ஈரோட்டை கலங்கடிக்கும் டிப்தீரியா' நோய் - 2 குழந்தைகள் பலி !

0
கிட்டத்தட்ட 30 ஆண்டு களுக்கு முன்பு தமிழகத்தையே மிரட்டிய ஒரு கொடிய நோய் மீண்டும் வேகமாய்ப் பரவி, அது ஒன்று மறியாத இரண்டு சிறுவர் களைப் பலி வாங்கினால், கேட்பதற்கே பதற்றமா யிருக்கிறதா!... 
டிப்தீரியா' நோய்



ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்த இரண்டு மரணங்களும் பெரும் பரபரப்பை உண்டாக்கி யிருக்கிறது. `டிப்தீரியா' எனப்படும் தொண்டை அடைப்பான் நோய் தான் அது. 

போலியோவைப் போல இந்த `டிப்தீரியா' எனப்படும் நோயும் தமிழகத்தி லிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக சுகாதாரத் துறை நினைத் திருந்த வேளையில், ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் இந்த நோய் வேகமாகப் பரவிவருவது பகீர் கிளப்பி யிருக்கிறது.

இந்நோயானது 17 வயதுக்குட்பட்ட குழந்தை களைத்தான் பெரும்பாலும் தாக்கும் என்பதுதான் கொடுமையான விஷயம். தொண்டையில் சவ்வு போன்று உருவாகி, மூச்சு விட முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நோயை ஆரம்ப த்திலேயே கண்டுபிடிக்கா விட்டால் கொஞ்சம் சிரமம் தானாம்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி ஈரோடு மாவட்டம், கேர்மாளம் ஊராட்சி உருளி கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான மாதப்பன் என்னும் பழங்குடியின சிறுவனுக்குத் தொண்டையில் வலி ஏற்பட, சத்திய மங்கலம் அரசு மருத்துவ மனையில் பரிசோதித்திருக் கின்றனர். 
அங்கு சிறுவனுக்கு `டிப்தீரியா' அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. கோவை அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக் காக அனுப்பப்பட்ட சிறுவன் மாதப்பன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந் திருக்கிறான்.

அப்போதே, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், `தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென' மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தைப் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை.
`டிப்தீரியா' அறிகுறி



அதற்குள்ளாக, ஈரோடு மாவட்டம், மல்லியம்மன் துர்க்கம் மலைக் கிராமத்தைச் சேர்ந்த காசி பிரசாத் என்னும் 10 வயதான சிறுவனுக்கு `டிப்தீரியா' நோய் தாக்கி, சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை அளித்திருக் கின்றனர். 

எந்த சிகிச்சை யாலும் காசி பிரசாத்தைக் காப்பாற்ற முடியவில்லை. `டிப்தீரியா; நோய்க்கு ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது ஆளாக பலியாகிப் போனான். 

தொண்டை வலியென சிகிச்சை க்குச் சென்றவனை, பாதை யில்லாத அவனது சொந்த கிராமத்துக்கு வனத்தின் வழியே தொட்டில் கட்டி சடலமாகத் தான் தூக்கிச் சென்றனர்.
ஐஸ் சாப்பிட்டதால தொண்டையில சளி கட்டி யிருக்கும்னு நினைச்சோம்' என அவனுடைய உறவினர்கள் வெள்ளந்தி யாகச் சொல்லவும், அவர்களின் விழிப்புணர்வற்ற நிலை நம்மைக் கலங்கடித்தது. 

இதற்கிடையே சத்திய மங்கலத்தைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 16 குழந்தை களுக்கு `டிப்தீரியா' நோயின் அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தி யிருக்கிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாளி டம் பேசினோம். `மாதப்பன் என்னும் சிறுவன் இறந்த போதே அவர்களுடைய கிராமத்தைச் சுற்றி 5 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குழந்தை களுக்கு தடுப்பூசிகளைப் போட்டோம். 
எய்ம்ஸ், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி



காசி பிரசாத் உயிரிழந்ததை யடுத்து அவர் வசித்த மல்லியம்மன் துர்க்கத்தில் ஒரு மருத்துவக் குழு தங்கியிருந்து குழந்தை களுக்கு தடுப்பூசி போட்டு கண்காணித்து வருகின்றனர். 

மேலும், சத்திய மங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங் களுக்காக 21 மருத்துவக் குழுக்களை அனுப்பி குழந்தை களுக்கு தீவிரமாக தடுப்பூசி களைப் போட்டு வருகிறோம். இந்த நோய் மேலும் பரவாமலிருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.
எந்த சிகிச்சை யாலும் காசி பிரசாத்தைக் காப்பாற்ற முடியவில்லை. தொண்டை வலியென சிகிச்சைக்குச் சென்றவனை, நடைபாதை யில்லாத அவனது சொந்த கிராமத்து க்கு வனத்தின் வழியே கடைசியில் தொட்டில் கட்டி சடலமாகத் தான் தூக்கிச் சென்றனர்.

எய்ம்ஸ், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என நகர்ப் பகுதிகளில் பல்வேறு மருத்துவ வசதிகளைக் கொடுக்கும் அரசாங்கம், சமூகத்தின் கடைக் கோடியில் வாழும் மக்களுக்கு சாதாரண மருத்துவ வசதிகள் கிடைப் பதையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings