்த ஆப்பிள் துண்டு முதல், சில்க் உட்கார்ந்த சேர் வரை பல ஆயிரம் ரூபாய்க்கு விலைபோயின..

சில்க் போட்டோவை வைத்து எத்தனையோ வார பத்திரிகைகள் பிழைத்தன..

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

நக்சலைட் அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினாலும் தங்கள் வீட்டு பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந்தது.. 

சில்க்கை தவிர வேறு எந்த கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது. ஒருமுறை 'நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க' என்று கேள்வி கேட்டதற்கு, 

'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. அந்த அளவுக்கு முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்த சில்க்.

கோபம்

கோபம்

வலிகள் இறுதி வரை, சதைப் பிண்டமாகவே மக்கள் முன் உலவிய சில்க் ஒரு தங்கமான மனசுக்கு சொந்தக்காரி... 

எனினும், தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு கோபக்காரியாக காட்டி கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு அந்த காலகட்டத்தில் இருந்தது.. 

மரியாதை

மரியாதை

ஏகப்பட்ட வலிகளுடன் தான் இவரது பயணம் தொடங்கியது.கூச்சம் ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும் போதெல்லாம், எல்லோருமே மரியாதைக்காக எழுந்து நிற்கும் போது, சில்க் மட்டும் சேரில் உட்கார்ந்து இருப்பாராம்.. 

இதை பற்றி அவரிடம் அங்கிருந்தோர் பதறி கொண்டு கேட்டதற்கு, 'நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி டிரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்து விடும். 

அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னு தான் உட்கார்ந்தே இருக்கேன்' என்றாராம். 

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த பெண் இப்படி டான்ஸ் ஆடுகிறாரே என்று சிலர் முகம் சுழித்த சூழலிலும், அடுத்தவரின் கூச்சத்தையும் மதித்து நடந்த சில்க் மனசு பற்றி பலர் அறியவில்லை.

வதந்திகள்

வதந்திகள்

பத்திரிகைகள் சில்க் பற்றி வதந்திகள் வராத பத்திரிகைகளே அன்று இல்லை.. எத்தனை கேவலங்கள், அவதூறுகள், உயரங்கள், பள்ளங்கள், வந்தாலும் கலங்காமல் அவைகளை துணிச்சலுடன் கடந்துள்ளார்.. 

ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாகவே இருந்துள்ளார்.

திமிர் பிடித்தவள் என்ற பெயரை அனாயசயமாக தட்டி சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கி பழகியவர்கள் மட்டும் இன்னமும் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.

கவர்ச்சி

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா

பெரும்பாலான திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களே வழங்கப் பட்டாலும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது 

சில்க் ஸ்மிதாவின் கனவு. மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் அசாத்திய நடிப்பால் சக கலைஞர்களை துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. 

பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார்.

நக்சலைட்

நக்சலைட்

வறுமையால் நக்சலைட் ஆக மாற நினைத்தார், ஆனால் முடியவில்லை.. நடிப்பில் சாவித்ரி போல வரவேண்டும் என்று நினைத்தார், அதுவும் நடக்கவுல்லை.. 

கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.. 

அதுவும் ஈடேறவில்லை.. கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்து கொண்டு போய் விட்டது.. அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை.

மர்மங்களும் சர்ச்சைகளும் 

மர்மங்களும் சர்ச்சைகளும்

தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப் படுவதாக எண்ணினார். 

கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.

மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்து உள்ளன. 

கட்டுமானம்

கட்டுமானம்

இறுதி நாட்கள் சமூக ஒழுக்கம், சமூக கட்டுமானம் என்ற வரையறைக்குள் இவரை கொண்டு வந்து பெரும்பாலானோர் பார்க்கவே இல்லை.

தன் அகத்தை யாராவது விரும்பி ஏற்று கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயே தான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன.

வலி நிறைந்த வாழ்க்கையின் மீது, பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும் தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போலும்!!

பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா

'சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று கண்கலங்கி 

வினுசக்ரவர்த்தி ஒரு முறை சொல்லியிருந்தார் என்றால், அதற்கு காரணம் சில்க்-ன் வெள்ளை மனசு தான். இன்றளவும் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்கிறார்.. 

ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த 'கவர்ச்சி புயல்' ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விட்டதே இல்லை. 

ஒரு முறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது. 'ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்?!!'

அனாதை பிணமாக

அனாதை பிணமாக

மர்மங்களால் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் இறுதி வாழ்க்கையில் தாடிக்கார டாக்டர் என்ற பெயர் இன்றளவும் யாரென கண்டுபிடிக்கப் படாமல் மர்மமாகவே இருந்து வருகிறது. 

புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ மனையில் யாரும் பெற்றுக் கொள்ள ஆள் இல்லாத அனாதை பிணமாக வைக்கப்      பட்டிருந்தார்.

தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் ஸ்மிதாவின் உடலை பெற்றுக் கொண்டனர். 

எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

புகழின் உச்சியில் இருந்த போதும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்களை ஒளித்து வைத்திருந்த சில்க் ஸ்மிதா மரணத்தின் போதும் மர்மங்களோடே மண்ணுலகை விட்டு மறைந்தார்.

வாழ்க்கை வரலாறு

நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு

மறைந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பல திரை ரசிகர்களுக்கு நினைவில் நீங்காத பெயராக நிலைத்திருக்கும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு

திரைப் படங்களாகவும் இணைய தொடர்களாக இன்னுமும் வெளிவந்து கல்லாக் கட்டிக் கொண்டிருக்கின்றன. 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன் என்ற பழமொழி சில்க் ஸ்மிதாவுக்கு கன கச்சிதமாக பொருந்தும் ஒன்று.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings