ஏன் மண் பானையில் தண்ணீர் ஜில்லென்று இருகிறது?

மண் பானையின் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், வெளியில் வெயில் பட்டையைக் கிளப்பும் போது மண் பானை தன்னுள் இருக்கிற நீரை அதிக அளவு குளிரச் செய்யும்.
ஏன் மண் பானையில் தண்ணீர்  ஜில்லென்று இருகிறது?
வெளிப் புறத்தில் வெயில் குறைவாக இருந்தால் மண் பானையில் உள்ள நீரும் குறைந்த அளவே குளிர்ந்து இருக்கும்.

கடும் கோடை யில் உடலுக்கு இதமாக, ஒரு மண் பானை நீரை நன்றாகக் குளிரச் செய்து கொடுக் கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வரப் பிரசாதம்?
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
மண் பானை சீக்ரெட்டின் எனர்ஜி ரொம்பவே சிம்பிள் தான்.

மண் பானைகளில் நுண் துளைகள் நிறையவே இருக் கின்றன. நீர் வைக்கப் பட்டிரு க்கும் மண் பானை களின் வெளியே முத்து முத்தாய் வியர்த்தி ருப்பது போன்று நீர்த்தி வலைகள் இருப்பதை நீங்கள் கவனித்தி ருக்கலாம்.

மண் பானையில் உள்ள சிறிய நுண் துளைகள் வழியே தான் இப்படி நீர் கசிகிறது. இந்த நீர் தொடர்ந்து ஆவி யாகிக் கொண்டே இருக்கிறது. இப்படி பானை யின் வெப்பமும், 

பானை யின் உள்ளே இருக்கும் நீரில் உள்ள வெப்பமும் தொடர்ந்து ஆவி யாதல் மூலம் வெளி யேற்றப் படுகிறது. எனவே நீர் குளிர்ந்த நிலை யிலேயே இருக்கிறது.
வெளிப் புறக் காற்றின் தன்மையைப் பொறுத்தும், நீர் குளிர்ச்சி அடையும் தன்மை மாறும்.
எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தலாமா? டிப்ஸ்!
பானையைச் சுற்றிலும், அதாவது வெளிப்புற வெப்பம் அதிக மாக இருந்தால், அதிக வெப்ப த்தின் காரண மாக நீர் ஆவியா வதும் அதிக அளவில் நடை பெறுகிறது. 

ஆவியாதல் மூலமாக வெப்பம் வெளியேற்றப் படுவதால் பானை க்குள் இருக்கும் நீர் மிகவும் குளிர்ச்சி யாக மாறுகிறது.

பனிக் கால த்திலும், மேலைக் காற்று வீசும் காலத்தி லும் காற்றில் ‘ஈரப்பதம்’ அதிகம் கலந்து இருக்கும்.

காற்று ஜில் லென்று வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகரித்தி ருக்கும் இந்தப் பருவ காலத்தில் நீர் ஆவி யாகும் அளவு குறை கிறது. எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.

ஆனால், இதற்காக மண் பானையில் நீண்ட நேரம் நீரை வைத்து குளிரச் செய்தால், அது அப்படியே ஐஸ் கட்டி ஆகி விடும் என்றெ ல்லாம் எதிர் பார்க்க முடியாது.
நவீன கால ஃபிரிட்ஜ்கள் போல ஒரேயடி யாகப் பற்களை நடு நடுங்கச் செய்யும் அளவுக்கு மண் பானை தண்ணீரை குளிர் விக்காது.
ஒரு மண் பானை எந்த அளவுக்கு நீரை குளிர் விக்கும் என்று கேட்டால், அறை வெப்ப நிலையை விட வெறும் 5 டிகிரி செல்சியஸ் குறையும் அளவு க்குத் தான் குளிர் விக்கும். 

வெளிப் புறத்தில் வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் என்றால் மண் பானையில் உள்ள நீரின் வெப்ப நிலை 25 டிகிரி செல்சியஸ் அளவு க்கு இருக்கும்.
Tags: