மாணவியின் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய பள்ளி மாணவர்கள் !

0
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வெண்டலி கோடு பகுதியில் மாணவி ஒருவர் டிப்ளமோ படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சஜின் மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரண் ஆகியோர், 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று டிப்ளமோ மாணவியை மிரட்டி யுள்ளனர். 
மாணவியின் ஆபாச படம்


இல்லை யென்றால் மாணவியின் படத்தை தவறாக மார்பிங் செய்து சமூக வலை தளத்தில் வெளியிடுவோம் என பயமுறுத்தி யுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் கூறவே பெற்றோர் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து, சஜின் தலைமறை வான நிலையில், மாணவன் சரணை போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். 

தொடர்ந்து விசாரனை நடத்திய போலீஸார், ஒரு வாரத்திற்குப் பிறகு கோவை மாவட்டத்தில் தலைமறை வாக இருந்த சஜினை கையும் களவுமாகப் பிடித்தனர். இன்று இருவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings