தேர்தல் வெற்றி குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளது. தமிழகத்தில் 40 பாராளுமன்றத் தேர்தல் (பாண்டிச்சேரி 1) மற்றும் 18 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் வரும் 18 -ந் தேதி நடைபெற இருக்கிறது.
இதற்காக அனைத்து கட்சிகளும் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளது.
அதன்படி பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 27 முதல் 33 தொகுதிக ளிலும், அதிமுக கூட்டணி 3 முதல் 5 தொகுதிக ளிலும், அமமுக 1 முதல் 2 தொகுதிக ளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அதேபோல் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
Thanks for Your Comments