உடல் சூட்டால் சளி உருவாகுமா? எப்படி?

நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும்👈 உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

உடல் சூட்டால் சளி உருவாகுமா?

நம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள்👈

நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதனின் உடல் சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. 

நமது அறியாமையால் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது. 

உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது. கட்டிபட்டுப் போன சளியை👈 வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

உடல் சூட்டால் எப்படி சளி உருவாகும்

சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகியவற்றில், ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்துள்ளன. மேலும் பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகின்றன.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை, நம் உடல் கண்டு கொள்வதற்காக ஆன்டிபயாடிக், நொதிகள், புரதங்கள், பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து இருக்கின்றன. 

இயற்கையாக விளைந்த உணவுப்👈 பொருட்களை ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. 

ஆனால் ரசாயனப் பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் தான், அது சளியாக உருமாறுகிறது.

அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ, அதை போலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாக வெளியேற வேண்டும். 

ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, 👉மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறோம். 

இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது. மருந்துகள், உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது .

ரசாயனப் பொருட்கள்

மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் .

ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும், 👉மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.

இதை நம் உடலில் இருந்து வெளியேற்ற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், நமது உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவு தான்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை👈 அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும். 

உடல் சூடாக இருப்பதனால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும், வறட்டு இருமல் இருக்கும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகவே வெளியேற்ற வேண்டும்.

அப்போது தூதுவளை எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகமாகி வறட்டு இருமல் அதிகமாகுமே தவிர சளி குறையாது. 

உடல் சூடு

அந்த மாதிரியான நேரங்களில் நாட்டு மாதுளம் பழச்சாறு (மெல்லிய மஞ்சள் நிறத்தோலுடன் சேர்த்து) காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் சாப்பிட வேண்டும். 

இதனுடன் நாட்டு சர்க்கரை, வெல்லம் கருப்பட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். கழிவுகள் வெளியேற்றும் வரை சளி இருக்கும். அதிகபட்சம் ஓரிரு வாரங்களில் சரியாகி விடும். 

சில எளிய முறையில் நாம் சிறிது நிவாரணம் பெறலாம். உடல் குளிர்ச்சியாக இருப்பதால் உருவாகும் சளி பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். 

ஃபாஸ்ட்புட் தயாரிப்பின் அசிங்கமான செயல்கள் !

இதனால் உருவாகும் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர எந்த வித இரசாயன மருந்துகளோ எடுத்துக் கொள்ளக்கூடாது.

இதற்கு இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் சளி வெளியேறி விடும். 

சளி பிடித்து விட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுமே தவிர, இராசயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்க கூடாது.

சளித் தொல்லையிலிருந்து விடுபட சளி பிடித்திருக்கும் போது பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம்.

மூக்கடைப்பு நீங்க

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

பெண்களால் சபலப்படும் ஆண்கள் படியுங்கள் !

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெய்யை மார்மீதும், முதுகுப்புறமும் தடவ சளி, இருமல் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு, சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும் போது, சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு, உப்பு கலந்த சுடுநீரை தொட்டுத் துடைத்தால், மூக்கடைப்பு நீங்கும்.

Tags: