புதிய உடையை அலசாமல் அணிந்தால் ஆபத்து !

நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப் படும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நச்சுக் கள் தேங்கி யிருக்கலாம் என

புதிய உடையை அலசாமல் அணிந்தால் ஆபத்து !
சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

புதிய உடைகளில் 100 இற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கி யிருப்பதாகவும், இந்த உடைகளின் சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதில், முக்கியமாக கினோலோன்ஸ் மற்றும் அரோமேட்டிக் அமைன்ஸ் என்ற இரு இரசாய னங்கள் பாலியஸ்டர் உடைகளில் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.
இந்த இரசாயனங்கள் டெர்மடிடிஸ் என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான பாதிப்பை உடலுக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

இவை புற்று நோய் ஏற்படுவதற்கும் உடலின் ஜீன்கள் மற்றும் வளர் சிதையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையலாம் என மேலும், தெரிவித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings