மதில்மேல் பூனைபோல் தவிக்கும் சசிகலா.. குழப்பத்தில் தொண்டர்கள் !

0

சென்னை வந்த சசிகலா என்ன செய்தார் என்றே தெரியவில்லை. ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரை எல்லாமே சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இதற்கு பிறகு தான் ஒரு சில அரசியல் சந்திப்புகள் நடந்தன.

சசிகலா தொண்டர்கள் குழப்பத்தில்

அந்த சந்திப்புகளே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சமயத்தில், சசிகலா பிரச்சாரத்துக்கு செல்வாரா? மாட்டாரா? யாருக்காக ஓட்டு கேட்பார்? என்ன சொல்லி ஓட்டு கேட்பார், 

சசிகலா தேர்தலை எப்படி சந்திக்க போகிறார், அவருக்கு உள்ள சிக்கல்கள் என்ன மாதிரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. 

அவர்கள் சொன்னதாவது:

எத்தனை சீட் தந்தாலும் எங்கள் தகுதி அறிந்து சீட் தர வேண்டும் என்று பலமுறை சரத்குமார் சொல்லி வந்த நிலையில், சசிகலா உடனான திடீர் சந்திப்பு,

அதிமுகவில் இருந்து விலகி சசிகலாவுடன் இணைய சமக முடிவெடுத்துள்ளதாக அன்றைய தினமே கருதப்பட்டது. 

ஆனால், சசிகலாவை பொறுத்தவரை ஒரு சில அப்செட்டில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்களே சொல்கிறார்கள். 

தவிக்கும் சசிகலா குழப்பத்தில்

காரணம், அவர் எதிர்பார்த்த அளவுக்கு முக்கிய பிரமுகர்கள் அவரை சென்று சந்தித்து ஆலோசனை நடத்தாது தான். 

அதனால் தான், தானாக முன் வந்து தன் தரப்பை அனுப்பி ஒரு சில புள்ளிகளிடம் பேச்சு வார்த்தையை துவக்கி இருக்கிறார். இந்த நிலையில் நமது எம்ஜிஆரில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. 

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

அதில், இன்னும் 36 நாட்களே இடையில் உள்ளது. இதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் செய்து வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. 

இதில் எத்தனை இடங்கள் வெற்றி என்பது மட்டும் முக்கியமல்ல. எத்தனை சதவிகித வாக்குகள் பெற்றார் சசிகலா. 

மேலும் கழக ஆட்சியை அமைத்து காட்டினார் என்பதை மக்கள் பேசும் காலம் காலம் வெகு தூரமில்லை போன்ற வரிகள் உள்ளன.

நமது எம்ஜிஆர்

ஆனால், தமிழகம் முழுக்க சசிகலாவால் பிரச்சாரம் செய்ய முடியுமா? இது சாத்தியமா என்று தெரியாது. அப்படியே சென்றாலும் எந்த கட்சிக்கு வாக்கு கேட்பார்? பகிரங்கமாக அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய முடியாது. 

மேலும் அதிமுக தலைமையை குற்றம் சாட்டலாமே தவிர, அதிமுகவுக்கு ஓட்டு கேட்க முடியாது. ஆனால் அதிமுக புள்ளிகளை சந்திக்க முயல்வதும், அவர்களிடம் ஆலோசனை நடத்துவதும் தான் அவரது முக்கிய ஐடியா. 

பெண்களே வீட்டில் தனியாக இருக்கிறீர்களா?

இப்படி செய்தால், மக்களிடம் இருக்கும் செல்வாக்கை அதிமுக இழக்கும். அதன் தலைமை ஆட்டம் காணும். இதனால் நிறைய அதிருப்தியாளர்கள் சசிகலாவை தேடி வரலாம். 

அல்லது அதிமுகவுடன் மனக்கசப்பில் இருப்பவர்களும், சாதீய விசுவாசிகளும் சசிகலாவை நாடி வரலாம்.

இந்த தேர்தலில் எடப்பாடியார் நினைப்பது போலவே 60 சீட்களை மெஜாரிட்டியுடன் வென்று காட்ட வேண்டும் என்று சசிகலாவும் நினைக்கிறார்.  

அதனால், அதிமுக ஆதரவாளர்களிடம் மறைமுகமாக பேசுவதன் மூலம், அதிமுக தலைமையை டேமேஜ் செய்வதுடன், அதன் மூலம் அமமுகவின் ஓட்டு வங்கியையும் உயர்த்தும் யுக்தியை கையாளலாம். 

மதில்மேல் பூனைபோல் தவிக்கும் சசிகலா
அமமுகவில் பெரும்பாலும் அதிமுகவினரே என்பதால், இதை சொல்லியே பொதுச்செயலாளர் பதவியையும் குறி வைக்கலாம்.

இன்னொரு பக்கம், எடப்பாடியாரின் சட்டசபை அறிவிப்புகள் எல்லாவற்றுக்கும்  அரசாணை எப்போது வருமோ தெரியாது. ஆனால் இவை எல்லாம் வாக்குக்கான அறிவிப்பாகவே கருதப்படுகிறது. 

அந்த அறிவிப்புகளுக்கான அரசாணை வராவிட்டால், அதிமுக தலைமை மீதான நம்பிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

வாய் புண்களை சரி செய்யும் வீட்டு வைத்திய முறைகள் !

அதே போல, உட்கார்ந்த இடத்தில் இருந்தே, அனைத்தையும் சரி செய்யும் திறமை சசிகலாவுக்கு இருந்தாலும், அமமுகவா அல்லது

அதிமுகவா என்றும் சொல்லி கொள்ள முடியாமல் மதில்மேல் பூனைபோல் அவர் தவிப்பது போல தெரிகிறது என்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)