வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்யலாம்?

0
ஒரு நாளைக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்க,

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்யலாம்?
வெட்டி யாத்தான் இருப்போம். இல்லைன்னா நமக்கு உபயோக மில்லாத வேலையைச் செஞ்சிட்டி ருப்போம். 

‘சும்மா இருக் கிறது ஒண்ணும் ஈஸி இல்லை பாஸ்'னு வடிவேல் வாய்ஸ்ல நீங்க சொல்றது கேட்குது. 

இருந்தா லும் காலம் பொன் போன்ற துங்கிறதால அதை எப்படி நமக்கு உதவுற மாதிரி மாத்த லாம்னு பார்க்க லாமா..? 
ஈஷா அம்பானியின் மாப்பிள்ளை யார் தெரியுமா?
புத்தகம் படிக்கலாம்:

நேரத்தை நமக்கு உபயோக மாக மாற்று வதற்கு அருமை யான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. 

இதனால் உங்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரி க்கும். 
உங்களைச் சுற்றி யுள்ள உலக த்தைப் புரிந்து கொள்ள புத்தகம் உதவும். 

ஒவ்வோர் அனுபவ த்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. 

ஆனால், புத்தகம் வாசிப்ப தால் உங்களால் பல அனுபவங் களைப் பெற முடியும். 

ஆனால், அதைத் திரையில் படிப்பதை விட காகித த்தில் படிப்பது நல்லது.

இயற்கையை ரசிக்கலாம்:

அதிகாலை யில் பறக்கும் பறவை களைப் பார்த்தால், உங்கள் மனமும் பறப்ப தற்கான ஆற்றலை பெற்று விடும். 

மரங்களை ரசித்துப் பாருங்கள். உங்களு க்குள் பசுமை துளிர் விடும்.
மலைகளை ரசித்துப் பாருங்கள், உயரம் செல்வ தற்கான வழி தென்படும்.

உடற்பயிற்சி:

வேலை நேரங்களில் மூளைக்கு வேலை கொடுக்கும் நாம், மற்ற நேரங் களில் உடலுக்கு வேலை தர மறந்து விடுகிறோம். 

சும்மா இருக்கும் நேரங்களில் கூட சிறிய உடற் பயிற்சி களை மேற் கொள்ளலாம். 

வேலைகள் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற் பயிற்சி, நீங்கள் இழந்த புத்துண ர்ச்சியை மீட்கும்.

இசையைக் கற்றுக் கொள்ளுங்கள்:

`இப்பவே சும்மா இருக்கும் போது ஹெட்செட்ல பாட்டு தானே கேட்கு றோம்'னு சொல்கி றீர்களா... பாடல்கள் கேட்பது நல்ல பொழுது போக்கு தான். 

ஆனால், எத்தனை நாளைக்கு தான் கேட்க மட்டுமே செய்வீர்கள்? அதனால் இசையை இசைக்கக் கற்றுக் கொள்ளு ங்கள். 

கிட்டாரோ, கீபோர்டோ வாசிக்கக் கத்துக் கொள் ளுங்கள். ஏனென் றால், இசை உங்களை மட்டும் அல்ல, 

உங்களைச் சுற்றி இருப்பவர் களையும் மகிழ் விக்கும்.
ஏன் சென்டினல்கள் வெளியாட்களைத் தாக்குகிறார்கள்?
கற்றுக் கொள்ளு ங்கள்... பிறருக்கும் கற்று கொடுங்கள்:

நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல விஷயங் களைப் பிறரு க்கும் கற்று கொடுங்கள். அது உங்கள் அனுபவ மாக இருக்க லாம், 
உங்களு க்குத் தெரிந்த விஷய மாக இருக்க லாம். எதுவாக இருந் தாலும் பிறரு க்குக் கற்றுக் கொடுங்கள். 

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கி றார்களா, விளை யாடக் கற்றுக் கொடுங்கள்.

வயதான வர்கள் இருக்கி றார்களா, அவர்களி டமிருந்து அனுபவ த்தைக் கற்றுக் கொள்ளு ங்கள்.

உங்களு க்கும் பொழுது போகும் அவர்க ளுக்கும் உதவியாக இருக்கும்.

மனிதர்களோடும் கொஞ்சம் பேசுங்க பாஸ்!

டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்க த்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர் களை மறந்து விடுகிறோம். 

வேலை நேரத்தை விடுங்க, மற்ற நேரங்களி லாவது அவர் களிடம் பேசலாமே! `எப்படி இருக்க?' 

எனக் கேட்ப தற்குப் பதிலாக `பேசி ரொம்ப நாள் ஆச்சுல்ல' என்று தான் ஆரம் பிக்கிறது 

இன்றைய நண்பர் களின் தொலைபேசி உரை யாடல்கள். சும்மா இருந்தால், உங்க நண்பர் களுடன் ஒரு ஜாலி அரட்டை அடிங்க!

உதவி செய்யுங்கள்:

வீட்டிலோ, பொது இடங் களிலோ முடிந்த வரை பிறருக்கு உதவி செய்யு ங்கள்.
உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது. 

அலுவலக வேலை முடிந்து வந்ததும் வீட்டில் இருக்கும் வேலை களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ப்ளான் பண்ணுங்க பாஸ்:

அடுத்த நாள் என்ன வேலை பண்ண லாம்னு ப்ளான் பண்ணுங்க. 
வேலை பார்க்கும் நேரத்தை விட சும்மா இருக்கும் நேரத்தில் தான் நம் க்ரியேட்டிவிட்டி லெவல் அதிக மாகுமாம். 

அதனால் சும்மா இருக்கும் போது உதிக்கும் ஐடியாக் களைச் செயல் படுத்திப் பார்க்க லாமே!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)