தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை க்கும், 18 சட்டமன்றத் தொகுதி களுக்கும் தேர்தல் நடைபெற வுள்ளது. அதே போன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற, வரும் 29ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய நாளில் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Thanks for Your Comments