தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு !

0
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை க்கும், 18 சட்டமன்றத் தொகுதி களுக்கும் தேர்தல் நடைபெற வுள்ளது. அதே போன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு


இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற, வரும் 29ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய நாளில் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் படப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)